உணர்வில் தமிழன் என்றிருந்தால்........
தமிழைப் போற்றி வந்தவர்கள் தனியாய் பிரிந்தக் காரணமேன் மொழியால் ஒன்றாய் சேர்ந்தவர்கள் மோதிக் கொல்லும் நிலையெதனால் உயிராய் உணர்வாய் வாழ்ந்தவர்கள் உடனே விலகிப் போனதுமேன் பகையைச் சேர்த்து எப்பொழுதும் பண்பை மறந்து வாழ்வதுமேன் சாதியும் மதமும் எப்பொழுதும் சண்டை வந்திடக் காரணமேன் மோதிக் கொண்டு இருப்பதற்கு முடிவைக் காணா போவதுமேன் தம்மை பிரித்த துரோகிகளின் தரத்தை அறிய வேண்டாமா உண்மை நிலையை உணராமல் உயிரைப் போக்க வேண்டுமா ஒற்றுமையோடு நாம் இருந்தால் உணர்வில் தமிழன் என்றிருந்தால் கற்றவர் சொல்லை கேட்டறிந்தால் சுற்றமும் நட்பாய் வாழ்ந்திடலாம்