Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

அவளுக்கு அப்படியொரு ஆசை

......... அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது .             அதிகாலை வேளையில் கடற்கரை அருகில் அமைதியான சூழலில் காலாற நடக்க வேண்டுமென்று...           அப்போது அவன் கேட்டான் ,ஆமா  என்னஇங்கு எதுக்கு அடிக்கடி வரீங்க?            அதையேன் இப்போ கேட்கிறீங்க? அவள் சொன்னாள் .           உடனே சுதாரித்தவளாய் அங்கே பாருங்க மீன்களெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாய் துள்ளி விளையாடுகிறது          அந்த அதிகாலையிலும் நிலவும் சந்தோசமாய் வெளிச்சத்தை கடலில் வீச இனிமையான கடல் காற்றும்  மட்டுமே அவளுக்கு சந்தோசமாய் இருந்தது.அவளுக்கு அப்படியொரு ஆசை           நான்  கேட்டேனே பதில் சொல்லவில்லையே?          உங்க பேரு என்ன எந்த ஊரு? சற்றே நிதானமாய் அவனை உற்று நோக்கினாள் ஏன்?     இல்ல தெரிஞ்சுக்கலாமே என்றுதான்,தினமும் அந்த முதியோர் இல்லம் வரீங்க அங்குள்ளவங்களிடம் ஆதரவா பேசுறீங்க அதனால் அதனால் ? நான் என் ஆத்ம திருப்திக்கு மட்டுமல்ல அங்கு எனக்கு வேண்டியவங்க இருக்காங்க அதுக்குதான் நான் வருகிறேன்       ஆனால் அவள் உண்மையை மறைக்கிறாள் என்பது அவனுக்கு தெரியும்.          எனக்கு உறவென்று சொல்லிக்கொள்ள ஒருவ

அவனுக்கும் நன்றி சொல்வேன்......

Image
அவனுக்கும் நன்றி சொல்வேன் ஆகையால் அவனென் அடிமை காலமெல்லாம் சுறுசுறுப்பாய் காணுகின்ற புது மலராய் காத்திருந்து தீண்டும்போது..... எத்தனை பக்கங்கள் எழுதிப் பார்த்து உறங்கினாலும் அத்தனையும் ரசிக்கிறேன் அன்புடனும் மகிழ்கிறேன் அதனால் சொல்கிறேன் அவனுக்கு .. சிலந்திபோல வலை சிங்காரமாய் பொட்டு எதிரியென எண்ணாமல் எல்லா உணவும் சாப்பிட்டு என் வயிறும் நிறைகிறது....... மனதின் ஒருபக்கம் மௌனமான  வலியும் மருத்துப் போனதால் பணம் மட்டுமே தேவை அதையும் கேட்கிறேன் அவனுக்காய்......?>

எங்கே நிம்மதி !

ஏழெட்டு வீடிறுக்கு ஏசி  காரும் நிறைந்திருக்கு கூவிட்ட குரலுக்கு கூட்டமாக நிறைய  வேலையாளிருக்கு வங்கியிலே பணமிருக்கு வாங்கி வைத்த நிலமிருக்கு பொருளிருக்கு நடைபோக தெம்பிருக்கு நலம்கேட்க நட்பிங்கே மட்டுமிருக்கு இத்தனை  இருந்தும் இறைவனை நினைத்தும் தப்பிருக்கே ஆம் பெற்றவரை விட்டுவிட்டு பொறுப்பை மறந்தேனே தவறு செய்தேனே நிறைந்த சொந்தமெங்கே நண்பர்களேங்கே தமிழே நீயும் எங்கே இத்தனையும் மறந்து இங்கே தனியாய் வாழ்வதா இனிய சொந்தம் மறப்பதா உண்பதும் உணவா உறவிழந்து மகிழ்வா எங்கே நிம்மதி பணம் பொருள் போதுமெனக்கு நேசமும் நிம்மதியும் வேண்டும் சொந்த நாடே சுகமென்று வந்தவழி செல்கிறேன் வாழுமிடம் செல்கின்றேன்

விபச்சாரியின் ஆசை !

புறப்பட்டு நீ வா !

தேவைக்கதிகமான பணமுண்டு தேடாமல் எல்லாமே வீட்டிலுண்டு பாவைக்கும் நட்பாய் பலருண்டு பார்பவரெல்லாம் நல்லன்பு கொண்டு வீதிக்கு வீதி சிலையுண்டு விடியும்வரை காவலுமுண்டு வெட்டியாய் நாளும் இருப்பதுண்டு வீணே நேரத்தை  கழிப்பதுண்டு இத்தனை இருந்தும் எனக்கு இனிமை வாழ்வே அல்ல புத்தகம் எழுதினாலும் பொழுது போகவே இல்ல நித்தமும் அருகில்  எனக்கு நிம்மதி வேண்டும்  துணைக்கு நினைத்த நேரத்தில் எதையும் நெருங்கி பேச வேண்டும் எத்தனைக் கோடி பணமும் எதற்கு வேண்டும் துணையாய் எண்ணிய நேரத்தில் உரசி எழுந்திட வேண்டும் பேசி வாழ்க்கையை வாழ நீ வா வசந்தத்தை நாடி நீ வா போர்க்களம் காண நீ வா www.kaviyazhi.com புறப்பட்டு கூடவே  நீ வா

ரசித்தவர்கள்