Posts

Showing posts from February, 2013

தெய்வங்கள்

தெய்வங்கள்

கவியாழி : இன்கம்டாக்ஸ் நிறைய போட்டு

கவியாழி : இன்கம்டாக்ஸ் நிறைய போட்டு : விண்ணில் ஏவிட்ட ராக்கெட்டு விடையொன்று சொல்லுது மெனக்கெட்டு ரயில்வே தந்திட்ட பட்ஜெட்டு-ஏழையின் ராத்திரி தூக்கமும் போயிட்டு இன்னும்...

இன்கம்டாக்ஸ் நிறைய போட்டு

Image
விண்ணில் ஏவிட்ட ராக்கெட்டு விடையொன்று சொல்லுது மெனக்கெட்டு ரயில்வே தந்திட்ட பட்ஜெட்டு-ஏழையின் ராத்திரி தூக்கமும் போயிட்டு இன்னும் ஏதோ வருதாமே இந்த ஆண்டு பட்ஜெட்டு இருக்கிறதையும் புடுங்வாங்களோ-இனி இன்கம்டாக்ஸ் நிறைய போட்டு ஊழியனுக்கு  மூணுமாசம் உடனடி டாக்ஸ் பிடித்திட்டு வருத்தத்தோட வருவதோ -பயந்து வீட்டுக்கு மிட்நைட்டு கண்ணிலே தெரிவதில்லை கடன்காரன் ஹார்ட்பீட்டு கண்டதெல்லாம் பேசுறானே-வட்டி கட்டினாலும் குட்டிப் போட்டு இத்தனையும் கட்டிபுட்டு இல்லறத்துக்கு வருது வெட்டு இல்லாததும் பொல்லாததும்-வரும் இனிமே வீட்டுல திட்டு

கவியாழி : புன்னகை செய்யுங்கள் புத்துணர்வாய் வாழுங்கள்

கவியாழி : புன்னகை செய்யுங்கள் புத்துணர்வாய் வாழுங்கள் : முன்மண்டை வழுக்கைதனை முகமலர்ந்தா ஏற்கிறோம் முக சுருக்கமதையும் தவறாய் முதிர்ச்சியாக எண்ணுகிறோம் சொல்வளர்க்கும் கவிதையினை சொல்லி தந்தா ...

புன்னகை செய்யுங்கள் புத்துணர்வாய் வாழுங்கள்

முன்மண்டை வழுக்கைதனை முகமலர்ந்தா ஏற்கிறோம் முக சுருக்கமதையும் தவறாய் முதிர்ச்சியாக எண்ணுகிறோம் சொல்வளர்க்கும் கவிதையினை சொல்லி தந்தா எழுதுகிறோம் சொல்லவேண்டிய கருத்துக்களை சொல்லித்தந்தே வாழுகிறோம் கவிதை படைத்து தினமும் கடையில் விற்பதில்லை காசுக்காக நாளும் கையேந்தி எழுதுவதில்லை உள்மனதைப் பாருங்கள் உணர்ச்சிதனை கேளுங்கள் நல்லொழுக்கம் படித்து நற்றமிழைக் காணுங்கள் புன்னகை செய்யுங்கள் புதியதாக எண்ணுங்கள் புகழுக்காக அன்றி புத்துணர்வாய் வாழுங்கள்

நம்பிக்கை வார்த்தைகளை கூறுங்கள்.......

Image
பிரச்சனை என்னவென்று கேளுங்கள் பிள்ளையுடன் நண்பனாக பழகுங்கள் நல்லவற்றை நாலுமுறை பேசுங்கள்-அன்பாய் நம்பிக்கை வார்த்தைகளை  கூறுங்கள் உள்ளபடி வாழ்வுதனை வாழ்வதற்கு உண்மையாக தகுந்த வழிகாட்டுங்கள் சொல்லுவதை சரியாக சொல்லுங்கள்-பிறர் சொல்லும்படி நீங்களுமே வாழுங்கள் கஷ்டத்தை மட்டுமே சொல்லாமல் கடன் வாங்கி வந்தவழி கூறுங்கள் இல்லையென்று எப்போதும் -சொல்லாமல் இருப்பதை எடுத்துரைத்து காட்டுங்கள் நல்லவற்றை நாடவேண்டி எப்போதும் நயமாக நல்லொழுக்கம் புகட்டுங்கள் நாலுபேர் மத்தியிலே உயர்வாக -வாழ்க்கை நம்பிக்கை வார்த்தைகளை விதையுங்கள்

