Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

கண் கண்ணாடியைக் காணவில்லை

கண்கண்ணாடியைக் காணவில்லை கண்டு பிடிக்க முடியவில்லை கண் அழற்சியானதால் எப்போதும் கண்சிவந்து எரிச்சல் தாளவில்லை இல்லத்தார் எல்லோரும் கண்டுபிடிக்க இண்டு இடுக்கு  இடமெல்லாம் இரண்டு நாளாய்த் தேடுகிறோம் இயலவில்லை இருக்குமிடம் தெரியவில்லை நாவறண்டு கத்தினாலும் முடியாது நாநயமாய் பேசினாலும் வந்திடாது நான்வைத்த இடத்தைக் காணாமல் நண்பர்கனிடம் சொன்னாலும் கிடைக்காது மூன்று வயது நினைவுகூட முந்தி கொண்டு வருகிறது மூக்கில் மாட்டும் கண்ணாடியின் மூடிப்போன இடம் தடயமில்லை பேயறைந்த முகத்தைப் பார்த்து பேரன் பேத்தி  சிரிக்கிறார்கள் பேந்த பேந்த முழிப்பைப் பார்த்து பேருதவி மனைவியும் செய்கிறார்கள் வீட்டுக்கு வந்தவரின் கதையை விருப்பமின்றிச் சொன்னபோது  நானும் விட்டுவிட்ட பொருள் கணக்கை விபரமாகச் சொல்ல முடியவில்லை

பாம்பையே படம் பிடித்தேன்

Image
மைசூர் பயணம் தொடர்ச்சி ......  நாங்கள் அனைவரும் மைசூரிலுள்ள மிருக காட்சிச் சாலையில் ஒவ்வொரு பகுதியாக சென்று வந்தோம்.அப்போது மதிய நேரம் என்பதால் பெரும்பாலான விலங்குகள் தூங்கிக் கொண்டிருந்தன.என்னைபோல சுறுசுறுப்பாய் சிலதும் இருக்குமே என்றுதான் அந்தப் பகுதிக்குச் சென்றோம்.   ஆம் ,நகரத்து நண்பர் பாம்புகள் இருக்கும் பகுதிக்குச் செல்லலாம் என்று அடம்பிடித்தார் . ஒரு கண்ணாடிப் பெட்டி அருகே  நண்பர்களை வழக்கம்போல நானே படம் பிடித்தேன். அப்போது ....... ""பின்னாடிப் பாம்பு " என்று சொன்னதும் எல்லோருமே அங்கிருந்து துள்ளி ஓடி வந்தார்கள்.நான் அந்த பாம்பு நீளமாய் கண்ணாடிக்குள்ளே ஊர்ந்து சென்றதை கூறியதும் அப்படியா நாங்கள் மிக்கப் பயந்து  விட்டோம் என்றார்கள். என்னோடு வந்த நன்பர்கள் ஆமாங்க சிங்கமேதான்  என்னைப் பார்த்துப் பயந்துடிச்சி ராஜ நாகம்  நலம் விசாரித்தது மலைப்பாம்பு அமைதியானது மைசூர்  அரண்மனை  சூரியனின் காலை வணக்கம்                                                  மைசூரும்  மாலை நேரமும்                        நிமிசம்மா கோயில

மைசூர் பயணமும் படங்களும்

Image
நான் கடந்த வாரம் மைசூர் சென்றிருந்தேன்  அங்கு நான்கு நாட்கள் நண்பர்களுடன் தங்கி மகிழ்ந்தேன்  எல்லா இடங்களும் சென்றேன் இதயம் மகிழ்ந்து திரிந்தேன் அருள்மிகு சாமூண்டீஸ்வரி அம்மன் ஆலையம் எனது அலுவலக நண்பர்களுடன் நான் நந்திக்கோயில் மிருகக் காட்சிச்சாலை விலங்குகளைக் காண சென்ற ஊர்தி என்னைக் காண ஆவலாய் வந்த பாம்பு மைசூர் அரண்மனையின் முகப்புத்தோற்றம் மைசூரின் அதிகாலைத் தோற்றம் இம்மாதம் நடக்கவிருக்கும் தசரா விழா ஏற்பாடுகள் இன்னும் நிறைய படங்கள் எடுத்திருந்தேன்  எல்லாமே என்னால் பதிவிட முடியவில்லை முடிந்தால் விரும்பினால் மீண்டும் பதிவிடுகிறேன் ---கவியாழி--

பதிவர் விழாக் கணக்கு சரிபார்ப்புக் கூட்டம்

Image
விழுந்து விழுந்து சிரிக்கும் கே.ஆர்.பி.செந்தில், மதுமதி,கவியாழி,அரசன்,மெட்ராஸ் பவன் சிவகுமார்,ஸ்கூல் பையன் .சரவணன்,ஆரூர்.மூனா.செந்தில்.,ரூபக் ராம்,மின்னல் வரிகள்,பாலகணேஷ்,புலவர் அய்யாவைக் காணவந்த எனது நண்பர்.செல்லப்பா.ஆகியோருடன் வணக்கத்திற்குரிய அய்யா.ராமாநுசம்

இயற்கைச் சூழலை ரசியுங்கள்

இயற்கை சூழலை ரசியுங்கள் இனிமை கிடைப்பதை உணருங்கள் இன்பம் தேடிச்சென்றாலே எப்போதும் இளமை கொண்டே வாழலாம் கண்கள் குளிர்ச்சி கொள்ளும் கனத்த மனதும் லேசாகும் அங்கம் முழுதும் மகிழ்ச்சியால் அடையும் நன்றே உணர்வாலே மலையில் மரங்களைக் காணுங்கள் மகிழ்ச்சி கிடைத்திடும் நம்புங்கள் இலைகள் தழைகள் பசுமையாய் இன்பம் தந்திடும் இளமையாய் பசுமை மாறா காட்டிலே பாய்ந்து தாவிடும் குரங்குகள் பறந்து பேசிடும் பறவைகள் பார்க்கும் திசையிலே இன்பமே மான்கள் துள்ளி ஓடிடும் மயில்கள் தாவி களித்திடும் முயல்கள் ஒளிந்தே ஓடிடும் உள்ளமும் தூய்மை யாகிடும் அடிக்கடி வெளியே செல்லுங்கள் ஆனந்தம் மிகுவதைக் காணுங்கள் குடும்பம் அனைவரும் சேர்ந்தாலே குறையும் கஷ்டங்கள் தன்னாலே

ரசித்தவர்கள்