Posts

Showing posts from September, 2013

தெய்வங்கள்

தெய்வங்கள்

கண் கண்ணாடியைக் காணவில்லை

கண்கண்ணாடியைக் காணவில்லை கண்டு பிடிக்க முடியவில்லை கண் அழற்சியானதால் எப்போதும் கண்சிவந்து எரிச்சல் தாளவில்லை இல்லத்தார் எல்லோரும் கண்டுபிடிக்க இண்டு இடுக்கு  இடமெல்லாம் இரண்டு நாளாய்த் தேடுகிறோம் இயலவில்லை இருக்குமிடம் தெரியவில்லை நாவறண்டு கத்தினாலும் முடியாது நாநயமாய் பேசினாலும் வந்திடாது நான்வைத்த இடத்தைக் காணாமல் நண்பர்கனிடம் சொன்னாலும் கிடைக்காது மூன்று வயது நினைவுகூட முந்தி கொண்டு வருகிறது மூக்கில் மாட்டும் கண்ணாடியின் மூடிப்போன இடம் தடயமில்லை பேயறைந்த முகத்தைப் பார்த்து பேரன் பேத்தி  சிரிக்கிறார்கள் பேந்த பேந்த முழிப்பைப் பார்த்து பேருதவி மனைவியும் செய்கிறார்கள் வீட்டுக்கு வந்தவரின் கதையை விருப்பமின்றிச் சொன்னபோது  நானும் விட்டுவிட்ட பொருள் கணக்கை விபரமாகச் சொல்ல முடியவில்லை

பாம்பையே படம் பிடித்தேன்

Image
மைசூர் பயணம் தொடர்ச்சி ......  நாங்கள் அனைவரும் மைசூரிலுள்ள மிருக காட்சிச் சாலையில் ஒவ்வொரு பகுதியாக சென்று வந்தோம்.அப்போது மதிய நேரம் என்பதால் பெரும்பாலான விலங்குகள் தூங்கிக் கொண்டிருந்தன.என்னைபோல சுறுசுறுப்பாய் சிலதும் இருக்குமே என்றுதான் அந்தப் பகுதிக்குச் சென்றோம்.   ஆம் ,நகரத்து நண்பர் பாம்புகள் இருக்கும் பகுதிக்குச் செல்லலாம் என்று அடம்பிடித்தார் . ஒரு கண்ணாடிப் பெட்டி அருகே  நண்பர்களை வழக்கம்போல நானே படம் பிடித்தேன். அப்போது ....... ""பின்னாடிப் பாம்பு " என்று சொன்னதும் எல்லோருமே அங்கிருந்து துள்ளி ஓடி வந்தார்கள்.நான் அந்த பாம்பு நீளமாய் கண்ணாடிக்குள்ளே ஊர்ந்து சென்றதை கூறியதும் அப்படியா நாங்கள் மிக்கப் பயந்து  விட்டோம் என்றார்கள். என்னோடு வந்த நன்பர்கள் ஆமாங்க சிங்கமேதான்  என்னைப் பார்த்துப் பயந்துடிச்சி ராஜ நாகம்  நலம் விசாரித்தது மலைப்பாம்பு அமைதியானது மைசூர்  அரண்மனை  சூரியனின் காலை வணக்கம்                                                  மைசூரும்  மாலை நேரமும்                        நிமிசம்மா கோயில

மைசூர் பயணமும் படங்களும்

Image
நான் கடந்த வாரம் மைசூர் சென்றிருந்தேன்  அங்கு நான்கு நாட்கள் நண்பர்களுடன் தங்கி மகிழ்ந்தேன்  எல்லா இடங்களும் சென்றேன் இதயம் மகிழ்ந்து திரிந்தேன் அருள்மிகு சாமூண்டீஸ்வரி அம்மன் ஆலையம் எனது அலுவலக நண்பர்களுடன் நான் நந்திக்கோயில் மிருகக் காட்சிச்சாலை விலங்குகளைக் காண சென்ற ஊர்தி என்னைக் காண ஆவலாய் வந்த பாம்பு மைசூர் அரண்மனையின் முகப்புத்தோற்றம் மைசூரின் அதிகாலைத் தோற்றம் இம்மாதம் நடக்கவிருக்கும் தசரா விழா ஏற்பாடுகள் இன்னும் நிறைய படங்கள் எடுத்திருந்தேன்  எல்லாமே என்னால் பதிவிட முடியவில்லை முடிந்தால் விரும்பினால் மீண்டும் பதிவிடுகிறேன் ---கவியாழி--