பருவமறியா பாலகன்.பாலச்சந்திரன்

Image
  பருவமறியா பாலகனை கொன்ற இருள் மனது கொலைகாரன் மடிவானா மக்களை இழப்பானா-வீட்டில் இடிவிழுந்து இலங்கையில் இறப்பானா குடிகெட்டு மதியிழந்து திரிவானா குடும்பமே பைத்தியமாய் அலைவாரோ இடுகாட்டில் தலை புதைத்து-தவறால் சுடும் தீயில் விழுந்து மடிவானா பிணம் தின்னும் குணம் மாறி  மனம் திருந்தி வருந்து வானா மக்களை பார்த்து மண்டியிட்டுக்-கதறி மற்ற நாளையும் சிறையில் கழிப்பானா ஈர நெஞ்சமுள்லோர்அவன் கோர முகத்தை கிழித்து  தீரத்தீர அடித்து துரத்தி-கோழையின் குடும்பமே அழியாதோ மடியாதோ

பேராசைப் பெரும் நஷ்டம்

             "  பேராசைப் பெரும் நஷ்டம்"               அதிகமா ஆசைப்படுவதை பேராசை என்று சொல்வார்கள். இதைப் பற்றி நிறைய நீதி கதைகளும் கட்டுரைகளும்  உதாரனங்களும் உண்டு. அளவுக்கதிகமாக ஆசைபடுவதும் பொருள் சேர்த்து வைப்பதும்  தவறு. இங்கு தவறான வழியில் பணம் சேர்த்த அரசியல்வாதிப் பற்றியே குறிப்பிடுகிறேன்                எல்லா மதமும் இதைப்பற்றி தவறாகவே சுட்டிக்காட்டுகிறது  இருந்தாலும் நம்மில் எத்தனைபேர் கடைபிடிக்கிறார்கள் மிக சொற்பமான சிலரே.பலபேர் இதைப்பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை .பணம் சேர்ப்பதிலேயே மேலும் மேலும் குறியாய் அக்கறையாய் இருப்பார்கள்         இவ்வாறானவர்கள் நேர்வழியில் சேர்த்திருக்க மாட்டார்கள் தவறான வழியே தடமாக எண்ணி லஞ்சம், கலப்படம், பதுக்கல், வட்டி வசூலித்தல் , வழிப்பறிக் கொள்ளை,  ஏமாற்றிப் பணம் பறித்தல் போன்ற தவறான வழியிலேயே சேர்த்திருப்பார்கள் இதையே தொழிலாகவும் செய்வார்கள்.        அவசியமற்ற செலவுகளும் ஆர்பாட்டம் கேளிக்கையுடன்  சமூக அக்கறை உள்ளவர்களாய் பொதுமக்களிடம் காட்டிக்கொள்வார்கள்.ஏழைகளிடம் பிடுங்கியதை ஏழைகளுக்கு தர்மம் செய்வதுபோல் நடிப்பார்கள்.அதற்காக விளம

காதலி ! காதலா ! காதல்!

Image
ஒருதலைக் காதல் ஜெயித்ததில்லை உணர்வுள்ள காதல் தோற்றதில்லை மறு பிறப்பு மீண்டும் வருவதில்லை-காதல் மறந்து போனதாய் சரித்திரமில்லை மனம் பார்த்து வருவதே காதல் மிகையான பணம் பார்த்த தல்ல குணம் மாற்றியும் வரலாம்-காதல் கொள்கை உறுதி யோடும் வரலாம் அவசர காதல் அழிந்ததுண்டு அவசிய காதல் முறிந்ததுண்டு ரகசிய காதல் ஜெயித்ததில்லை-காதல் ரசனை மட்டுமே தகுதியில்லை மனதை மாற்ற போராடு மகிழ்ச்சியோடு அதை நீ நாடு புதிதாய் செய்வோர் புனிதத்தை -அன்பாய் புகழ்ந்து வாழ்த்தி  நீ சொல்லு பிரியும் காதல் தொடர்ந்ததில்லை பிரிக்கின்ற காதல் அழிவதில்லை புரிகின்றோர் காதல் முடிவதில்லை-வெற்றி புரிந்தோர் அதையும் தடுப்பதில்லை

