Posts

Showing posts from January, 2016

தெய்வங்கள்

தெய்வங்கள்

மற்றவர் மனதிலும் வாழலாம்......

மாமழை தொடர்ந்த சென்னையிலே மதங்களும் அழிந்தது உண்மையிலே பூமாலை படைக்க மறுத்தது-மனிதம் புரிந்தது தெரிந்தது உணர்ந்தது கடும்மழை அதிகம் பொழிந்தும் கரைகள் பலதும் உடைந்தும் படும்துயர் அறிந்துத் தமிழன்-உடனே பகிர்ந்தனர் உணவை விரைந்து மதங்களைக் கடந்து  இணைந்தனர் மனிதனைக் கடவுளாய்  நினைத்தனர் பெருந்தவம் கிடைத்ததாய் எண்ணியே-விரைந்து பெருமையாய் உதவினர் மகிழ்ந்தனர் மாபெரும் மனிதனாய் மாறலாம் மக்களின் மனதில் வாழலாம் மனிதனை மக்களை மதித்தாலே-என்றும் மற்றவர் மனதிலும் வாழலாம் ---கவியாழி---

ரசித்தவர்கள்