பருவமறியா பாலகன்.பாலச்சந்திரன்
பருவமறியா பாலகனை கொன்ற இருள் மனது கொலைகாரன் மடிவானா மக்களை இழப்பானா-வீட்டில் இடிவிழுந்து இலங்கையில் இறப்பானா குடிகெட்டு மதியிழந்து திரிவானா குடும்பமே பைத்தியமாய் அலைவாரோ இடுகாட்டில் தலை புதைத்து-தவறால் சுடும் தீயில் விழுந்து மடிவானா பிணம் தின்னும் குணம் மாறி மனம் திருந்தி வருந்து வானா மக்களை பார்த்து மண்டியிட்டுக்-கதறி மற்ற நாளையும் சிறையில் கழிப்பானா ஈர நெஞ்சமுள்லோர்அவன் கோர முகத்தை கிழித்து தீரத்தீர அடித்து துரத்தி-கோழையின் குடும்பமே அழியாதோ மடியாதோ