தாழ்வான பகுதிக்கு தடுமாறி வந்திட்டேன்
வாழ்வோரை பார்க்க வரவேண்டு மென்று ஆழ்வான காற்று என்னை துரத்தி நோய்போல் என்னை நிறுத்தியதால்- ஏனோ தாழ்வான பகுதிக்கு தடுமாறி வந்திட்டேன் இதுவும் எனக்கு மகிழ்ச்சிதான் இருந்தும் மனதில் வருத்தம்தான் கடலில் மூழ்கி இறந்துவிட்ட அய்வரை-மரண துயரில் மூழ்கிட செய்தது நானல்ல எவ்வளவோ ஆழத்தையும் நான் நீந்தினேன் எண்ணில்லா பகுதியை தாண்டி சென்றேன் தப்பிதமாய் வாழ்ந்ததில்லை தறிகெட்டு-கரையில் ஒப்பில்லாது வாழ்ந்து ஒய்வாகதான் உள்ளேன் நிலப்புயல் எனக்கு நிம்மதி தர கரைநோக்கி என்னை தள்ளியதால் நானே கவனிப்போர் நிறைந்து காண்கின்றேன்-இன்றும் அகிலத்தார் பார்க்க எனக்கும் மகிழ்ச்சிதான்