அன்னையாய் போற்றுவோம் பெண்மையை !
இன்ப இரவை இனிமையாக முடித்துவிட்டு இன்றைய வேலையென்ன என்றெழுந்து இருப்பவரைத் தெய்வமாக வணங்கி-தினமும் இதயம் மகிழத் தொடங்குவாள் சமையலை என்பிள்ளை என்குடும்பம் என்வீடென எந்திரமாய் இல்லாமல் அறிவார்ந்து நல்லாள் செய்வாள் நல்லுணவு சமைப்பாள்-எல்லோரும் நலம்வாழ இறைவனையும் வணங்கிடுவாள் கணவனின் துயர் நீக்கும் காசுக்காக கண்ணியமான வேலைக்கும் சேர்ந்திடுவாள் கருத்தாகங்கே களப்பணியும் செய்திட்டு-எப்போதும் கருணையே வடிவான பெண்மையும் போற்றிடுவாள் விரைவாக வந்திடுவாள் விழுதுகளைக் கண்டவுடன் வீட்டிற்குள் ஆனந்தமாய் நுழைந்திடுவாள் விரும்பியதை ஊட்டி மகிழ்வாள்- பிள்ளைக்கு வீட்டுப்பாடம் சொல்லியும் துணைபுரிவாள். அன்பையே போதிக்கும் அன்னைய வளுக்கு ஆத்திரமே வந்திட்டால் அத்தனையும் நாசமாகும் அகமறிந்து செய்திட்டால் அன்பே நிரந்தரமாம்-பெண்ணிடம் அன்போடு இருப்போம் அன்னையாய்ப் போற்றுவோம்