Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

பருவமறியா பாலகன்.பாலச்சந்திரன்

Image
  பருவமறியா பாலகனை கொன்ற இருள் மனது கொலைகாரன் மடிவானா மக்களை இழப்பானா-வீட்டில் இடிவிழுந்து இலங்கையில் இறப்பானா குடிகெட்டு மதியிழந்து திரிவானா குடும்பமே பைத்தியமாய் அலைவாரோ இடுகாட்டில் தலை புதைத்து-தவறால் சுடும் தீயில் விழுந்து மடிவானா பிணம் தின்னும் குணம் மாறி  மனம் திருந்தி வருந்து வானா மக்களை பார்த்து மண்டியிட்டுக்-கதறி மற்ற நாளையும் சிறையில் கழிப்பானா ஈர நெஞ்சமுள்லோர்அவன் கோர முகத்தை கிழித்து  தீரத்தீர அடித்து துரத்தி-கோழையின் குடும்பமே அழியாதோ மடியாதோ

பேராசைப் பெரும் நஷ்டம்

             "  பேராசைப் பெரும் நஷ்டம்"               அதிகமா ஆசைப்படுவதை பேராசை என்று சொல்வார்கள். இதைப் பற்றி நிறைய நீதி கதைகளும் கட்டுரைகளும்  உதாரனங்களும் உண்டு. அளவுக்கதிகமாக ஆசைபடுவதும் பொருள் சேர்த்து வைப்பதும்  தவறு. இங்கு தவறான வழியில் பணம் சேர்த்த அரசியல்வாதிப் பற்றியே குறிப்பிடுகிறேன்                எல்லா மதமும் இதைப்பற்றி தவறாகவே சுட்டிக்காட்டுகிறது  இருந்தாலும் நம்மில் எத்தனைபேர் கடைபிடிக்கிறார்கள் மிக சொற்பமான சிலரே.பலபேர் இதைப்பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை .பணம் சேர்ப்பதிலேயே மேலும் மேலும் குறியாய் அக்கறையாய் இருப்பார்கள்         இவ்வாறானவர்கள் நேர்வழியில் சேர்த்திருக்க மாட்டார்கள் தவறான வழியே தடமாக எண்ணி லஞ்சம், கலப்படம், பதுக்கல், வட்டி வசூலித்தல் , வழிப்பறிக் கொள்ளை,  ஏமாற்றிப் பணம் பறித்தல் போன்ற தவறான வழியிலேயே சேர்த்திருப்பார்கள் இதையே தொழிலாகவும் செய்வார்கள்.        அவசியமற்ற செலவுகளும் ஆர்பாட்டம் கேளிக்கையுடன்  சமூக அக்கறை உள்ளவர்களாய் பொதுமக்களிடம் காட்டிக்கொள்வார்கள்.ஏழைகளிடம் பிடுங்கியதை ஏழைகளுக்கு தர்மம் செய்வதுபோல் நடிப்பார்கள்.அதற்காக விளம

காதலி ! காதலா ! காதல்!

Image
ஒருதலைக் காதல் ஜெயித்ததில்லை உணர்வுள்ள காதல் தோற்றதில்லை மறு பிறப்பு மீண்டும் வருவதில்லை-காதல் மறந்து போனதாய் சரித்திரமில்லை மனம் பார்த்து வருவதே காதல் மிகையான பணம் பார்த்த தல்ல குணம் மாற்றியும் வரலாம்-காதல் கொள்கை உறுதி யோடும் வரலாம் அவசர காதல் அழிந்ததுண்டு அவசிய காதல் முறிந்ததுண்டு ரகசிய காதல் ஜெயித்ததில்லை-காதல் ரசனை மட்டுமே தகுதியில்லை மனதை மாற்ற போராடு மகிழ்ச்சியோடு அதை நீ நாடு புதிதாய் செய்வோர் புனிதத்தை -அன்பாய் புகழ்ந்து வாழ்த்தி  நீ சொல்லு பிரியும் காதல் தொடர்ந்ததில்லை பிரிக்கின்ற காதல் அழிவதில்லை புரிகின்றோர் காதல் முடிவதில்லை-வெற்றி புரிந்தோர் அதையும் தடுப்பதில்லை

இன்றும் உன்னைத் தேடுது

ஏங்கி ஏங்கியே என் இளமையை கழித்தேன் இன்னும் வேண்டியே-அதனால் இன்றும் நான் தவித்தேன் கனவினால் தினமும் தூங்க மறுத்தேன் காதலால் உன்னை -அங்கும் தேடியே  அலைந்தேன் சின்ன குழந்தைகள் சிறைபிடிக்குது செல்லமாய் கொஞ்ச-மீண்டும் உள்ளம் ஏங்குது ஆசை ஏனோ அடங்க மறுக்குது அணைக்க வேண்டியே-இன்றும் உன்னை தேடுது நீ வருவாயோ நிழல் தருவாயோ பூவுடன் வந்து-என்னை போர் தொடுப்பாயா

"மனிதமே" இறந்ததோ?

Image
மனிதமே இறந்ததோ மனசாட்சி அழிந்ததோ எங்கெங்கு காணினும் எண்ணற்ற கொலைகள் எல்லோரும் தூற்றும் கற்பழிப்புப் பிழைகள் வசதி வேண்டியே வழிப்பறிக் கொள்ளை வார்த்தை மாறியே வாழ்க்கைப் பயணம் பிழை செய்வதே பெருமையாய் போற்றுதல் ஊழலில் சேர்த்ததை ஒளிவின்றி செலவழித்தல் கள்ளச் சந்தையில் காசு பணம் சேர்த்தல் கலப்படத்தை நேர்த்தியாய் கைதொழிலாய் செய்தல் இயற்கையே மரித்ததால் இயலாமை தொடருதோ எங்கே போனது மனித நேயம் எப்படி வாழும் நீதியும் நியாயமும் சற்றே யோசிப்பீர் சந்ததிக்கு வாழ்வளிப்பீர்

ரசித்தவர்கள்