Posts

Showing posts from November, 2012

தெய்வங்கள்

தெய்வங்கள்

சின்னஞ் சிறு விதைகள்

இறக்கும் முன்னே எதிரியை மன்னித்துவிடு-ஆனால் துரோகியை நினைக்காதே                   ***** நன்றியை கடமைக்கு சொல்லாதே நன்றி உள்ளவனாய் இரு-அதுவே நன்மையாய் தொடரும் துணையாக                   ***** சோதனை  வரும்போது வேதனை கொள்ளாதே-அப்போது வீழ்த்திவிடும் உன்னை                  ***** நேர்மை இருந்தால் நிச்சயம் வெற்றி-ஆனாலும் பொறுமை வேண்டும்                   ***** மன்னிக்க தெரிந்தவன் மனிதனாகலாம்-ஆனால் கோழையாய் வாழ்ந்திடாதே                    *****

தூக்கம் போச்சு

இன்னைக்கு ஏனோ தூக்கம் போச்சு ஆனா துயரமில்லை ஏக்கமும் இல்லை ஏனோ தெரியலை தூக்கம் போச்சே கொசுவும்  இல்லை பசிக்கவும் இல்லை ஏனோ தூக்கம் போச்சு

பூ மாலை

வண்டுண்ட தேன் வழிந்தோடி  செல்ல நண்டு குழம்போடு நங்கையும் காத்திருக்க கண்டவுடன் காமம் கவர்ந்திழுக்க அவனை கட்டியணைக்க நினைத்தாள் பௌர்ணமி  நிலவில் பனிமழை வெளியில் குளிரிலும் சூடாக குமரியின்  தேகம் பருவத்தின் தாகம் அவளுக்கும் மோகம் காத்திருந்த கன்னியை கண்டவுடன்  தீண்டாமல் கண்ணிமையை கவ்வி பெண்மையை தூண்டினான் பேரமுதை தூண்டினான் தேகத்தை  சூடாக்கினான் திசையெங்கும் நகர்த்தி தீண்டி தீண்டி யாடினான் மாதுலையுள் துளைத்து மீண்டும் மீண்டும் மகிழ்ந்தான் தேகத்தை தென்றலாய்  நுகர்ந்தான் இறுதியாய்  தீயை  உணர்ந்தான்

தமிழை மணந்து தழுவி மகிழ்கின்றேன்

தடம்கேட்டும் தவிக்கின்ற இந்நாளில் தானாக முன்வந்து வழி சொல்லும் புடம்போட்ட நண்பர்களாய் புறப்பட்டு-என் இடம்தேடி  வாழ்த்தும் நண்பர்களே தென்றலாய் வந்து தீண்டியவரும் தினமும் என்னை நாடிவரும் அன்றலர்ந்த பூவைப்போல சூடி-நாளும் அன்பாக நட்பு சொல்லும் அன்பர்களே விதையாக தொடரும் எனது கவிதைகள் விரைவில் முளைக்க துணைபுரிந்து விளையாடும் இலக்கிய மேடைதனில்-நானும் விரைவாக விழுந்து எழ விரும்புகிறேன் துணையாக இருந்து வழி சொல்லி தினமும் என் கவியை படித்து தெரிகின்ற தவறை  தினம் சொன்னால் -நான் திகட்டாமல் ஏற்பேன் திருத்திக் கொள்வேன் தமிழோடு விளையாடி தனியாக உறவாடி துளியாக மனதில் துளிர்கின்ற சிந்தனையை தரணியோரும் படித்து வாழ்த்த-தமிழனாய் பிறந்ததே பேரின்பம் ஆனந்தம் உற்சாகம் வளமாக வேண்டும் வரைகின்ற கவிதை வாழ்நாளில் தோன்றும் நிறைவான  நினைவே தளமாக எண்ணி தாங்கி கொண்டே-உயிராக தமிழை மணந்து தழுவி மகிழ்கின்றேன்