பதிவர் விழாக் கணக்கு சரிபார்ப்புக் கூட்டம்

Image
விழுந்து விழுந்து சிரிக்கும் கே.ஆர்.பி.செந்தில், மதுமதி,கவியாழி,அரசன்,மெட்ராஸ் பவன் சிவகுமார்,ஸ்கூல் பையன் .சரவணன்,ஆரூர்.மூனா.செந்தில்.,ரூபக் ராம்,மின்னல் வரிகள்,பாலகணேஷ்,புலவர் அய்யாவைக் காணவந்த எனது நண்பர்.செல்லப்பா.ஆகியோருடன் வணக்கத்திற்குரிய அய்யா.ராமாநுசம்

இயற்கைச் சூழலை ரசியுங்கள்

இயற்கை சூழலை ரசியுங்கள் இனிமை கிடைப்பதை உணருங்கள் இன்பம் தேடிச்சென்றாலே எப்போதும் இளமை கொண்டே வாழலாம் கண்கள் குளிர்ச்சி கொள்ளும் கனத்த மனதும் லேசாகும் அங்கம் முழுதும் மகிழ்ச்சியால் அடையும் நன்றே உணர்வாலே மலையில் மரங்களைக் காணுங்கள் மகிழ்ச்சி கிடைத்திடும் நம்புங்கள் இலைகள் தழைகள் பசுமையாய் இன்பம் தந்திடும் இளமையாய் பசுமை மாறா காட்டிலே பாய்ந்து தாவிடும் குரங்குகள் பறந்து பேசிடும் பறவைகள் பார்க்கும் திசையிலே இன்பமே மான்கள் துள்ளி ஓடிடும் மயில்கள் தாவி களித்திடும் முயல்கள் ஒளிந்தே ஓடிடும் உள்ளமும் தூய்மை யாகிடும் அடிக்கடி வெளியே செல்லுங்கள் ஆனந்தம் மிகுவதைக் காணுங்கள் குடும்பம் அனைவரும் சேர்ந்தாலே குறையும் கஷ்டங்கள் தன்னாலே

முத்துக்கள் பத்து

Image
ஈர்ப்பு என்பது இயல்பாக வந்தால் தோற்பதில்லை துணையாகவே நிற்கும் தோல்வியை பார்க்காதவன் உலகில் யாருமில்லை துவண்டு வீழ்பவன் மனிதனில்லை வேள்விக்கு மயக்கமில்லை வீண் சந்தேகம் வெற்றி பெறுவதில்லை முயற்சிக்கு தடைகளில்லை முன்னேற்றம் யாரும் தடுப்பதில்லை? சிரிக்க மறக்காதே சிந்திக்க மறுக்காதே பொறுப்பை விலக்காதே பெருமையாய் பேசாதே காற்றுக்கு வழி சொல்ல கடமையாய் இருபது யார்? காலத்தை நிப்பாட்ட துணையாய் போவது யார்? வாழ்கையை தவறவிட்டு மனம் வெதும்பி போவது நீ..... வாழ விரும்பி முடிவு  வழியை திறக்கவும் நீ நீயே முடிவு செய்  நேர்மையாய் உணர்ந்து செய் உள்ளம் வதைப்படும்போதும் உணர்சிகள் தடைபடும்போதும் இதயம் வலிமையாகிறது ஈரம் இல்லாத எல்லாமே  இறைவனிடம் சேர்த்திடும்  ஆனால்  எண்ணங்கள் விரும்பிய எல்லோரிடமும் சேரும் துன்பப்படுவோருக்கு உதவு துன்பமாய் ஏற்றுக்கொள் துயர் நீக்கி தூய்மையாகு தெய்வமாய் நீ காணலாம் கடல் கடந்தாலும் கண்ணியம் மறக்காதே உடல் உழைப்பை கொடுக்க மறுக்காதே தடம் தவறி வாழ நினைக்காதே தமிழனின் தைரியத்தை என்றுமே இழக்காதே பணம் மட்டுமே மகிழ்ச்சியைத்தராது

