Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

பச்சைக் கீரையைப் பார்த்தவுடன்

Image
                                               பச்சைக் கீரையைப் பார்த்தவுடன் நிச்சயம் உண்ண மனம் வருதே அதிக விலையில் விற்பதில்லை அதையும் சிலரோ விரும்பவில்லை பார்த்தால் நம்மைக் கூப்பிடுமாம் பக்கத்தில் போனால் நாறிடுமாம் பயந்தே வாங்கி சமைத்தாலே பலனோ வருவது நோய்நொடியாம் மழையில் பணியில் அதிகமாக மலிந்த விலையில் கிடத்திடுமாம் மனதோ உண்ணத் துடித்திடுமாம் மறுபடி மீண்டும் தடுத்திடுமாம் குப்பை மேடு கழனிகளில் குளிர்ச்சியாக மிகுந்தே வளர்ந்திடுமாம் கோழி ஆடு மாடுகளும் விரும்பி  குனிந்தே அதையும் திண்ணுடுமாம் இப்போ நிலைமை அதுவில்லை இயற்கை உரமோ போடவில்லை செயற்கை மருந்தை தெளிப்பதனால் சீக்கிரம் வளர்ந்தே விடுகிறதாம் இயற்கையை மாற்றி வருவதனால் இழப்போ மனித உயிர்தானே இனிமேல் கீரையை விளைவிக்க இயற்கை உரங்களை போடுங்களேன்

மலையில் சிவனைக் கண்டிடவே....

Image
                          (நன்றி-கூகிள்) மலையில் சிவனைக் கண்டிடவே மனதில் அமைதிக் கிடைத்திடவே துணையும் உறவும் மகிழ்ந்திடதே தூரப் பயணம் செய்தனரே காட்டில் மரங்களை வெட்டியதால் கட்டடம் பலதும் கட்டியதால் ஏட்டில் சொல்ல இயலாத எண்ணில் அடங்கா உயிரிழப்பை இத்தனை உயிர்கள் மடிந்ததை இப்படி நடந்தது எச்செயலால் கற்பனை கெட்டா உயிரிழப்பு கண்டதும் மனது கொதிக்கிறதே ஊருக்கும் உறவுக்கும் தெரியாது உயிரைத் துறந்த நல்லோர்கள் உடலைக் கூட காணாத உண்மை நிலையை அறிவீரா மக்கள் மனதைக் காயமாக்கும் மடமையான இச்செயலால் மனதும் இப்போ வலிக்கின்றதே மழையோ அதையே சொல்கிறதே இயற்கை வளங்களை காத்திடுவோம் இனியே அதனை போற்றிடுவோம் செயற்க்கையாலே வரும் துயரை சீக்கிரம் தடுத்து முறியடிப்போம் மரங்கள் அருகில் வளர்த்திடுவோம் மலைவளம் நன்றே காத்திடுவோம் இயற்கை செய்யும் பேரிழப்பை இனிமேலாவது தடுத்திடுவோம்

உலகமே உறவாகிவிட்டது

உலகமே உறவாகி விட்டது உரிமையுள்ள துணையாகி விட்டது வலைப்பக்கம் தினம் வராவிட்டால் வருத்தமாகி மனம் தவிக்கின்றது இளமைக்கும் முதுமைக்கும் இதுவே இன்பமான தளமாக உள்ளது எத்திசையும் உறவு கொள்ள ஏழுகடல் தாண்டியும் இணைக்கின்றது எண்ணங்களைப்  பகிர முடிகிறது எழுத்துலகில் நீந்தத் துடிக்கிறது சின்ன வயது பையனோடும் சரிசமாய் பேசத் துடிக்கின்றது புதுஉலகம் புதுஉறவை பார்க்க புத்தகமாய் நினைவைக் கோர்க்க எத்தனையோ தூரத்துக்கும் செல்கிறது எழுத்துலகே என்னையும் ஈர்க்கின்றது இத்தனைநாள் மறைத்து வைத்த இன்பமான தருணத்தை ரசிக்கின்றது இனிமையான நினைவுகளை இப்போதும் இனிமையாக எழுத முடிகின்றது

எனக்கும் பெண்ணைப் பிடிக்கும்...

சின்ன வயதில் எனக்கு சிரித்துப் பேசிப்பழக பிடிக்கும் எண்ணமதைக் கவிதையாக எழுதிப் பார்க்கப் பிடிக்கும் வஞ்சிக்கொடி இடைப் பிடிக்கும் வண்ண வண்ண உடைபிடிக்கும் கொஞ்சிப் பேசும் எண்ணமுடன் கூடிப்பேசும் இடம் பிடிக்கும் தஞ்சம் தேடும் விழியாளின் தாக்கும் பார்வைப் பிடிக்கும் தள்ளி நின்று அவளருகே தஞ்சம் கேட்கப் பிடிக்கும் நித்திரையில் அவள் வந்து நினைவதில ணைக்கப் பிடிக்கும் நீண்ட நேரம் கனவுலகில் நேர்மையாக பழகப் பிடிக்கும் நல்ல நல்ல கவிதைகளை நண்பியிடம் சொல்லப் பிடிக்கும் நீண்டநேரம் பேசுகின்றப் பெண் நட்பினையும் எனக்குப் பிடிக்கும் அஞ்சி நின்று குறுகுறுன்னு அவளிழிதலை சுவைக்கப் பிடிக்கும் ஐந்திரண்டு நிமிடம் அவளழகை ஐயத்தோடு ரசிக்கப் பிடிக்கும் எத்தனையோ சொல்ல வேண்டும் என்நினைவை அழைக்க வேண்டும் பொக்கிசமாய் நினைவுகளை புனிதமாக போற்றவேண்டும் பாடவேண்டும்

கல்விப்பணி செய்வீரே....

நல்ல உள்ளம் கொண்டோரே நாளும் மகிழ்ச்சியைக் கேட்போரே இல்லா நிலையில் உள்ளோர்க்கு இதயம் கனிந்தே உதவிடுங்கள் கல்விப் பணியைச் செய்திடுங்கள் கருணைக் கொண்டே வாழ்ந்திடுங்கள் நல்லச் செயலைச் செய்வதற்கு நான்குபேரைத் தத்தெடுங்கள் காசுப் பணமாய் கொடுக்காமல் கட்டணம் மட்டும் செலுத்தினாலே பேசும் உலகம் உங்களையே போற்றி மகிழும் நற்செயலை இன்றைய நாளில் தவிப்போரை இயலா நிலையில் உள்ளோராம் அருகில் சென்று கேட்டறிந்து அவரை உயரச் செய்வீரே கல்விப் பணியை முடிந்தவரை கடமையாகச் செய்து வந்தால் எல்லா தெய்வமும் துணைவந்தே ஏற்றம் நன்றாய் கொடுத்திடுமே

ரசித்தவர்கள்