Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

நண்பனே நீயும் நலமா?

நண்பனே நீயும் நலமா நங்கையின் உடலும் சுகமா பண்பனே ஏன் பதறுகிறாய் பயனின்றி ஏன் அழுகின்றாய் உன்துணை நண்பர்கள் இருக்க ஊராரும் உறவுகளும் உதவ பெண்துணை  பிணியும்தீரும் பிறந்திடும் நல்கால முனக்கே சிந்தனை முற்றும் மறந்திடு சேர்ந்திட்ட நட்பால் மகிழ்ந்துடு கந்தனை கடம்பனை நினைத்திடு கஷ்டமும் விலகிடும் தெரிந்திடு இத்துணை மக்கள்  வாழ்கையில் இல்லா துயரம் பார்த்தாயா இதுவும் உனக்கு  சோதனையே இனிமேல் தீர்த்திடும்  வேதனையே தனமாய் தருவார் நண்பர்களே தயவாய் இருப்பார் சொந்தங்களே பிணியும் தீர்த்திடும் உள்ளத்திலே பிறகேன் கவலை வாழ்கையிலே

காவிரித்தாயின் வருகையும் கண்கொள்ளாக் காட்சிகளும்

Image
நான் கடந்த  வாரம்எனது மகிழுந்தில்  ஒகேனக்கல் செல்வதாய் திட்டமிட்டு தருமபுரி வழியாக பெண்ணாகரம் என்ற ஊர் சென்று ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் குளிக்கலாமென ஆவலோடு சென்றேன் .ஆனால் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக வழியிலேயே காவல்துறையினர் அன்போடு மறுத்தார்கள்.ஆனாலும் சில கட்டுப்பட்டுகளுடனும் அங்கு சென்றாலும் குளிக்க தடை இருப்பதால் அனுமதிக்க மாட்டர்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.அவர்கள் சொல்லியதுபோல் அருவிப் பக்கம் யாரையுமே அனுமதிக்கவில்லை.அங்கே  கடை வைத்தவர்களையும் அனுமதிக்கவில்லை.எக்கசக்க கட்டுப்பாடு  இருந்தாலும் வேறு வழியாக நீர் வரும் வழியில் சென்றுப் பார்த்து மகிழ்ச்சி அடைந்ந்தோம். நீர் வரத்து அதிகமாக இருகரைகளையும் அடக்கி கரைபுரண்டோடியது  கண்டதும் பயமும் தொற்றிக் கொள்ள  குளிக்க முடியாமல் திரும்பினோம் ஒகேனக்கல் அருவி அருகே எடுத்தப் படங்கள் ஒகேனக்கல் சென்று விட்டு மீண்டும் பெண்ணாகரம் வந்து மேச்சேரி வழியாக மேட்டூர்அணை அணையாவது பார்க்கலாம் என்று வந்தால் அணையை ஒட்டிய பதினாறு கண் வழியே செல்லவும் தடை இருந்ததால் .மேட்டூர் அணை நிரம்பி வழிந்த காட்சியைப் பார்த்துவிட

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" இந்த பழமொழியை அறியாதவர் சொல்லாதவர் பெரும்பாலும் இருக்க முடியாது.காரணம் இதன் தனித்துவம் அப்படி.எல்லா விசயங்களிலும் எல்லோரும் சொல்லும்படியாய் இருக்கும் சாப்பிடும் உணவாக பழமாக மேலும் நட்பாக, எதிரியாக,கோபமாக ,சொல்லாக இருந்தாலும் தொழிலாக ,பயணமாக ,தூக்கமாக ஏக்கமாக இப்படியே நிறைய விசயங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். என்ன இருந்தாலும் தமிழ்ப் பழமொழியை நமது சொல்லாடல் சிறப்பாக சொல்லவே இப்படி பழமொழிகள் மூலம்  நமது முன்னோர்கள் சுருங்க சொல்லி விளங்க வைத்தார்கள்.ஆயிரம் அர்த்தங்களை இரண்டே வரிகளில் ரத்தினச் சுருக்கமாக சொல்லிய நமது வள்ளுவர் பெருமான்கூட இதுபற்றி சொல்லி இருக்கிறார். நாம் உண்ணும் உணவு நமது உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது  என்பது உண்மைதான்.அதற்காக எப்போதும் எல்லா உணவு வகைகளையும் பிடிபிடியென்று சாப்பிட்டு  விட்டால் செரிமானம் செய்ய நேரமும் காலமும் இருக்காது அதனால்தான் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அவயங்களைப் பாதிக்கிறது என்பது எவ்வளவு உண்மை. அதுபோலவே பணம் பணம் பணம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் முடிவு என்பது நமது என்னத்தைப் பொறுத்தத