வணக்கம்...வணக்கம்...வணக்கம்

வந்துவிட்டேன் மீண்டும் வந்துவிட்டேன் மக்களுக்கு வணக்கத்துடன்  வந்துவிட்டேன் விதியாலும் சதியாலும் வேலைப்பளுவாலும் விரக்தியின் காரணத்தாலும்  இதுநாளும் மதிகெட்டும் மனமும் புண்பட்டும் மக்களைக் காணாமல் இருந்துவிட்டேன் வலைப்பக்கம் வரமுடியாமல்  நெட்டின் வசதிஇன்றி தினமும் தவித்தேன் கதையும் மாறியது கடந்தது கவலையும் கொஞ்சமாய் தீர்ந்தது நிலையும் தேறியது நெட்டும் நிம்மதிதேடி இன்றுதான் வந்தது வலைப்பக்கம் வாராது இருந்தேன் வாழ்கையில் எதையோ இழந்ததாய் வாரம் இரண்டும் தவித்தேன் வந்துவிட்டேன் இனி மகிழ்வேன் துணையாக வந்த எல்லோரும் துடிப்பாக மீண்டும் வாருங்கள் விலையாக அன்பைத் தருவேன் வணங்கியே ஆசியும் பெறுவேன்

துயரங்கள் தொலைந்து போகும்

துயரங்கள் தொலைந்து போகும் ஆம் மறந்தால் துயரமும் மறைந்து விடும்.மறக்க முயற்சிக்க வேண்டும்  எல்லோருக்குமே மனதில் இனம்புரியாத வலி இருந்துகொண்டுதான்  வரும்.யாருக்குமே துன்பமோ துயரமோ இல்லாத வாழ்க்கை அமைவதில்லை. சிலபேர் சொல்லுவதுண்டு நான் எப்போதுமே துன்பப்படவில்லை என்று ஆனால் உண்மை அல்ல. வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் இருந்தால்தான் மனதில் மகிழ்ச்சியை உணர முடியும் என்பதை எல்லோருமே ஒத்துக்கொள்ள வேண்டும் .இந்த அனுபவத்தை உணராதவர்கள் யாரும் இருக்க முடியவே முடியாது.அப்படி அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது காரணம் அவர்களுக்காக வேறுயாரேனும் கஷ்டப்பட்டிருப்பார்கள். துயரை உணர்ந்தால் தெளிவு பிறக்கும். காரணம் தெரியும் அதனால் மீண்டும் அவ்வாறு நடக்குமுன் நம் மனது நம்மை எச்சரித்துவிடும்.எல்லோருமே எப்போதுமே நிம்மதியாக இருப்பதில்லை.சின்னச்சின்ன விஷயங்களிலும் நாம் கோபப்படவோ எரிச்சலடையவோ இருப்பதன் காரணம்  அதனால் ஏற்பட்ட மனகஷ்டமே நம்மை அவ்வாறு செய்யச்சொல்கிறது. வாழ்கையில் ஓவ்வொரு நிலைகளில் துயரப்பட்டிருப்போம் ஒவ்வொருவரும் துன்பப்பட்டிருப்போம்.இதுதான் வாழ்கையின் பரிணாம நிகழ்வு.நம்மையே மறந்து நாம் செ

