நண்பனே திரும்பி வா
நண்பனே நண்பனே நலமா நம்மூரில் எல்லோரும் நலம் நாடுகடந்த நம் நட்பு நாதியத்து போனதாலே வீதியெங்கும் பேசுகிறார் வேதனையாய் சொல்லுகிறார் சோதனையான நட்புக்கு-ஆறுதல் சொல்லும்படி இல்லையே காடுக் கம்மாய் சுத்தியது கிணத்துக்குள்ளே மூழ்கியது திருட்டு மாங்காயும் புளியும் திரும்பவும் உண்ணத்தோணுது நம்மூரு உணவுக்கு நானிங்கே அடிமை நண்பன் நீ சென்றதாலே நாக்கும்கூட தனிமை ஏக்கமாய் உள்ளது எப்போது நீ வருவாய் இருவருமே இங்கே-உழைக்க இணைந்தே செல்லலாமே சுற்றமும் நட்பும் சூழ்ந்து வாழ நீ வா உற்றதுணை எல்லோரும் உடனிருக்க திரும்பி வா +++++++கவியாழி+++++++