மழையப் பார்த்து ஏங்கிடுச்சு கண்ணி ரண்டும் பூத்திடுச்சி மேக மெல்லாம் ஓடிப்போச்சு மேனி யெல்லாம் எரிஞ்சிடுச்சி குளமெல்லாம் வத்திப் போச்சு கொக்கு நாரை அதிகமாச்சி வயலெல்லாம் காஞ்சி போச்சு ஆடு மாடு மேஞ்சிடுச்சி நில மெல்லாம் மனைகளாச்சு நிறைய வீடு வந்திடுச்சி நில மற்று போனதாலே உழவன் வாழ்க்கை மடிஞ்சிடுச்சி மனதெல்லாம் மாறிபோச்சு மனிதநேயம் குறைஞ்சிடுச்சி பணத்துக்காக அடகு வச்சு கனத்த வட்டி வளர்ந்துடிச்சி இனத்துச் சண்டை வந்துடிச்சு இதய மெல்லாம் நொறுங்கிடுச்சி தேச நலன் குறைஞ்சிடுச்சி தேவை மட்டும் மாறிடுச்சு உணர்ச்சி யெல்லாம் மழுங்கிடுச்சி உண்மையன்பு தேய்ந்சுபோச்சு உருப்படியாய் சேர்ந்து வாழும் உறவு மின்று செத்துடிச்சு