நான் புலமை அறிந்தப் புலவனில்லை
இலக்கணம் முழுதாய் கற்றவ னில்லை இலக்கியம் நாளும் படிப்பது மில்லை வழக்கிலே வருகின்ற மொழியாலே-தமிழ் வார்த்தைக் கொண்டே எழுதிடும் நானே புலமை அறிந்த புலவனு மில்லை பொழுதும் எழுதும் கவிங்ஞனு மில்லை அனைத்தும் தெரிந்த அறிங்ஞனு மில்லை-வழக்கில் அறிந்ததை கொண்டேஎழுதுவதென் நெல்லை முனைவராய் நானே படித்தது மில்லை முறையே தமிழைக் கற்றது மில்லை பிழையாய்க் கருத்தைச் சொல்வதுமில்லை-இதையே பிழைப்பாய்க் கொண்டு வாழ்வது மில்லை பணியால் முடங்கி போகும் போதும் பார்பவர்க் கலங்கி வருந்தும் போதும் துணையாய் நின்று ருகும் போதும்-எனக்கு துன்பம் மறக்கக் கவிதை எழுதுகிறேனே அறிந்தோர் என்னை அறியச் செய்வீர் அதையும் நன்கு திருந்தச் சொல்வீர் புரிந்தோர் நிலையை புரிந்து கொண்டு-கவிதை புனையத் தொடர்ந்து புகழைத் தாரீர்