Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

இளம் வயதிலேயே இன்னலை தீண்டியவளே !

இளம் வயதிலேயே இன்னலை தீண்டியவளே ! இதற்காகவா பிறந்தாய் இவ்வளவுநாள் வளர்ந்தாய் ! உனக்காக வாழ்ந்திடு  உணர்ச்சியை பகிந்திடு ! ஒரு  வருடஇன்பம் ஒருவருக்கும் திருப்தி இல்லை கணக்காக நடந்தால் கண்ணியத்தில் குறையுமில்லை பிறரருக்காக பார்க்காதே பிறருக்காக வாழாதே! இளைமை  என்பது இன்றைய நாள்தான் இனிமை என்பது இளமைக்கும்  தேன்தான் இன்றைய வாழ்வை இனிமையாக்க  முயற்சி செய் ! இப்போதும் தப்பில்லை இனிசொல்ல வழியில்லை மாண்டு  போனவனுக்காக மீண்டும் தப்பு செய்யாதே ! கோழைக்காக நீயும் கேள்விக்குறியாய்  இருந்திடாதே ! நீ தான்  நீதிபதி நின் வாழ்க்கைக்கு அதிபதி மறுமணம் தப்பில்லை மறுவாழ்வு கசப்பதில்லை உருவாக்கு   புதுயுகம் உனைபோற்றும் இந்த உலகம் துணிந்திடு செயல்பாடு துயரத்தை வென்றிடு !!!

தற்கொலைத் தண்டனை யாருக்கு?

எண்ண கனவினில்  நாளும் வடிவமைத்து எத்தனையோ சிந்தனையை முன் நிறுத்தி அத்தனையும் வண்ணமாய் உருக்கொடுத்து-அன்பாய் சித்தனாக சிலைபோல நெஞ்சில்  வளர்த்தார்கள் சிறுஎறும்பும் சீண்டாது பார்த்திருந்து சிறிய வயதிலே  செம்மையாக நகையணிந்து உரிய கல்வியையும் உடன் கொடுத்து-ஊர்பேச பருவ வயதையும் பார்த்து பூரித்திட்டார்கள் தெருவோரம் நின்று தினமும்  ரசித்து தினம்தோறும் உணவும் விரும்பிய தீனியும் மனம்கோனது மகிழ்ச்சியாய் திணித்து-அன்றாடம் அகமெல்லாம் அன்பொழுக நாளும் பார்த்தார்கள் இளமை பருவத்திலே எத்தனையோ  கற்று எளிமை பண்பையும் சொல்லி கொடுத்து வளமையாக்கி வடிவமைத்து  வாழவேண்டி-நலம்கான கிழமை தோறும விரதமும் இருந்தார்கள் இத்தனையும் செய்தும் இழி மனதில் பித்தனாய் மாறி  பிறள் புத்தியால் தத்துவம்  பேசி தவறான முடிவை-மனமொடிந்து சத்தியம் தவறி சாகமட்டும் துணிந்ததால் புரியவில்லை எனக்கு புதிரோன்றும் அறியவில்லை புரிந்தவரையும்  காக்க பொருளேதும் சேர்க்கவில்லை மடையனே மன்னிக்கமுடியாத இடையனே-விடையடைய மனம்திறந்து  சொன்னாயா மனிதனாக நின்னாயா மதி  இழந்தோரே  மனபயம்  கொண்டேரே விதி முடியவில்லை வீணான எண்ணத்தால்

