Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

அன்னையாய் போற்றுவோம் பெண்மையை !

இன்ப இரவை இனிமையாக முடித்துவிட்டு இன்றைய வேலையென்ன என்றெழுந்து இருப்பவரைத்  தெய்வமாக வணங்கி-தினமும் இதயம் மகிழத் தொடங்குவாள் சமையலை என்பிள்ளை என்குடும்பம் என்வீடென எந்திரமாய் இல்லாமல் அறிவார்ந்து நல்லாள் செய்வாள் நல்லுணவு சமைப்பாள்-எல்லோரும் நலம்வாழ  இறைவனையும் வணங்கிடுவாள் கணவனின் துயர் நீக்கும் காசுக்காக கண்ணியமான வேலைக்கும் சேர்ந்திடுவாள் கருத்தாகங்கே களப்பணியும் செய்திட்டு-எப்போதும் கருணையே வடிவான பெண்மையும்  போற்றிடுவாள் விரைவாக வந்திடுவாள் விழுதுகளைக் கண்டவுடன் வீட்டிற்குள் ஆனந்தமாய் நுழைந்திடுவாள் விரும்பியதை  ஊட்டி மகிழ்வாள்- பிள்ளைக்கு வீட்டுப்பாடம் சொல்லியும் துணைபுரிவாள். அன்பையே போதிக்கும்  அன்னைய வளுக்கு ஆத்திரமே வந்திட்டால் அத்தனையும் நாசமாகும் அகமறிந்து செய்திட்டால் அன்பே நிரந்தரமாம்-பெண்ணிடம் அன்போடு இருப்போம் அன்னையாய்ப் போற்றுவோம்

பாவி என்றால் யார்?

           பொதுவாக வழக்கத்தில் எல்லோருமே சொல்லக்கூடிய இந்த வார்த்தை ஆச்சர்யமாக வழக்கத்தில் சொல்வது.இதன் உண்மையான முழுப்பொருளும் தெரியுமா? பெரும்பாலும் எல்லோராலும் இவ்வார்த்தை தவிர்க்க முடியாத வார்த்தையாகி விட்டது.            அடப்பாவமே ,அடப்பாவி ,அடிப்பாவியே  என்று யாரையெல்லாம் அழைக்கிறோம் ஏன்? அவ்வாறு அழைக்கிறோம்  பாவி என்றால் என்ன பொருள்? என்ன அர்த்தம் ?. அடப்பாவமே என்றால் வருத்தப் படுவதாகவும், அடப்பாவி என்று கொடுஞ்சொல்லால்  திட்டுவதுபோலவும் அடிப்பாவியே எனும்போது மட்டும் தவறு செய்ததாக சொல்லுவதாயும் அழைப்பதேன் ?         பாவி,படுபாவி ,கொடும்பாவி என்று திட்டுவதற்கும் சொல்வழக்கம் உண்டு .ஏன் இங்கு திட்டுவதற்கு பாவி,படுபாவி,கொடும்பாவி என்று சொல்லுகிறோம் இதெல்லாம் எனக்கு விளங்கவில்லை  ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனி அர்த்தங்கள் இருந்தாலும் எல்லா வார்த்தைகளும் தவறான அர்த்தத்தை கொடுப்பதேன்.         தெரிந்தால் சொல்லுங்கள் அல்லது எனக்கு தெரிந்தப் பின்னர் நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்

வண்டின்சுவைத் தெரிவாயா ?.........

வண்டின் சுவைத் தெரிவாயா? -------------------------------------------- மல்லிகைப் பூ தொடுத்து மலராக அசைந்து வந்து சொல்லாமல்ச் சொல்லியதாய் செல்லமாய்ச் சீண்டுகிறாய் சிறைபிடித்துத் தாண்டுகிறாய் துள்ளி ஒடும் மானைப்போல தோகைவிரித்த மயிலைப்போல மேல்லபேசும் தேனிப்போல மெதுவாய் சொல்லும் வார்த்தையாலே மேனியெல்லாம் சிலிர்க்குதடி காரிகையே கற்கண்டே காலம் சொல்லும் பூச்செண்டே கற்பனையை கடந்து வந்து கட்டியணைக்க மாட்டாயா கனிரசத்தை உணர்வாயா உள்ளமெல்லாம் புஞ்சையாக உழவனுக்கு மழையாக எண்ணிகொள்ளத் தோனுதாடி ஏக்கமின்னும் கூடுதடி என்னருகே செல்லும்போது வானமின்று வெளிச்சமழை வந்திறங்கும் நேரமுன்னே வாசமுல்லை மார்கழியே வந்தென்னை அணைப்பாயா வண்டின்சுவைத் தெரிவாயா

அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்    இந்த பழமொழி உண்மையா? தெய்வத்திற்கு பரிகாரம் செய்தால் சரியாகிவிடாதோ? அப்புறம் எப்படி இந்த பழமொழி சரியானதாகும்.அந்த காலத்தில் சொன்ன பழமொழி  அனைத்துக்கும்  அர்த்தம் உண்டென்றால்  அருகிலுள்ள உறவுகளை அழித்தவனுக்கு என்ன தண்டனையை தெய்வம் தரப்போகிறது.          சின்னஞ்சிறுசு முதல் பெண்கள், ஊனமுற்றவர்கள், சிறப்பாக வாழ்ந்திருந்த முதியவர்கள் வரை எண்ணிலடங்கா மனித உயிர்களை அழித்தொழித்த படுபாதகனுக்கு  அந்த ஆண்டவன் என்ன தண்டனையை கொடுக்கப் போகிறார்      அதற்காக பரிகாரம் செய்தால் எல்லாமே சரியாகிவிடுமே இதுதானே இந்து புராணங்களும் இதிகாசங்களும் சொல்கிறது. பெரும்பாலும் எல்லா மதங்களும் வருந்தி பாவமன்னிப்புக் கேட்டு விட்டால் சரியாகி விடுவதாகவே  சொல்கிறது. அப்புறம் எப்படி தெய்வம்  தண்டனை கொடுக்கும் அவன் எப்படி அழிவான் .இறந்தவர்களின் ஆத்மா எப்படி சாந்தியடையும்.        ஒருத்தனை பத்துபேர் சேர்ந்து கொல்வதும் பச்சிளங் குழந்தையை தெருவில் வீசிவிட்டு செல்வோர்க்கும் கற்பழிப்பு குற்றம் செய்வோருக்கும்  கலப்படம், கொள்ளை, பதுக்கல் இன்னும் நாட்டில் நடைபெறும் எ

ஆட்டோக்கார அண்ணாச்சி....

ஆட்டோக்கார அண்ணாசி அறிவியல் கணக்கு என்னாச்சி ஆயில் அதிகமா போடுறதாலே-கண்ணு அரிப்பு அதிகமா போயிடுச்சி சந்துபொந்தா போகுறீங்க சாகசமெல்லாம் செய்யுறீங்க கண்ணு எரியும் புகைய விட்டு-மக்களுக்கு கண்ணீரையும் வரவைக்கிறீங்க மோட்டார் சைக்கிலபோறவங்க முகத்திரையும் வீனா போச்சு மூச்சு முட்டி நிக்கிறதும்-திட்டி முனகிகிட்டே போக வைக்கிறீங்க சுவாசகோளாறு உள்ளவங்க மூச்சுவிட முடியலிங்க சுற்று சூழல் பாதுகாக்க-நீங்களும் சுகாதாரம் பற்றி யோசிங்க

ரசித்தவர்கள்