Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

கணினியைத் திறந்தால்............

Image
(நன்றி கூகிள்) விடியலைக் கண்டதும்          வேகமாய்த் தேடினேன் விளக்கைப் போட்டதும்         விசையை அழுத்தினேன் தனக்குள்ளே சிரித்து        தகவலாய் வந்தது கணக்குப் பார்க்க        கணினியைத் திறந்தால் கண்டவர் எண்ணிக்கை         காண்டேன் இருநூறு கொண்டேன் கவலை        குறைய வேண்டாமென தமிழ்மணம் சென்றேன்     தளத்தினைப் பார்த்தேன் அமிழ்தாய் வேண்டும்     அப்போதே கைஅமுக்கி இதழ்த் திறந்து       இனிய வாக்கிட்டேன் புனிதமாய் போற்ற          கணினிதான் எனக்கு இனிமையைத் தருது          இன்னலைமறக்குது மனதும் மகிழுது           மாலையிலும் தொடருது தொடந்து வரவே           தினமும் விரும்புது தூக்கம் என்னை           தவிக்கவும் விடுது அறியாத நிகழ்ச்சிதான்           ஆனாலும் மகிழ்ச்சிதான்

விலை பேச வேண்டாமே...

விழியோரம் கண்ணீர் விரலாலே தட்டி விட்டேன் விதியாக வந்த சொல்லை விதி மாற்ற முடியுமா கதை தோறும் காட்சியும் கண்டதாய் சொன்னபோது கதை மாறிப் போகுமா கதையென்றே மாறுமோ சினம்கொண்டச் செயலால் சிதைத்து விடும் மனதையே சீர்நோக்கிப் பார்த்தாலே சீக்கிரமே புரியாதோ விலைப் பேச வேண்டாமே விதி மாற்றக் கூடாதே மதியாலே மாறிவிடு மக்களையே வாழவிடு விலைபோயிப் பயனென்ன விடிந்ததுமே சேதிவரும் உலைவாயை மூடினாலும் ஊர்வாயும் மூடாதே கலையாக பார்த்தாலே கல்வியும் மகிழ்ந்திடுமே கடவுளாம் சரஸ்வதியும் கருணை வழி காட்டுமே

உடல் முழுதும் வியர்த்தாலும்.....

Image
   (நன்றி கூகிள்) பாய்ந்து வரும் காளையது பார்தவுடன் வியந்து விடும் பருவமான  உடல தனால் புகுந்து விளையாடி வரும் கருப்பு வெள்ளை நிறமாக காளையது துணிந்து நிற்கும் கன்னியரைக் கண்டுவிட்டால் கழுத்தை தூக்கி முட்டவரும் ஊர் முழுக்க நின்றாலும் உரியதையேத் தேடிவிடும் உள்ளமதைக் கொள்ளை யாக்கி உறவுக்காக் ஏங்கி நிற்கும் பரிதவிக்கும் நிலத்திலே  பக்குவமாய் விதை விதைக்கும்  பாத்தியிலே விதைத்து விட்டு பாதயதைத் தேடித் போகும் உருவமதைக் கண்டவுடன் உடல் முழுதும் வியர்த்தாலும் விதியதனை எழுதி விட்டு விரைவாகப் பதுங்கி விடும்

புலவர்.ராமநுசம் அய்யா அவர்களின் ஐரோப்பிய நாடுகளின் இன்பச் சுற்றுலா தகவல்கள்

Image
நமது புலவர்.ராமநுசம் அய்யா   வலையுலக நண்பர்களுக்கு வணக்கம், நமது பதிவுலகின் மூத்தப் பதிவர் திரு.ராமநுசம் அய்யா அவர்கள்.தமிழ்நாடு அரசுப்பணியில் மூத்தத் தமிழ் பேராசிரியராக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரிந்தார். அவரின் தீவிர முயற்சியால் தமிழாசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்த் தகுதியும் பலருக்குப் பதவி உயர்வும் கிடக்கக் காரணமாய் இருந்தார், தமிழுக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தி தமிழாசிரியர்களின் மனதிலும் வாழ்விலும் மறக்கமுடியாத தொன்றாற்றி வந்தவர். இன்றளவும் தமிழ்மீது தீராக்காதலுடன்  முகப்புத்தகத்தில் தினமும் வலம் வரும் இளைங்கனாகவும் தொடந்து தமிழ்க் கவிதைகளை இலக்கணத்துடன்  எழுதியும் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அய்யா அவர்கள்   தமிழ்ப் பதிவர்களை ஒன்று திரட்டும் முயற்சியாக பதிவர்த் திருவிழாவை சென்ற ஆண்டு நடத்தியதுடன் இந்த ஆண்டு 01.09.2013 ல் நடைபெற  உள்ள தமிழ்ப் பதிவர் விழாவையும்  சிறப்பாக நடத்த அறிவுரைச் சொல்லி  வருகிறார். அய்யா அவர்கள் தற்போது 02.08.2013 முதல் வெளிநாட்டுப் பயணத்தை  நாற்பதுபேர் கொண்ட குழுவுடன் தொடங்க  இருக்கிறார்.அய்யாவின் வருகையை  எதிர்பார்த

வாலி நீ கடலாழி....

Image
                  ( நன்றி)   வாலி நீ..... கடலாழி பாட்டில்... பண்பில் வறுமை சொல்லா கவிஆழி பண்ணும் பாட்டும் படைப்பாய்நீ பகுத்தறிவும் சொன்ன பெரியார்நீ இளமை துடிப்பில் என்றுமேநீ ஈடில்லா கவிமழை தந்தாய்நீ ஆண்டவன் கட்டளை அறிந்தவன்நீ அன்னைத் தந்தையை மதித்தவன்நீ கவிதைப் படைப்பில் வல்லவன்நீ தமிழுக்குஅணிகலன் சேர்த்தாய்நீ எப்போதும் ...... எல்லோர் மனதிலும் தமிழாய் வாழும் கவிஞன்நீ

ரசித்தவர்கள்