இளம் வயதிலேயே இன்னலை தீண்டியவளே !
இளம் வயதிலேயே இன்னலை தீண்டியவளே ! இதற்காகவா பிறந்தாய் இவ்வளவுநாள் வளர்ந்தாய் ! உனக்காக வாழ்ந்திடு உணர்ச்சியை பகிந்திடு ! ஒரு வருடஇன்பம் ஒருவருக்கும் திருப்தி இல்லை கணக்காக நடந்தால் கண்ணியத்தில் குறையுமில்லை பிறரருக்காக பார்க்காதே பிறருக்காக வாழாதே! இளைமை என்பது இன்றைய நாள்தான் இனிமை என்பது இளமைக்கும் தேன்தான் இன்றைய வாழ்வை இனிமையாக்க முயற்சி செய் ! இப்போதும் தப்பில்லை இனிசொல்ல வழியில்லை மாண்டு போனவனுக்காக மீண்டும் தப்பு செய்யாதே ! கோழைக்காக நீயும் கேள்விக்குறியாய் இருந்திடாதே ! நீ தான் நீதிபதி நின் வாழ்க்கைக்கு அதிபதி மறுமணம் தப்பில்லை மறுவாழ்வு கசப்பதில்லை உருவாக்கு புதுயுகம் உனைபோற்றும் இந்த உலகம் துணிந்திடு செயல்பாடு துயரத்தை வென்றிடு !!!