கணினியைத் திறந்தால்............
(நன்றி கூகிள்) விடியலைக் கண்டதும் வேகமாய்த் தேடினேன் விளக்கைப் போட்டதும் விசையை அழுத்தினேன் தனக்குள்ளே சிரித்து தகவலாய் வந்தது கணக்குப் பார்க்க கணினியைத் திறந்தால் கண்டவர் எண்ணிக்கை காண்டேன் இருநூறு கொண்டேன் கவலை குறைய வேண்டாமென தமிழ்மணம் சென்றேன் தளத்தினைப் பார்த்தேன் அமிழ்தாய் வேண்டும் அப்போதே கைஅமுக்கி இதழ்த் திறந்து இனிய வாக்கிட்டேன் புனிதமாய் போற்ற கணினிதான் எனக்கு இனிமையைத் தருது இன்னலைமறக்குது மனதும் மகிழுது மாலையிலும் தொடருது தொடந்து வரவே தினமும் விரும்புது தூக்கம் என்னை தவிக்கவும் விடுது அறியாத நிகழ்ச்சிதான் ஆனாலும் மகிழ்ச்சிதான்