மகிழ்ச்சியான வாழ்வுக்கு

மகிழ்ச்சியான வாழ்வுக்கு மனிதனை நேசி மனிதநேயம் கொண்டு மனநிறைவாய் யோசி நல்லதையே பேசி நாணயமாய்  செய்து- நட்புடன்  நல்லிணக்கம் உள்ளவனாய் நல்லோரை  யாசி மரங்களை வளர்த்தால் மழை பெறலாம் மனதை வளர்த்தால் வளம் பெறலாம் இழைதலை கொடியால் நிழல் பெறலாம்-எப்போதும் இனிமையாய் பேசினால் இன்பம் கிடைக்கலாம் உழுதவன் உழைத்தால் உணவு உண்ணலாம் உண்மையாய் நடந்தால் உள்ளம் மகிழலாம் குயவன் செய்வதுபோல் வாழ்வை-குணமாக குடும்பம் தழைக்க வழி செய்யலாம் காற்றும் நீரும் மாசு படாமல் காலை எழுந்ததும் தூசு இல்லாமல் நேசம் தழைக்க நிம்மதி கொடுக்க-தமிழ் பாசம் பொங்கம் பண்புடன் வாழ்வீர்

பாக்கெட் மணி கொடு

கல்லூரிக்கு போகணும் காசு கொடு கைசெலவுக்கு வேணும்  காசு கொடு பேப்பர் வாங்க பேனா வாங்க-நண்பனோடு ஆட்டோ பேருந்தில் செல்ல காசுகொடு புதுப்படம் பார்க்கனும் பிறந்த நாளுக்கு படிக்கும் நண்பனுக்கு பார்ட்டி கொடுக்கணும் பெட்ரோல் போடணும் பழுது பார்க்கனும்-காசுகொடு  பஞ்சர் ஓட்டனும் பார்கிங் செய்ய பரீட்சை கட்டணம் பதிவு கட்டணம் கேண்டீன் போகணும் பிச்சா திங்கணும் படத்துக்கு போகணும் பந்தா காட்டனும்-சேமிப்பு கணக்கில் போடணும் காசு கொடு ஆணும பெண்ணும் அழகை ரசிக்க நானும் போடணும் நல்லதாய் தெரியணும் சென்ட் வாங்கணும் சிறப்பாய் இருக்கணும்-செலவுக்கு நாளும் காசுகொடு அப்பா காசுகொடு

அவசரப் பயணம் அவசியமா?

அவசரம் எல்லோர் மனதிலும் அவசரம் ஆட்சியாளருக்கும் அரசியல்வாதிக்கும் பேச்சு சுதந்திரம் பேணவேண்டி அவசரம்-மேடை பேச்சு எல்லாம் தனி ரகம் அவசரம் இருப்பவன் பணத்தை மறைத்துவைக்க இடம்தேடி பதுக்கும் வேலையில் அவசரம் ஏழைக்கு ஏழ்மை நீங்க அவசரம்-அன்றும் வேலை செய்த கூலிவாங்க அவசரம் எல்லாம் இருதும் வசதி இருந்தும் எதிரியை  நினைத்து நிம்மதி இழந்து பொல்லா  பகையால்  பொறுமைன்றி-உயிர் கொல்லும் நிலை கொடுமைக்கும் அவசரம் வாகனம் ஓட்டும் நேரம்கூட அவசரம் வாழ்க்கை மறந்து மதியும் இழந்து வேகமாக  ஒட்டி செல்லும் அவசரம் -சாலை விபத்தில் உயிர்ப்போவதிலும் அவசரம்

மறுபிறவி அறிந்தோர் யாரோ?

மறுபிறவி அறிந்தோர் உளரோ மறுபடியும் மனிதனாய் பிறப்பீரோ சிறுதவரிறின்றி சிந்தனை செய்வீரோ-சிந்தையில் சீரான மனிதனாய் வாழ்வீரோ மகிழ்வீரோ நேர்மையான அன்பும் நாளும் கொண்டு நிகரில்லா நல் பண்புடன் நடந்து ஊர் போற்றும் உன்னத மனிதனாய் -உலகில் உள்ளம் மகிழும் நால்லோர் ஆவிரோ மனிதநேயம் மக்கள் நல்வாழ்வு மானுடம்செழிக்க மகத்தான சேவை இயற்கை நெறியில் இன்முகத்தோடு-மனதில் இன்பம்  பெருகி எளிமையாய் இருப்பீரோ இயற்கை வளம் சிறக்க வைப்பீரோ இல்லாத மரங்களை புதிதாய் படைபீரோ செயற்கையாய் மனிதனை படைபீரோ-இதயம் சொல்வதை கேட்டு நேர்மையாய் நடப்பீரோ வானமும் பூமியும் வாழும் உயிர்களும் நிலவும் சூரியனும் சுற்றும் கோள்களுக்கும் சுதந்திரமாய்  நடப்பீரோ சொந்தமென -போரில் சுட்டு கொன்று சுயமிழந்து சாவீரோ இப்பொழுதே மாறி இன்றைய வாழ்வை இன்முகமாய் ஏற்று கற்பனையில் வாழாமல் கிடைத்ததை கொண்டு தப்பேதும் செய்யாமல்-வாழ்வில் தடம்மாறி செல்லாமல் இப்பிறவியில்  வாழுங்கள்

