சிந்தை யது மங்கும்.....
சிந்தை யது மங்கும் சித்தம் மழுங்கி நடுங்கும் வித்தை செய்யும் மனதால் விடியும் வரை கலங்கும் சொந்தமும் தள்ளி வெறுக்கும் சொல்லைக் கேட்க மறுக்கும் சந்தங் களின் றின்றி சரீரம் அதிரக் கத்தும் வேந்தன் முதல் வீரன் வேட்கை யுள்ள யாரும் விரும்பி அருகில் வந்தால் வெட்டித் தலை சாய்க்கும் எங்கும் இருள் பரவி இருட்டாய் மனதுள் இருக்கும் அருகில் வர பயந்தே ஆட்டமாய் ஆடி ஒடுங்கும் தூக்க மின்றித் தவித்தே துயரம் கொள்ளும் மனிதன் தீர்க்க வரும் நிகழ்வால் துயரம் பறந்தே போகும் (கவியாழி)