Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

பனிபொழியும் அதிகாலை

நிலவும் சூரியனும் சேர்ந்து நித்திரையில் கனவில் வந்த நீலக்கண் கோலமங்கை இவளென்று சண்டையிட்டதால் பூமிக்கே  வேர்வை வந்ததால் புல்லெல்லாம் நனைந்து விட்டதோ பனிபொழியும் அதிகாலையில் பருவமங்கை  நடந்துந்துவர முகம்  தெரிய வேண்டாமென அதிகாலை வராமல் கதிரவனையே காக்கவைத்து காலம் மாறி வியந்து  வந்ததோ மார்கழிப் பூக்களின் மௌனமான பூக்கும் சத்தமமும் மலைச்சாரல்  தூறல்போல பனித்துளியும்  முகமலர்ந்து மங்கையால் மயங்கி நின்றதோ

நீ என்ன சாதி

அறிவுள்ள கணவனே குடும்பத்தில் ஆண்சாதி ஆண்மையையும்  அடக்கி மகிழ்பவளே பெண்சாதி இயலாமையை சொல்பவர்கள் இன்னொரு சாதி இதில் மட்டும் மாறுபடுமா உன் (நீ) நீதி (தீ) மதமென்று பிரிக்கிறாய் குலமென்று இருக்கிறாய் தளமென்று தனி தேசமாகிறாய் தரணியிலே தமிழனே என்கிறாய் என்ன  செய்தாலும் எதிரியாகி விடுகிறாயே ஏனோ விளங்கவில்லை சாதியால்  சதியாகிறாயே ஏன் உணர்வெனக்கு உண்டென்று உயிரை கொடுப்பேன் உலக  தமிழனுக்காய் உண்மை !,ஆனால் உரியபதவி தேடித் தேடி உளருகின்ற வார்த்தையாலே உள்ளபடி நீயும் அறிவாளியா உணர்ந்து சொல் மனிதனே

ஏனய்யா சாதி(தீ)யும் மதமும்

கோள்களில் பூமி கொண்ட தனித்தோர் மனித இனம் மற்றெல்லா உயிரினம் செடி மரம் பூச்சிகள் செழுந்திரலான விலங்குகள் கடல் நீர் காற்று கணக்கிலடங்கா மலைகள் எங்கெங்கும்  காண்பதெல்லாம் எண்ணற்ற மதப் பற்றே ஏழ்மைப் பசிப் பஞ்சம் ஏற்றதாழ் விருந்தாலும் எல்லா மக்களும் இன்பமாய் வாழ்ந்தாலும் ஏனய்யா சாதியும் மதமும் என்ன அதனால் சாதித்தாய் ஒன்றே குலமென ஒவ்வோர் மதமும் நன்றே சொன்னாலும் நல்லவை போதித்தாலும் அன்றே அனைத்தையும் மறந்து அறிவிழியாய் மாறுவதேன் மனிதத்தை போற்றினால் மதமென்ன தடையா சொல்லும்

சின்னஞ் சிறு விதைகள்- 2

பார்த்தவுடன் போதையேற்றும் நீ கள்ளுண்ட வண்டுடோ காதில் கேட்டவுடன் உன்னை பார்க்கத் தோன்றும்          நேரில் பார்த்தவுடன் என் நெஞ்சில்பூக்கிறது       பார்வையாலே பாதை குளிருக்கு நீயே  என் போர்வை      சிரித்தாலும் சீமை மல்லி கண்டதுமே சிறைபிடிக்கும் நீ  கள்ளி            முள்ளிலா ரோஜா உன் முன்னோர்கள்  செய்தாரோ சிரித்ததும்  சிதறியது அங்கே சிற்றிதழில் முத்துக்கள்          

சாலை விதியைப் பார்

Image
  பிறக்கும்போதே எழுதி வெச்ச விதியை பைக்கில பறந்துபோய் மாத்துற பசங்க இழக்குற வாழ்வை எண்ணி - என் இதயத்தில் வருந்தி கண்ணீர  சிந்துகிறேன் பெற்றெடுத்து பேர் வைத்தப் பிள்ளை பேச்சை கேட்காது அவசர வேலையென்று அடிபட்டு ஊணமாகி போவதால்-அவனுக்கும் ஆயுள் முழுதும் கஷ்டம் மட்டும்தான் தலைக்கவசம்  போடுவதால் தலையை தாங்கி தன்னிகரில்லாத  உன் உயிரைக் காத்து சொந்தமும் சுற்றமும் நண்பனும்வாழ்த்த -உன் சிந்தை மகிழ செழிப்பாய் வாழ்ந்திடலாம் சாலை விதியை சரியாய் பார்த்து  நாளைய வாழ்வை நன்றாய்  மதித்து  பாதையில் வரிசை பாங்காய் செலுத்தி-மிதமான வேகத்தில் சுகமான பயணம் நன்று

ரசித்தவர்கள்