கொசுவே நீ செய்வது சரியா

அறிவுள்ள ஆறு நாள் எதிரியே அன்பாக   நீ முத்தமிட்டாலும் அலறுகின்றனர் எல்லோரும் அடிவாங்கி அமரனாகும் -உன்னை அடிக்காமல் விடுவோர் உண்டோ செடி கொடியில் வளர்ந்தாலும் சாக்கடையில் பிறந்தாலும் படைநடுங்கி ஓடுகிறது - பயந்து தொடை நடுங்குது எல்லோருக்கும் எதிரியை  வீழ்த்த  எனக்கு உதவ எழுநாள்  தாண்டியும் வாழ்வாயா ஏவியதும்  உடனே நீ  செய்வாயா-எமனாக காத்திருந்து அவனை கொல்வாயா அதிசய பிறவி நீ அன்பில்லா பகைவன் நீ கத்தியின்றி யுத்தம் செய்யும்-நீ கலிகால புதிரும் நீ உன்னை கொல்ல உலகமே முயலுது உயர்ந்த மருந்து புதிதாய் கிடைக்குது என்ன செய்தும் பயனில்லை  -உன்னால் எனக்கும் கூட வருத்தம் உன்மேலே முப்படையும் தோற்கும் உன் முன்னே முடிவுரை எழுதும் துயரமாய் நின்னே சத்திழந்தோரை \தானே நீ-சாகடிக்கிறாய் சரியா   நீ செய்வது  சரியா

விக்கல்

விக்கல் வருவது எதனால்? விரும்பியவர் நினப்பதாலா? தூக்கம் வருவதாலா? தொண்டையில் பிரச்சனையாலா? இதயம் பேசுதலா ? இல்லை எதனால் ? விக்கல் வருவது எதனால் ?எனது வினாவுக்கு பதில் சொல்லுங்களேன்

நீ பேசாத நாட்களில்

நீ பேசாத நாட்களில் நான் துடித்துகொண்டிரிக்கிறேன் ! உன்னை காண்பதற்கு! நாட்களை இழந்து கொண்டிருக்கிறேன் நான் சாவதற்கு ! என்னவென்று சொல்லிவிடு , நிம்மதியாக உயிர் பிரிவதற்கு இன்னும் ஏன் மௌனம் சொல்லிவிடு இதயத்தில் தங்கிவிடு இமைகளை மூடிகொள்கிறேன்

மனிதனா? மனிதமா?

மனதும் மனதும் சேர்ந்தால் -காதலாம் மனமின்றி தவித்தால் மோதலாம் விபத்தென்றால் விதியென்று சொல்வார்-மோதலால் அபத்தமாய் வேறு சாதிஎன்பர் ஆயிரம் தூரம் தாண்டினால் -அய்யய்யோ அருகில் ஏனோ மௌனம் அந்தகாலம் மாறவில்லை மனிதன்-ஆனாலும் மாறிவிட்டான் அறிவியல் ஆனந்தமாய் சொந்தபந்தம் யாருமில்லை  சொல்லிக்கொள்ள-நகரில் சொந்தமில்லை பந்தமில்லை

