Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

தாழ்வான பகுதிக்கு தடுமாறி வந்திட்டேன்

Image
வாழ்வோரை பார்க்க வரவேண்டு மென்று ஆழ்வான காற்று என்னை துரத்தி நோய்போல் என்னை நிறுத்தியதால்- ஏனோ தாழ்வான பகுதிக்கு தடுமாறி வந்திட்டேன் இதுவும் எனக்கு மகிழ்ச்சிதான் இருந்தும் மனதில் வருத்தம்தான் கடலில் மூழ்கி இறந்துவிட்ட அய்வரை-மரண துயரில் மூழ்கிட செய்தது நானல்ல எவ்வளவோ ஆழத்தையும் நான் நீந்தினேன் எண்ணில்லா பகுதியை தாண்டி சென்றேன் தப்பிதமாய் வாழ்ந்ததில்லை தறிகெட்டு-கரையில் ஒப்பில்லாது வாழ்ந்து ஒய்வாகதான் உள்ளேன் நிலப்புயல் எனக்கு நிம்மதி தர கரைநோக்கி என்னை தள்ளியதால் நானே கவனிப்போர் நிறைந்து காண்கின்றேன்-இன்றும் அகிலத்தார் பார்க்க எனக்கும் மகிழ்ச்சிதான்

நீ மனிதனாய் யோசி

Image
மனித பிறப்பே மகத்தானது மகம் பிறந்ததும் வியப்பானது திசை எங்கும் நோக்கி மகிழ்ச்சி திளைத்திட்ட பெற்றவர்கள் உழைத்திட்ட மணித்துளிகள் உருமாறி  போனதற்காய் இளைப்பாறி இருந்திட்டார் இலைப்பூவாய் வளர்த்திட்டர் குலை சிதைத்து விட்டதானால் குடும்பமே நடுத்தெருவில் பிழைசெய்தவர்  யார் புரியாது  ஏன் செய்தீர் தழைக்குமா உன் குடும்பம் தனியாக யோசித்துப் பார் சாதி  சண்டைகள் தேவையா சரிகின்ற உயிர்கள் நியாயமா சாதி சண்டையால் சங்கடத்தை சதியாக்கும் சண்டாளன்  மடிவானா மனிதனை  நேசி மகிழ்ந்து மனிதனாய்  சற்று யோசி

உடல் தானம் செய்வீர்

Image
உடல் தானம் செய்வீர் உன்னத முடிவெடுப்பீர் கடல் கடந்து பார்த்தால் கட்டாயம் நீயும் செய்வீரே உயிர்போன பின்னே உடம்பென்ன செய்யும் மண்ணரித்து  புழுதின்னும் மரம்செடி கொடியே வளரும் பொன்னெழுத்தில்  போற்ற புகழோடு பலர் வாழ என்னிருத்தி பாருங்கள் எண்ணியதை சொல்லுங்கள் அவயம்  இல்லார்க்கு அனைத்தும் கிடைக்கும் அடுத்தவர்  நலம் வாழ அவசியமான முடிவு செய்

இதழன்றி என்ன தருவாய்? அன்பே!

Image
    அருகில் வராதே அணைத்து கொள்வேன் அனைவரின் முன்னே இணைத்துக்கொள்வேன் அடுத்த நிமிடம் சுவைக்க தோன்றும்-எனக்கு அதற்கும்  மேலும் தாண்டச் சொல்லும் இனிக்கத்தானே இதழைப் பிடித்தேன் இதை மறுத்தால் என்ன செய்வேன் இன்று  மழையில் இந்த நேரம்-எனக்காக இதழன்றி  என்ன தருவாய்  அன்பே என்னை மீறி எதுவும் நடந்தால் எனக்கும்  உனக்கும் பங்கு  உண்டு பினக்கின்றி  பிரியமாய் தந்திடு-உரிமை பிணைப்பை உண்டென உணர்ந்திடு நெஞ்சிலே நெருப்பு வார்த்தாய் தீ கொஞ்சமாய்  பற்றி வர செய்தாய் துஞ்சமில்லை எனக்கு தூக்கமில்லை வஞ்சியே வா வனப்பிதழைத்தா !

கவியாழி : முதல்நாள் இரவு

கவியாழி : முதல்நாள் இரவு :  இரவெல்லாம் விழித்திருந்து இமை மூடா தவமிருந்து ஊரெல்லாம் கூடிவந்து-இன்பமாய் உற்றாரின் நலம் பகிர்ந்து விளக்கு தோரணம் விடியும்வர...

ரசித்தவர்கள்