இன்றும் உன்னைத் தேடுது

ஏங்கி ஏங்கியே என் இளமையை கழித்தேன் இன்னும் வேண்டியே-அதனால் இன்றும் நான் தவித்தேன் கனவினால் தினமும் தூங்க மறுத்தேன் காதலால் உன்னை -அங்கும் தேடியே  அலைந்தேன் சின்ன குழந்தைகள் சிறைபிடிக்குது செல்லமாய் கொஞ்ச-மீண்டும் உள்ளம் ஏங்குது ஆசை ஏனோ அடங்க மறுக்குது அணைக்க வேண்டியே-இன்றும் உன்னை தேடுது நீ வருவாயோ நிழல் தருவாயோ பூவுடன் வந்து-என்னை போர் தொடுப்பாயா

"மனிதமே" இறந்ததோ?

Image
மனிதமே இறந்ததோ மனசாட்சி அழிந்ததோ எங்கெங்கு காணினும் எண்ணற்ற கொலைகள் எல்லோரும் தூற்றும் கற்பழிப்புப் பிழைகள் வசதி வேண்டியே வழிப்பறிக் கொள்ளை வார்த்தை மாறியே வாழ்க்கைப் பயணம் பிழை செய்வதே பெருமையாய் போற்றுதல் ஊழலில் சேர்த்ததை ஒளிவின்றி செலவழித்தல் கள்ளச் சந்தையில் காசு பணம் சேர்த்தல் கலப்படத்தை நேர்த்தியாய் கைதொழிலாய் செய்தல் இயற்கையே மரித்ததால் இயலாமை தொடருதோ எங்கே போனது மனித நேயம் எப்படி வாழும் நீதியும் நியாயமும் சற்றே யோசிப்பீர் சந்ததிக்கு வாழ்வளிப்பீர்

இன்னும் நீ அழகி !

Image
இந்த வயதிலும் இன்னும் நீ  அழகி ! இளமை மாறாத-இன்றும் இன்பந்தரும் அருவி. பெற்றவன் மகிழும் சித்திரப் பெண்ணே ! இரவில் மிளிரும் -எதிரில் தெரியும் நிலவும் நீ ! என்னை தழுவும் இதமான தென்றலும் நீயே ! மாசியின் மகளே மாற்றம் தரும் பகலேஒளியே ! பார்ப்பவர் வியக்கும் பருவம் தாண்டிய அகலே! கனவில் கண்டு கண் விழித்ததும் மறைந்து சென்றதேன் ? மீண்டும் வருக ! மீதமும் தருக !!

அவளுக்கு அப்படியொரு ஆசை

......... அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது .             அதிகாலை வேளையில் கடற்கரை அருகில் அமைதியான சூழலில் காலாற நடக்க வேண்டுமென்று...           அப்போது அவன் கேட்டான் ,ஆமா  என்னஇங்கு எதுக்கு அடிக்கடி வரீங்க?            அதையேன் இப்போ கேட்கிறீங்க? அவள் சொன்னாள் .           உடனே சுதாரித்தவளாய் அங்கே பாருங்க மீன்களெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாய் துள்ளி விளையாடுகிறது          அந்த அதிகாலையிலும் நிலவும் சந்தோசமாய் வெளிச்சத்தை கடலில் வீச இனிமையான கடல் காற்றும்  மட்டுமே அவளுக்கு சந்தோசமாய் இருந்தது.அவளுக்கு அப்படியொரு ஆசை           நான்  கேட்டேனே பதில் சொல்லவில்லையே?          உங்க பேரு என்ன எந்த ஊரு? சற்றே நிதானமாய் அவனை உற்று நோக்கினாள் ஏன்?     இல்ல தெரிஞ்சுக்கலாமே என்றுதான்,தினமும் அந்த முதியோர் இல்லம் வரீங்க அங்குள்ளவங்களிடம் ஆதரவா பேசுறீங்க அதனால் அதனால் ? நான் என் ஆத்ம திருப்திக்கு மட்டுமல்ல அங்கு எனக்கு வேண்டியவங்க இருக்காங்க அதுக்குதான் நான் வருகிறேன்       ஆனால் அவள் உண்மையை மறைக்கிறாள் என்பது அவனுக்கு தெரியும்.          எனக்கு உறவென்று சொல்லிக்கொள்ள ஒருவ