ஈஸ்டர் நேசம் என்ற எனது வகுப்பாசிரியயை

ஈஸ்டர் நேசம் என்ற எனது வகுப்பாசிரியயை என்னை மிகவும் கவர்ந்த பிடித்த ஆசிரியை. நான் சாதாரண அரசுப் பள்ளியில் படிக்கும்போது எனக்குப் பிடித்த ஆசிரியையை  இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. நல்ல சிகப்பாய் மிகவும் அழகாக இருப்பார்கள் .அடிக்கவே மாட்டார்கள்.கன்னத்தை கிள்ளி செல்லமாய் முத்தமிடுவார்கள்.இன்னும் அவரின் முகமும் முத்தமும் அன்பும்  நினைவில் இருக்கிறது.  அப்போது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் இரண்டாவது படிக்கும்போது  . மதிய நேரத்தில் நிறைய மாணவர்கள் தூங்கி வழிவார்கள் நானும் அப்போது அப்படித்தான் தூங்கினேன். இதை மறுக்க யாராலும் முடியாது அப்போதைய வயது அப்படித்தான் இருக்கும்.ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் கதை சொல்ல தொடங்கினால் எல்லோருமே தூங்காமல் இருந்ததுண்டு அப்போதெல்லாம் நல்ல கான்கிரீட் கட்டிடங்கள் இருக்கவில்லை  ஓடுபோட்ட கூரைகள்தான் இருந்தது. ஆனால் நல்ல உஷ்ணமான காற்றோட்டமாய்  இருக்கும்.அவ்வாறான மதிய வேளையில் சில நேரங்களில் நானும் அசந்து தூங்கி வழிந்திருக்கிறேன்.அப்போதெல்லாம் சிறு குச்சியை வைத்து அடிப்பதுபோல்  மிரட்டுவார்கள். இன்னும் சில ஆசிரியர்களோ வீட்டுப்பாடம்  எழுதாமல் தல

கல்விக் கற்க உதவுங்கள்

பணம் மட்டும் வாழ்வாகாது பணத்தை  உண்ண முடியாது பணமும்  குணத்தை வாங்காது பணமே வருந்தி அழாது மனிதம் கண்டு மகிழுங்கள் மக்கள் மனதில் நில்லுங்கள் மட்டில்லாத உதவி செய்து மற்றோர் மனதில் வாழுங்கள் நேரில் பார்க்கா தெய்வத்தை நேர்மை இருந்தால் காணலாம் நன்மை நாளும் செய்தாலே நன்றே மகிழ்ந்து காணலாம் உண்மை உழைப்பு சத்தியத்தை உலகில் அனைவரும் போற்றியும் பெண்ணை மதித்து வாழ்ந்தாலே பேரும் புகழும் கிடைக்குமே கல்விக் கற்க உதவுங்கள் கருணை கொண்டே செய்யுங்கள் கஷ்டம் கொண்டே படிப்போரை கண்டு உதவி செய்யுங்கள் படிக்கும் பிள்ளைகள் யாவருமே பதராய் போக மாட்டார்கள் பண்பைச் சொல்லிக் கொடுத்தாலே படிப்பில் மேன்மைக் கிடைத்திடுமே

இனிவேண்டாம் என்தாயே

பழிவாங்கும் செயலாலே பாவம் மட்டும் குறையுமா பாரம் அதிகமாய் மாறுமா பழியும் உன்னோடு சேருமா மொழியாலே சின்னக் கணைவீசி முறையின்றி சொன்ன வார்த்தை வினையாக  எனைக் தாக்குமா விதிமாறி உன்னை வெல்லுமா வயதான காலத்தில் வேண்டுமா வாழ்த்துகிற நிலையும் மீறுமா தடையான காரணம் என்ன தயை கூர்ந்து சொல்வாயா விதியோடு விளையாடும்  நீ வீணான மதிகொள்ளக் காரணம் விளையாட்டுப் பிள்ளையின் செய்கையா விடுத்தவர் கல்வியின் கொள்கையா இனிவேண்டாம் என்தாயே இப்போதே இதை நிறுத்திவிடு இளவலைநீ  அன்பாலே வாழவிடு இனிமையை இனியேனும்  காணவிடு மதிகெட்டேன் மனையை விட்டேன் மருத்துவம் விரும்பியே இழந்தேன் இனியிழக்க என்னிடம் ஏதுமில்லை இனியாவது விதியை மாற்றிவிடு

