Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

இசைஞானி இளையராஜாவுக்கு விருது

Image
         நாமெல்லாம் பெருமை கொள்ள வேண்டிய சந்தோசமான செய்தி ,நாளும் தமிழ் பாடல்களை கேட்க விரும்பும் எல்லோருக்குமே இந்த செய்தி இனிமையாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை ,அவருக்கு எத்தனையோ விருதுகள் வழங்கி இருந்தாலும் இந்த விருது அவரை மேலும் பெருமை படுத்து என்பதில் தமிழராகிய நாமும் பெருமை கொள்வோம்          இசைஞானி' இளையராஜாவுக்கு 2012ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கப்பட இருக்கிறது.பல மொழிகளில் இசைத்து பாடியும் இசைத் துறையில் அவரது படைப்புத் திறன், புதுமையான முயற்சியில் வெற்றி பெற்றது ஆகிய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரத்தினால் ஆன பாராட்டுப் பத்திரம் அளிக்கப்பட்டு, அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு கெüரவம் வழங்கப்படும்.        நாமும் மகிழ்ச்சி கொள்வோம்  கொண்டாடுவோம்

பழமொழிகள் -பருவத்தே பயிர்செய்

                  பருவத்தே பயிர்செய்            "  பருவத்தே பயிர் செய்"  என்ற பழமொழி எல்லோருக்குமே தெரிந்தது. ஆனால்  எதற்க்காக யாருக்காக சொன்னார்கள் என்பது எல்லோருக்குமே தெரியாது ,குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு புரியாது. இன்றைய இளைய தலைமுறைக்காக நான் சொல்ல விரும்புகிறேன்.                             பட்ட  படிப்பை  முடிக்கும் முன்னே நல்ல மதிப்பெண் பெற்றிருந்தால்  கல்லூரிக்கே வந்து  நேர்காணல் நடத்தி தயார் செய்து பணிக்கான உத்தரவும் தந்து விடுகிறார்கள்  கல்லூரி படிப்பு முடிந்ததும் உரிய பயிற்சி கொடுத்து பணியமர்த்தி பயிற்சியுடன் ஊக்க தொகையும் கொடுக்கிறார்கள் .                             இன்று பெருபாலான இளைய தலைமுறையினர் நல்ல வேலையில் நல்ல சம்பளத்துடன்  வாழ்க்கையை தொடங்குகிறார்கள்,வீட்டிடருகே வந்து மகிழுந்து  பேருந்து  போன்றவற்றில் குழுவாக  அழைத்து செல்கிறார்கள் அதுபோலவே மீண்டும் இறக்கி விடுகிறார்கள் .அங்கேயே சாப்பாடு தேநீர் போன்ற சலுகைகளும் உண்டு .இதெல்லாம் பெரும்பாலான நிறுவனங்களில் கிடைக்கிறது. சிலர் சொந்த வாகனத்தில் மகிழுந்து, இருசக்கர வாகனம் போன்றவற்றில் சென்று வர

கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா?

கடவுளே கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா? கயவர்கள் நிம்மதியாய் காசு பார்க்க விடுவானா? திருடன்  துரோகிஎல்லாம் தைரியாமாய் திரிவானா? காசு பணத்திற்காக கள்ள தொழில் செய்வானா? இல்லாதவன் ஏங்குகிறான் இருப்பவனோ  பதுக்குகிறான் உள்ளதை சொல்பவன் உயர்வின்றி தவிக்கிறான் நல்லவனாய் இருப்பவன் நாளும்  மனதால்இறக்கிறான் பொல்லாங்கு சொல்பவன் புகழோடு இருக்கிறான் உனக்காக செய்வதை ஏழைக்கு கொடுக்கசொல்! உயர்வாக உன்னிடம் ஒழுக்கத்தை பயிலசொல்! தனக்காக உள்ளதுபோக தருமம் செய்யச்சொல்! மனித நேயம்  மறக்காமல் மனிதனை இருக்கசொல்! மனிதனாக இருக்க மனிதாபிமானம் மதிக்கசொல்! பெற்றோரை,மற்றோரை மாண்புடனே மதிக்கசொல்! தனியொழுக்கம் கற்றுதந்த ஆசிரியரை மதிக்கசொல்!!! (கவியாழி)

அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு

அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு   அகிலமும் உனைநோக்க நேர்நிறுத்து சுகத்தை உன்னுள் நேர்த்தி செய்தால்-ஆயுளில் யுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் ! உன்னில் ஒளிந்திருக்கும் ஒளியரிந்திடும் உன் கணக்கு என்னவென்று   உன்னுடலில்   வெண்ணை சேர்காதமேனி வெளிர்ந்திடும்-உண்மையாக கண்ணுள் காட்டிடும்   கனியாக  தெரிந்திடும்! மெய்யும்   பொய்யும் மேனியு   ளதில்லை மெய்ஞானம் நேரில் பார்த்த தில்லை சொல்லும்   செயலும்   சேர்ந்தே யன்றி -எளிதில் சொல்லாத சொல்லால் பயமேதுமில்லை! இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம் இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம் பொய் சொல்லோரை புறந்தள்ளி பார்த்தாலே-வாழ்வில் புரிந்திடும்   மெய்ஞானம் தெரிந்திடும் எளிதாக நம்பிக்கை வாழ்வில் நல்வழி படுத்தும் நாணயம் எப்போதும் துணை நிற்கும் வம்பிலுப்போர்   வாழ்வு நெறிகெட்டு-துன்பமாக சம்பவிப்பார் சாபங்களை சந்ததிக்கு சேர்ப்பார் ! கஷ்டம் கடக்கும் காலம் வந்தால் நஷ்டமும் தீரும் நன்மை பெறும் இஷ்டமாக இனிதே உதவி செய்தால்-மகிழ்ந்து துஷ்ட மெல்லாம் தூரசென்று   விலகிடும் ! நல்லவனாய் இருப்பதால் நல் மனிதனாவாய்

மலிவான மனசாட்சி

 நடுஇரவில் நண்பர்களோடு சினிமா பார்த்து விட்டு நண்பர்களுன் பயணித்த 23 வயது மாணவியை கதறக்கதற கற்பழித்த குற்றவாளிகளை டெல்லி போலீஸ் கைது செய்தது .-செய்தி (குற்றவாளி : மாணவியா? அவரின் பெற்றோரா? நண்பர்களா? குற்றவாளிகளா? அரசாங்கமா?சமூகமா?)                                      """""""""""""""""""" மலிவாக மனசாட்சி மறைந்து கிடக்க மக்களும் எதையெதையோ தேடி சேர்க்க புத்தகம் போதனை சொல்லி இருந்தும்-புத்தியின்றி புலப்படுதே பெண்ணினம் இன்னும் வதைபடுதே பணம் வேண்டி  பலதவறும் பாவிகளை பண்கெட்டு  கேடுகளை செய்ய தூண்டி குணம் கெட்டு குலநாசம் செய்யுதே - மனதில் குடிகொள்ளுதே குற்றமாய் பிழை செய்யுதே சிறுபிள்ளை வாழ்வுதனை சூறையாடி செய்கின்ற தவறுகள் தொடர்கின்றதே சிற்றூரும் பேரூரும் சரிசமமாய் -நெறிகெட்டு சிற்றின்ப வாழ்க்கைக்கு துணை போகுதே படிப்பிருந்தும் பாவி மக்கள் பயணிப்பதே பகல் பொழுதை தாண்டியும் தொடர்கின்றதே தடைசெய்த  பழக்கங்கள் தவறாக தொடர்ந்து -தன்மானம் விடைபெற்று நெறிகெட்டு செயல்படுதே

ரசித்தவர்கள்