இசைஞானி இளையராஜாவுக்கு விருது
நாமெல்லாம் பெருமை கொள்ள வேண்டிய சந்தோசமான செய்தி ,நாளும் தமிழ் பாடல்களை கேட்க விரும்பும் எல்லோருக்குமே இந்த செய்தி இனிமையாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை ,அவருக்கு எத்தனையோ விருதுகள் வழங்கி இருந்தாலும் இந்த விருது அவரை மேலும் பெருமை படுத்து என்பதில் தமிழராகிய நாமும் பெருமை கொள்வோம் இசைஞானி' இளையராஜாவுக்கு 2012ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கப்பட இருக்கிறது.பல மொழிகளில் இசைத்து பாடியும் இசைத் துறையில் அவரது படைப்புத் திறன், புதுமையான முயற்சியில் வெற்றி பெற்றது ஆகிய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரத்தினால் ஆன பாராட்டுப் பத்திரம் அளிக்கப்பட்டு, அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு கெüரவம் வழங்கப்படும். நாமும் மகிழ்ச்சி கொள்வோம் கொண்டாடுவோம்