பனிக்காலம்

Image
கணவன்   கார்த்திகை மாத பணி கடுமையால்-குளிரில் கணவனை  நோக்கும் இளமையாய் கையிலிருந்த காசை கரியாக்கியதால் -கடனோடு செய்வதரியாமல் சினம் கொள்வார் இம்மாதம் மனைவி கண்விழித்துப்  பார்த்தும்க் கதிரவனை காணாது -நேரம் காலம் கடந்து அதிர்ச்சியாய் ஏழத்தோன்றும் இன்னும் அருகில் இணைந்து படுக்க-இன்முகம் பண்ணும் சேட்டைகள் அதிகம் ஏங்கும் கடவுள் பக்தர் சாத்திரம் படித்து நேர்த்தியாய் திரு-சன்மார்க்கம் போற்றிட சொல்லும் பெருமையாய் ஆத்திரம் அடங்க  அகிலம் போற்ற-கோவில் சத்திரம் செல்வர்  சாமியிடம்  சரணடைவர் காதலர்கள் புது துணியோடு  புறப்படும்  இளசுகள் -சினிமா பல புதிய படம் காண்பர்  இணையாக தனிமையில் தவிக்கும் இளம் சிட்டுகள்-தடுமாறும் இனிமை தேடி இரவையே தவிர்க்கும் சிறுவர்கள்  படிக்க மறுக்கும்  பணியால் உறக்கம்-எழுந்து பாடம் படிக்க குளிரில் நடுங்கும் தேர்வு தொடங்கும் பயம் கொள்ளும்-தேர்வெழுத தினமும்  உண்ண மறுக்கும் பட்டினியாய்

கவியாழி : நீ மனிதனாய் யோசி

கவியாழி : நீ மனிதனாய் யோசி : மனித பிறப்பே மகத்தானது மகம் பிறந்ததும் வியப்பானது திசை எங்கும் நோக்கி மகிழ்ச்சி திளைத்திட்ட பெற்றவர்கள் உழ...

கவியாழி : இமை மூடி பாருங்கள்

கவியாழி : இமை மூடி பாருங்கள் : இமை மூடி பாருங்கள் இளமையை இனிதாக்கி மகிழுங்கள் முன்போல் சுமையாக எண்ணாமல் சுகமாக-ஆற்றல் சீர்நிறுத்தி சீர்தூக்கி பாருங்க...

மகிழ்ச்சியான தீப திருநாள்

Image
மகிழ்ச்சியான தீபாவளி -2012 --- மகிழ்ச்சியான நேரமிது மக்களின் நாளிது புகழ்ச்சிக்காக பொருள் சேர்க்கும் நன்னாழிது இகழ்ச்சியாக பேசியோரும் வாழ்த்தும்நாள்-எல்லோரும் நெகிழ்ச்சியாக கொண்டாடி மகிழும் தீபத்திருநாள் ஏழைப் பணக்காரன் என்றதொரு வித்தியாசம் எங்கும் இல்லாமல் மகிழ்ந்திடும் திருநாள் எல்லோரும் ஏற்று இனிதாய் போற்றி-தீபாவளியை எளியோரும் விரும்பும் இனிய பெருநாள் எப்போது விடியுமென்று எல்லோரும் காத்திருக்க இளசுகள் ஓடிவந்து பட்டாசு வெடிச்சிருக்க குப்பென்ற இருட்டு கொஞ்சமாய் மறைஞ்சிருக்க-சேவல் கூப்பாடு கேட்காமல் எழுந்திருக்கும் ஒருநாள் புத்தாடையில் புதுமஞ்சள் சாந்திட்டு உடுத்திட்டு புதுநாளைக் கொண்டாட மாப்பிள்ளை அழைத்திட்டு வித்தாரம் பேசாமல் வீடெங்கும் கூறாமல் – சண்டை விநியோகம் செய்யாத தீபாவளி திருநாள் காசுபணம் கரியாக்க கடனாக வாங்கியேனும் ஓசி வாங்காமல் உழைத்து வைத்திருந்து புதுத்துணி வாங்கும் பொல்லாத தீபாவளி-இன்று இளசுபெரிசு எல்லோரின் இனிமையான திருநாள் கடந்த நாட்களில் பட்ட கஷ்டமெல்லாம் காணாது மறந்து இஷ்டமாக விரும்பும் எல

பிணங்களை பேச வைக்க முடியுமா..? ஒரு பகீர் தகவல்.! - புதிய உலகம்.கொம்

பிணங்களை பேச வைக்க முடியுமா..? ஒரு பகீர் தகவல்.! - புதிய உலகம்.கொம்

சித்தனே போற்றினான்!