கண்தானம் செய்வீர்.........

Image
                 கண்ணே விழியே கயல்விழியே காண்பது அனைத்தும் உன்எழிலே என்னே சிறப்பு நான் பார்க்க எப்படி இறக்கும் நீ நோக்க எங்கினும் கண்டிடும் எழிலழகை எல்லா நிறத்தின் கலையழகை அறிந்தவர் தெரிந்தவர் அனைவரையும் அறியத்தானே கண் படைத்தான் இப்படி சிறந்த அவயத்தை எப்படி வீணாய் அழித்திடலாம்  இறந்தும் தானம் கொடுத்திட்டால் எழிலை மீண்டும் பார்த்திடலாம் ஆணோ பெண்ணோ அனைவருமே  அவயம் உதவும் மனமிருந்தால் கண்ணின் மணியைத் தந்திடலாம் கடவுள் படைப்பாய் வாழ்ந்திடலாம் இறந்ததும் உலகம் இருண்டதாய் இப்படி நாமேன் யோசிக்கணும் இரண்டு விழிகளும் தானம்செய்வீர் இருவர் வாழ்வில் ஒளிகொடுப்பீர் இதயங்கள் போற்ற வாழுங்கள் இறைவனின்செயலைச் செய்யுங்கள் விழியே இன்றி வாழ்வோருக்கு விடியல் கிடைத்திட உதவுங்கள்

சுற்றமும் நட்பும் எங்கே?

சுகம்வரும் செல்வமும் சேரும் சுற்றமும் நட்பும் சூழ்ந்துவரும் அகம் மகிழ அன்புடன் தேடிவரும் அனைத்தும் மகிழ்ந்தே  பணம்தரும் வினைசேரும் விதியும் மாறும் வீழ்ச்சி கண்டபின்னே தேடும் விடியலே கேள்வி கேட்கும் விரும்பிய எல்லாமே போகும் சுமையோடு கடன் சேர்ந்தால் சுற்றம் எங்கே நட்பு எங்கே சோதனையை மறப்பதெங்கே சொந்தமும் சென்ற இடமெங்கே நிம்மதி எங்கே  நீதிஎங்கே  நித்தமும் மகிழ்ந்த நண்பநெங்கே பணம் எங்கே பாசம் எங்கே பகைவனைத் தவிர தெரிந்தவனங்கே அற்பமாய் வாழும் வாழ்க்கையை அன்றே மறந்து திருந்திடு ஆணவம் அழியும் நேரத்தில் அதிசயம் நடக்கும் புரிந்திடு  உலகம் ஒருநாள் மாறும் உள்ளம் மகிழ்ச்சியில் சேரும் கஷ்டமும் தீர்ந்தே இனிமேல் கவலை எனக்கும் தீரும் நேற்றைய வாழ்வும் உணமையல்ல நடந்ததும் முடிந்ததும்  வாழ்க்கையல்ல நேர்மை மட்டுமே நிரந்தரமாய் நித்தமும் என்னையே  மாற்றிடுமே நானும் ஜெயிப்பேன் வாழ்வேன் நன்றிமறாவா நண்பனாய் இருப்பேன் நாவில் நல்லதை சொல்வேன் நாடும் போற்றிட வாழ்வேன்

ரசித்தவர்கள்