மனிதம் போற்றி வாழுங்களேன்

இனமே தமிழன் என்றுரைத்து எதிலும் சேர்ந்தே முடிவெடுத்துப் பணமோ மதமோ பாராமல்-நட்பை போற்றி தினமே வாழுங்களேன் அண்ணன் தம்பி உறவுகளாய் அனைவரும் கூடி வாழ்வதனால் திண்ணைதோறும் நட்புறவாய்-அன்பை தினமும் போற்றி மகிழ்ந்திடலாம் உறவை மறுத்து வாழ்வதனால் உயர்வும் மகிழ்வும் தடையாகும் பிரிவைப் போற்றி வாழாமல்-ஒன்றிப் பிணைந்தே  மகிழ்ந்தே வாழுங்கள் மகிழ்ச்சியின் தத்துவம் புரியுமே மனித நேயம் தெரியுமே மக்கள் மனதை அறியுமே-உறவை மானிடம் போற்றி மகிழுமே சாதியும் மதமும் சொல்கிறது சரிசமம் உயிரென உயர்வாக நீதிக் கதைகளும் இதிகாசம்-எங்கும் நித்தம் சொல்வதும் இதைத்தானே மனித நேயம் வேண்டாமென மதமும் எங்கும்  சொன்னதில்லை மனிதனாக வாழ்வதற்கு  -நீங்களும் மனிதம் போற்றி வாழுங்களேன்

முகப்புத்தகத்தில் வெளிவந்த முத்துக்கள் பத்து

தலைவனாய் தன்னையே பிரகடனப்படுத்திக்  கொள்பவன் புத்திசாலியில்லை தானென்ற அகம்பாவ ம் தவிக்க விடும் . தறுதலையாய் மாற்றிவிடும நண்பனை தெரிந்து கொள்ள நாடுவாய்  -கஷ்டமென நட்பின் ஆழத்தை அறிவாய் இறந்தபின்பு மறுபிறவியில் மனிதன்   சாதியில் சேர்க்கப் படுகிறான்? தேடல் இருந்தால் தான் தெய்வமும் கூடவரும் நமக்கெங்கே போச்சு மனித நேயம் ? தமிழ்இன உணர்வு? உன் வாழ்க்கை  உன் வசந்தம்   உன் விருப்பம்  வாழ்ந்துவிடு வாழ்க்கையை ! விருப்பமானவர்களாய்  தினமும் காதலியுங்கள்  அதற்கொரு தினம் வேண்டாமே ஈர்ப்பு என்பது  இயல்பாக வந்தால்  தோற்பதில்லை  துணையாகவே நிற்கும் தேடினால்தான்  தெளிவு கிடைக்கும் ஓடினால்தான் ஓய்வெடுக்க முடியும் தேடுங்கள் ஓடுங்கள்  வெற்றியும் கிடைக்கும் ----கவியாழி----

"முயன்றால் முடியும்"

