பனிபொழியும் அதிகாலை
நிலவும் சூரியனும் சேர்ந்து நித்திரையில் கனவில் வந்த நீலக்கண் கோலமங்கை இவளென்று சண்டையிட்டதால் பூமிக்கே வேர்வை வந்ததால் புல்லெல்லாம் நனைந்து விட்டதோ பனிபொழியும் அதிகாலையில் பருவமங்கை நடந்துந்துவர முகம் தெரிய வேண்டாமென அதிகாலை வராமல் கதிரவனையே காக்கவைத்து காலம் மாறி வியந்து வந்ததோ மார்கழிப் பூக்களின் மௌனமான பூக்கும் சத்தமமும் மலைச்சாரல் தூறல்போல பனித்துளியும் முகமலர்ந்து மங்கையால் மயங்கி நின்றதோ