Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

ஓய்வு கொடுக்க வேண்டுமா

Image
ஆண்டுகள் பதினெட்டும்  என்னோடு ஆனந்த பயணம் செய்துவந்த அடிக்கடி நிற்காதக் களைக்காத ஆதவனின் நண்பன் கடிகாரம் வேதனையும் நாளும் கண்டவன் வேடிக்கை பலதும் பார்த்தவன் வீறிட்டு அழத்தெரியாத  பண்பன் வேகமாய் செல்லாத துணைவன் சாப்பிடும் நேரம் சொல்பவன் சாதனைக் கண்டே ரசித்தவன் சரிநிகர் சமமாய்  இருந்தவன் சங்கடம் பலதும் கண்டவன் அடிக்கடிப் பார்த்திடும் கடிகாரம் ஆன்மா இல்லாத அவதாரம் அனைவரும் விரும்பும் பலநேரம் அதுவே எல்லோருக்கும் ஆதாரம் உடலோடு உறவாட தவறவில்லை உயிரின்றி  என்றுமே நின்றதில்லை உள்ளமும் என்றுமே வெறுத்ததில்லை உறவாக என்னையும் பிரிந்ததில்லை ஓய்வு வேண்டியே விரும்பியே ஓடிக்கொண்டே இருந்தாலும் வயதால் ஒளியிழந்து கையில் துடிக்கிறான் ஓய்வு கொடுக்க வேண்டுமா ------கவியாழி------

வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது

வலைப்பக்கம் தினமும் பார்க்காவிட்டால் வருத்தம் மிகுந்தே  தொடர்கின்றது வாழ்கையில் இழந்ததாய் நினைக்கிறது வேதனை மிகுந்தே தவிக்கின்றது எண்ணங்களைப்  பகிர்ந்து கொண்டு  எழுத்துலகில் நீந்தத் துடிக்கிறது சின்ன வயது பையனோடும் சேர்ந்திருக்க இன்றும்  முடிகின்றது  இத்தனைநாள் மறைத்து வைத்த இன்பமான தருணத்தை ரசிக்கின்றது இனிமையான நினைவுகளை நன்றே  இப்போதும் எழுத துடிக்கின்றது வெளிநாட்டு உறவின் வேதனையும் விருப்பமில்லா வாழ்வின் அவசியமும் வேடிக்கைக் காட்டிச் செல்கிறது வேதனை பலதும் மறைகிறது வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது வசந்தமும் மீண்டும் தொடர்கிறது வயதும் வேண்டி நினைக்கிறது வாழ்க்கைச் சிறப்பாய் நகர்கிறது =====கவியாழி=====

தீண்டாத இரவுகள்.......

மழையும் அடிக்கடி  வருவதால் மனதும் துடிக்குது  தேடுது மாலை ஆவதும் முன்பே மயக்கமும் வருது  தொடருது காரமாய் சாப்பிடத் தோணுது காண்பதை யெல்லாம்  விரும்புது காற்றையும் மீறியே அனலாய் காத்தும் மூக்கிலே  வருகிறது சூரியன் பார்த்ததும் மறையுது சுகமாய் மறைந்தே போகுது சில்லுன்னு காத்தும் வீசுது சீக்கிரம் போர்த்திக்க ஏங்குது துணையும் தேடிடும் நேரத்தில் தூறலும் அவசரம் காட்டுது தொடரவே வேண்டுது  விரும்புது தொடக்கமே மகிழ்ச்சியாய் இருக்குது நறுமணம் வீசுது மணக்குது நரம்பெல்லாம் சூடும் ஏறுது நடுவிலே தூக்கம் கலைந்ததால் நடுநிசிக் கனவாய் முடிந்தது -----கவியாழி-----

இனிமேல் மரங்கள் வளர்க்கணும்

வனமும் வனப்பையும் இழந்தால் வனத்தின் நிறமும் மாறுமாம் வானமும் இயல்பை மாற்றியே வானத்தின் தன்மையும் கூடுமாம் எல்லா இடமும் வெளிச்சமாய் எங்கும்  வெய்யில் எரிக்குமாம் ஏரிக் குளமும் வற்றுமாம் எரிச்சல் அதிகம் இருக்குமாம் பொல்லா நிலையால் பலபேரோ பொசுங்கி மடிந்தே விழுவாராம் பொழுதும் கழிந்தால் மட்டுமே பொறுத்தே வெளியில் வருவாராம் இந்த நிலைக்குக் காரணம் இழந்த மரங்கள் அதிகமாம் இதையே நாமும் அறிந்தேனும் இனிமேல் மரங்கள் வளர்க்கணும் மழையும் நன்றாய் பெய்யுமாம் மரங்கள் அடர்ந்து வளருமாம் மக்கள் துயரம் நீங்கியே மக்கள் மனமும் குளிருமாம் வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய் வருடம் முழுக்க பெய்யுமாம் வாழ்வில் இதையே  மகிழ்ச்சியாய் வானத்தைப் பெருக்கிக் காக்கணும் =====கவியாழி=====

நாலுபேரு சேர்ந்து குடிச்சாலே.....

நாலுபேரு சேர்ந்து குடிச்சாலே நாகரீகம் மறந்து சிரிப்பாரோ நாணயம் மறந்த பேச்சாலே நல்லவர் மனதை வதைப்பாரோ அறிவும் மழுங்கி இளிப்பாரோ ஆடைத் துறந்து  இழப்பாரோ அடுத்தவர் மனத்தைக் கெடுப்பாரோ அடிமை மதுவால் ஆவாரோ குடியால் மென்மை துறப்பாரோ குடும்பம் இழக்க நினைப்பாரோ குழந்தை பெறவே மறுப்பாரோ குணத்தை இழந்து தவிப்பாரோ பெருமை அடைந்து மகிழ்வாரோ பணத்தை அழித்து திரிவாரோ பெண்ணின் சாபம் பெறுவாரோ பொய்யாய் வாழ்க்கை வாழ்வாரோ மிகுந்த குடியால் குடும்பமே மேன்மை இழந்தும் தவிக்குமே மற்றோர் மனதும் வருந்தியே மனிதனை சிரிக்க வைக்குமே இல்லறம்  அழிய  காரணம் இதையேன் மகிழ்வாய் நினைக்கனும் இனியும் சிலநாள் தவிர்க்கனும் இனிமை வாழ்வும் தொடரனும் ===கவியாழி===

ரசித்தவர்கள்