Image
    சித்தனே போற்றினான் சிந்தையில் எற்றித்தான் அத்தனை அரிதான வித்தையை செய்திட்டான் கற்றதை மற்றோருக்கு கற்பித்து மாற்றினான் கண்டத்தில் தமிழனை கருத்தாக்கி மெருகூற்றினான் பக்தனாயும் இருந்தான் படைக்கவும் செய்தான் புத்திமாறாது தவம் பொழுதும் செய்தான் சத்தமும் அவனே சந்திர சூரியனும் சரீரமான நீரும் காற்றும்  சிவனே எத்தனை  கடலும் ஏழுலகமும் நீயே அப்பனே சிவனே அனைவரையும் [போற்றி நித்தமும் சிவமே நினைவெல்லாம்  சிவனே பித்தனே  உன்னை பொழுதும் நினைவேனே ஓம்  நமசிவய ஓம்  சிவ சிவ

இமை மூடி பாருங்கள்

Image
இமை மூடி பாருங்கள் இளமையை இனிதாக்கி மகிழுங்கள் முன்போல் சுமையாக எண்ணாமல் சுகமாக-ஆற்றல் சீர்நிறுத்தி சீர்தூக்கி பாருங்கள்  ஆனந்தமே அந்த நாட்கள் மீண்டும் வராது ஆனாலும் இன்று போல்  நாளை தேனாக சொல்லமுடியாது- இருந்தும் மான் ஆகா விட்டாலும் மயிலாகலாம் சொந்த நாட்கள் சொல்லி வந்தநாட்கள்  அந்த கால அருமையான தருணங்கள் பந்தமானது பாசமானது  அன்பினால்-இன்று கந்தலானது  கனவானது  சொந்தமே கூட நட்பும் வேண்டும் நாளும் பகிர நல்லன்பும் வேண்டும் பேரப்பிள்ளை பேச்சை கேட்டு பாடவேண்டும் பின்-மகிழ்ச்சி பரவசத்தால்  பாட்டியோடும் ஆடவேண்டும் ஆயிரம் கதை வேண்டும்  அவர்களுக்கு ஆனந்தமாய் சொல்ல வேண்டும் தினமும் பாராத பிள்ளையிடம் பாசம்போல் -நடிக்கும் பண்பும் வேண்டும் ஆறாத ஏக்கத்தால் பேரன்  பேத்திக்காக பிள்ளையிடம் பேரன்பாய் இருப்பது போல்  வேண்டும் பிரியமுடன்  மருமகளிடம் சிரித்து-பாசத்திற்கு  பிரிவின்றி கிடைத்திட பழக வேண்டும்

தாழ்வான பகுதிக்கு தடுமாறி வந்திட்டேன்

Image
வாழ்வோரை பார்க்க வரவேண்டு மென்று ஆழ்வான காற்று என்னை துரத்தி நோய்போல் என்னை நிறுத்தியதால்- ஏனோ தாழ்வான பகுதிக்கு தடுமாறி வந்திட்டேன் இதுவும் எனக்கு மகிழ்ச்சிதான் இருந்தும் மனதில் வருத்தம்தான் கடலில் மூழ்கி இறந்துவிட்ட அய்வரை-மரண துயரில் மூழ்கிட செய்தது நானல்ல எவ்வளவோ ஆழத்தையும் நான் நீந்தினேன் எண்ணில்லா பகுதியை தாண்டி சென்றேன் தப்பிதமாய் வாழ்ந்ததில்லை தறிகெட்டு-கரையில் ஒப்பில்லாது வாழ்ந்து ஒய்வாகதான் உள்ளேன் நிலப்புயல் எனக்கு நிம்மதி தர கரைநோக்கி என்னை தள்ளியதால் நானே கவனிப்போர் நிறைந்து காண்கின்றேன்-இன்றும் அகிலத்தார் பார்க்க எனக்கும் மகிழ்ச்சிதான்

நீ மனிதனாய் யோசி

Image
மனித பிறப்பே மகத்தானது மகம் பிறந்ததும் வியப்பானது திசை எங்கும் நோக்கி மகிழ்ச்சி திளைத்திட்ட பெற்றவர்கள் உழைத்திட்ட மணித்துளிகள் உருமாறி  போனதற்காய் இளைப்பாறி இருந்திட்டார் இலைப்பூவாய் வளர்த்திட்டர் குலை சிதைத்து விட்டதானால் குடும்பமே நடுத்தெருவில் பிழைசெய்தவர்  யார் புரியாது  ஏன் செய்தீர் தழைக்குமா உன் குடும்பம் தனியாக யோசித்துப் பார் சாதி  சண்டைகள் தேவையா சரிகின்ற உயிர்கள் நியாயமா சாதி சண்டையால் சங்கடத்தை சதியாக்கும் சண்டாளன்  மடிவானா மனிதனை  நேசி மகிழ்ந்து மனிதனாய்  சற்று யோசி

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more