அவனுக்கும் நன்றி சொல்வேன்......

Image
அவனுக்கும் நன்றி சொல்வேன் ஆகையால் அவனென் அடிமை காலமெல்லாம் சுறுசுறுப்பாய் காணுகின்ற புது மலராய் காத்திருந்து தீண்டும்போது..... எத்தனை பக்கங்கள் எழுதிப் பார்த்து உறங்கினாலும் அத்தனையும் ரசிக்கிறேன் அன்புடனும் மகிழ்கிறேன் அதனால் சொல்கிறேன் அவனுக்கு .. சிலந்திபோல வலை சிங்காரமாய் பொட்டு எதிரியென எண்ணாமல் எல்லா உணவும் சாப்பிட்டு என் வயிறும் நிறைகிறது....... மனதின் ஒருபக்கம் மௌனமான  வலியும் மருத்துப் போனதால் பணம் மட்டுமே தேவை அதையும் கேட்கிறேன் அவனுக்காய்......?>

எங்கே நிம்மதி !

ஏழெட்டு வீடிறுக்கு ஏசி  காரும் நிறைந்திருக்கு கூவிட்ட குரலுக்கு கூட்டமாக நிறைய  வேலையாளிருக்கு வங்கியிலே பணமிருக்கு வாங்கி வைத்த நிலமிருக்கு பொருளிருக்கு நடைபோக தெம்பிருக்கு நலம்கேட்க நட்பிங்கே மட்டுமிருக்கு இத்தனை  இருந்தும் இறைவனை நினைத்தும் தப்பிருக்கே ஆம் பெற்றவரை விட்டுவிட்டு பொறுப்பை மறந்தேனே தவறு செய்தேனே நிறைந்த சொந்தமெங்கே நண்பர்களேங்கே தமிழே நீயும் எங்கே இத்தனையும் மறந்து இங்கே தனியாய் வாழ்வதா இனிய சொந்தம் மறப்பதா உண்பதும் உணவா உறவிழந்து மகிழ்வா எங்கே நிம்மதி பணம் பொருள் போதுமெனக்கு நேசமும் நிம்மதியும் வேண்டும் சொந்த நாடே சுகமென்று வந்தவழி செல்கிறேன் வாழுமிடம் செல்கின்றேன்

விபச்சாரியின் ஆசை !

புறப்பட்டு நீ வா !

தேவைக்கதிகமான பணமுண்டு தேடாமல் எல்லாமே வீட்டிலுண்டு பாவைக்கும் நட்பாய் பலருண்டு பார்பவரெல்லாம் நல்லன்பு கொண்டு வீதிக்கு வீதி சிலையுண்டு விடியும்வரை காவலுமுண்டு வெட்டியாய் நாளும் இருப்பதுண்டு வீணே நேரத்தை  கழிப்பதுண்டு இத்தனை இருந்தும் எனக்கு இனிமை வாழ்வே அல்ல புத்தகம் எழுதினாலும் பொழுது போகவே இல்ல நித்தமும் அருகில்  எனக்கு நிம்மதி வேண்டும்  துணைக்கு நினைத்த நேரத்தில் எதையும் நெருங்கி பேச வேண்டும் எத்தனைக் கோடி பணமும் எதற்கு வேண்டும் துணையாய் எண்ணிய நேரத்தில் உரசி எழுந்திட வேண்டும் பேசி வாழ்க்கையை வாழ நீ வா வசந்தத்தை நாடி நீ வா போர்க்களம் காண நீ வா www.kaviyazhi.com புறப்பட்டு கூடவே  நீ வா

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more