        வழக்கத்தில்  " முயன்றால் முடியும்" , "முயற்ச்சித் திருவினையாகும் ", "முயற்சியில்லாதார் தோல்வி அடைவார்கள் ", "முயற்சி இல்லாதார் இகழ்ச்சி அடைவர்" இப்படி பல பொன்மொழிகளையும் பழமொழிகளையும் நாம் அறிந்தே கேட்டுவருகிறோம் சொல்லிவருகிறோம். உண்மை என்ன?             அதற்காக என்னென்ன திட்டமிடல் செய்து வருகிறோமா இல்லையே அதையும் முயற்சிச் செய்யவேண்டும் என்றே ஒவ்வொருமுறையும் காலம் கடத்தி வருகிறோம்.இதனால் யாருக்கு என்ன பயன்  என்பதை அறியாமலே சிலநேரங்களில் நம்மைநாமே ஏமாற்றிக்கொள்வதாய்  அமைந்துவிடுகிறது.  ஆனால் முயன்றால்  மனதும்  நம்மை அவ்வாறு  ஏமாற்றுவதில்லை         இதற்குத் தீர்வென்ன எப்படி ஆரம்பிப்பது எப்படி முடிப்பது என்ற வரைமுறையை நாம் தீர்மானிதாலோலிய எந்த விஷயத்திலும்  வெற்றி என்பது எளிதில்  கிடைக்காது.வரைமுறையை வரையறுக்க  வேண்டும் . தெளிவான தீர்க்கமான திட்டமிடல் வேண்டும்.அதற்காக மட்டுமே உழைக்கத் தயாராய் இருக்க வேண்டும்.         எல்லா வெற்றித் தோல்விக்குமே  காரணம் மனம்சார்ந்த  உணர்ந்த விஷயம்தான்.மனதில் உறுதியும் அழுத்தமும்  இல்லாவிட்டால் அச்செயலை

பதிவர்கள் கூட்டம்

Image
                                 நான் சுய அறிமுகம் செய்யும்போது                                        நண்பர்களுடன் நான்(நன்றி வெங்கட்) ஆர்வமாய் வந்தார்கள்  அனைவரும் ஆங்காங்கே பேசினார்கள் மகிழ்ந்தார்கள் ஆனந்தமாய் சிரித்தார்கள்  இணைந்தார்கள் அன்பாய் எல்லோரும் இருந்தார்கள் இன்பமே முகத்தில் தெரிந்தது இளமையாய் இருந்தது மகிழ்ந்தது துன்பமும் மறந்தது நட்பால் தூரமாய் அன்றுமே விலகியது பண்பால் சிறந்த படைப்பாளிகள் பசியைத் துறந்த உழைப்பாளிகள் நல்லதே சொல்லும் நல்லோர்கள் நட்பையே போற்றும் நல்பதிவர்கள் இளமை மறந்த பெரியோர்கள் இன்பமும் வெறுக்காத  இளைஞர்கள் இன்னுமே மணமாக பையங்கள் இனிமேல் தேடப்போகும் அவர்களும் சுதந்திரம் கொண்டே மகிழ்ந்தார்கள் சூழ்ந்தே பேசிச் சிரித்தார்கள் சொந்தம் கொண்டு அழைத்தார்கள் சொல்லொன்னா இன்பத்தில் மகிழ்ந்தார்கள் ---கவியாழி---

என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள்

Image
ஆர்வத்துடன்  அனைவரும்  புலவர் அய்யாவுடன் பதிவர்களும் நானும் எனது சுய அறிமுகத்தின் பொது

பதிவர்கள் வரவைக் கண்டு மகிழ்ந்தேன்

பதிவர்கள் எழுச்சியைக் கண்டேன் பறந்து வருவதை அறிந்தேன் உறவை வளர்க்க துணிந்தேன் உங்களை வரவேற்று மனம் கனிந்தேன் சொல்லிப் புகழ விழைந்தேன் சொல்லில் தடுமாறி நின்றேன் மெல்லியச் சிரிப்பினை உதிர்த்தேன் மீண்டும் மீண்டுமே சிரித்தேன் நட்பில் நானும் மிதந்தேன் நாளும் அன்பில் நெகிழ்ந்தேன் பேச வேண்டித் துடித்தேன் பேசியப் பின்பு நினைத்தேன் வீரம் கண்டு சிலிர்த்தேன் தூரம் கேட்டுத் தொடர்ந்தேன் தொலைவில் இருப்பதை அறிந்தேன் தூய நட்பால் தொடர்ந்தேன் நேரில் காண இருந்தேன் நேரமின்றி நான் தவித்தேன் தமிழைத் தேனாய் குடித்தேன் தாகம் தீர்ந்து முடித்தேன்

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more