இணைந்து வா இறுதி காலத்திலாவது

அன்னைத் தமிழ் நாட்டிலே அன்பாய் அப்பன் பிள்ளைகள் உறவிழந்து தினம் துஞ்சுகின்ற நாளை எண்ணித் துயர்-இறுதியில் தொண்டையைக் கம்ம செய்து  தொடருதே நடை பயில திறன் மறந்து நடப்பதற்கு துணை யழைத்து வளர்த்திட்ட பிள்ளையும்  மறந்து-வாழ்வில் கிடைத்திட்ட நட்புகளும் இறந்தும் பஞ்சமில்லை பணம் பொருளுக்கும் எஞ்சி நின்ற சொத்து மிழந்தும் தஞ்சமென கிடைத்திட்ட இல்லமே-எனக்கு மஞ்சமென நான் கிடந்து  மடிவேன் எந்தன் நண்பர்கள் எல்லோரும் சென்றும் பந்தமுடன் பாசம் கேட்கும் எனக்கு தரும்  கடைசி பாலும் கொடுக்க -தவறும் பிள்ளைகளால் இந்தநிலை ஏன் இறைவா ஏழுகடல்  தாண்டி என்ன பயன் ? ஏழுலகம் போற்றி என்ன பலன் ? படைத்தோரை மறந்த பாவிகளே-உனக்கும் கிடைக்காதோ நாளை இந்த நிலை சொந்தமும் சுற்றமும் பெற்றோரு மின்றி இந்தநிலை  பலர் இழித்தும்  வாழ்வா? பந்தம் பாசம் பண்பாட்டுடன் நேசமும்-தமிழ் எந்தம் பண்பென விரைந்து வா அன்னை தந்தையின் அன்பு வார்த்தையில் அழகு தமிழின் நல்ல கருத்துக்களை உன் பிள்ளைகள் மகிழ்ந்து கேட்க - எங்களோடு இணைந்து  வா இறுதி காலத்திலாவது

பேரழகி வட்ட நிலவு

Image
 பேரழகி வட்ட நிலவு ஊரெல்லாம் காணாது  உன்னை நான் மறைத்திருக்க உள்விளக்கு எரியாமல் உன்னோடு சேர்ந்திருக்க பாரெங்கும் சுத்திவரும் பேரழகி வட்டநிலவும் பார்த்து விட்டு போகாமல் பைந்தமிழ்லாய் பார்பதேனோ நீ  விடும் முச்சு நிம்மதியை கெடுபதாலோ நிலவுக்கே போட்டியாக நின்னலகை கண்டதாலோ மான் கூட்டமெல்லாம் மறுபடியும் பார்க்கவேண்டி மயிலிறகு தோகையுடன் மறைந்திருந்து காண்பதேனோ மலர்படுக்கை மஞ்சத்தில் பஞ்சனையும் மெதுவாக கொஞ்சனைக்க  வேண்டியே கெஞ்சுதடி வஞ்சியே வீண் பேச்சு பேசாமல் விடியும்வரை உறங்காமல் நானுன்னை பருகிடுவேன் நல்லிரவு விடியும்வரை ஊர்பார்த்து வந்தவுடன் உள்ளவர்கள் ஆசியுடன் பார்போற்ற உன் கை பற்றிடுவேன்  நங்கையே

தனக்கு மிஞ்சியது பின் தானமும் தர்மமும்

தனக்கு மிஞ்சியது பின் தானமும் தர்மமும்          தர்மம் பண்றேன் பேர்வழி என்று தனது தேவைக்கில்லாமல்  அடுத்தவருக்கு கொடுப்பது  என்பது ஏமாளித்தனம் என்று நான் சொல்லுவேன்.முதலில் தனது தேவைகளும்,தனது குடும்பத்தினர் தேவைகளையும் அறிந்து பூர்த்தி செய்துவிட்டு அதன்பின் அடுத்தவரை பற்றி யோசிப்பதுதான் உண்மையும் சிறந்ததுமாகும்.அதற்காக கொடுக்க கூடாது என்று சொல்லவில்லை .         முதலில் தனக்கு தேவையானதை அதாவது தன் குடுபத்திற்கும் சாப்பாட்டு செலவு,பிள்ளைகளின் கல்விக்கான செலவு வீட்டு வாடகை, மற்றும் பிற தேவையான அத்தியாவசியமான செலவுகள் போக சேமிப்பும் முதலீடுட்டுக்கும் ஒதுக்கியது போக செய்வதுதான் இன்றைய சூழ்நிலையில் புத்திசாலிதனமென சொல்லுவேன்.         தகுதிக்கு மீறி தானமோ தர்மமோ செய்தால் அதன்பின்  தானம் செய்யும் நிலையை இழப்பான் பின் அவனுக்கே உதவி செய்ய ஆளில்லாமல் அடுத்தவரை எதிர்பார்த்து இருப்பான்  அப்படி பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சும் அதனால் வேதனையும் மன உளைச்சலுமே இருக்கும்       அதற்குப்பின் அவனே ஏன் செய்தோம் என்ற நிலையில் என்னிடம் இருக்கும்போது எவ்வளோவோ யார் யாருக்கோ கொடுத்தேன் இன்று எ

ரசித்தவர்கள்