Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன்

இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன் இனித்தேன் இருந்தேன் சுவைத்தேன் மார்புக்குள் அவளை அணைத்தேன் மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள் சூடேற்றி சிலிர்த்தே சிணுங்கியே சின்னதாய் புன்னகையில் ஜோலித்தாள் செழுமையாய் உரிமையாய் இணைந்தே சேதியை முடித்தேன் ருசித்தேன் பூவுக்குள் தேனை எடுத்தேன் புரிந்ததும்  பார்வையாலே சிரித்தாள் தூறலும் நின்றது மகிழ்ச்சியாய் தூரத்தில் தெரிந்தது வானவில் மார்புக்குத் திரைப் போட்டு மனதிலே அசைப் போட்டு ஊருக்குள் மகிழ்ந்த நாட்கள் உண்மையான சிறந்த நாட்களே யாருக்குத்தான் இனிக்காது இச்சுவை எதிரிக்கும் ஆசைவரும் இதுபோல ஊருக்கும் தெரிந்திருக்கும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்த தன்றோ

பணத்தை மதிக்க மாட்டேன்....

பணமும் தேவை யானாலும் பணத்தை மதிக்க மாட்டேன் பணத்தாசை இல்லா நானும் பணத்தால் அடிமை ஆகேன் இனிமைப் பேசத் தயங்கேன் இன்முகம் காட்ட மறவேன் இழித்தே எளிதில் பேசேன் இறைவனை அதற்க்காய் தேடேன் நல்லோரை  வணங்கி  மகிழ்வேன் நாளும் சென்றுப் பார்ப்பேன் நலிந்தோரின் வாழ்க்கைச் சிறக்க நல்லதை சொல்லியே வருவேன் பொல்லாதோர் நட்பை மதியேன் பொய்யாக எதையும் சொல்லேன் புகழுக்கு அடிமை ஆகமாட்டேன் புரிந்தோரைக் கைவிட மாட்டேன் உள்ளத்தில் நட்பை வைப்பேன் உண்மையில் அன்பைப் பகிர்வேன் உரிமையாய் குறைகளைச் சொல்லி உண்மை நட்பை வளர்ப்பேன் ````````````கவியாழி```````````

மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள்

மின்னலிடைக் கொடியாள் வானத்தில் மேகத்தின் மேனியெல்லாம் தழுவி கன்னலென இருந்தக் கார்மேகத்தை வண்ண ஒளிவீசிச் சிரித்தாள் எண்ணம் எனக்கோ தெரியாமல் என்ன சொல்வதெனப் புரியாமல் சின்ன விழியிரண்டை மூடினேன் சில்லென்ற காற்றில் தேடினேன் கன்னம் சிவந்த கயல்விழியால் கண்டவுடன் சிரித்தாள் மறைந்தாள் தின்ன மறந்த தேன்பலாவின் திகட்டாத சுவையை மறுப்பேனா இன்னும் வேண்டுமென எப்போதுமே இனிமையான சுவையைத் தீண்டியே உண்ண விரும்பும் அவளை உதறித் தள்ளி விடுவேனா ஓடிச்சென்றுப் பார்த்தேன் அவளின் ஒருசுளையைத் தவிர்க்க முடியுமா ஓய்வாய் அருகில் அமர்ந்தேன் ஒருகிழி நடுவில் கிழித்தேன் இடைவெளி.........

பேயும் வாழட்டும் மகிழ்ந்தே.............

பேயும் இருந்தால் நன்றே பேதைமை கொள்வோரைக் கடித்தே போதையும் கொண்டே மீண்டும் பேயும் வதைக்கட்டும் தொடர்ந்தே அரக்கனை அழிக்க வேண்டாம் அவனையே வாழவும்  வைத்தால் அத்தனை திருடனையும்  கொன்றே அகிலமும் சிறக்கும் நன்றே உணவில் கலப்படம் செய்வோர் உரிமையை  மறுத்திடும் முதலாளி ஊரையே சுரண்டும் தலைவன் ஊழலை வளர்க்கும் மனிதன் சோம்பலை விரும்பும் மக்கள் சொன்னதைக் கேட்கா  இளைஞன் சுரண்டலைச் செய்யும்  அரசியலார் சுற்றித் திரியும் சோம்பேறி உழைக்க மறுக்கும் கணவன் ஊதாரி செலவிடும் பெண்கள் உடலை வருத்தா ஊழியன் உண்மையே சொல்லாத் திருடன் நாளையை விரும்பா மாணவன் நாணயம் இல்லா ஆசிரியர் நலிந்தவர் வாழ்வைச் சுரண்டியே நாளும் வட்டிக் கேட்பவன் போன்றோரைக் கொன்று வதைக்கவே போக்கிடம் இன்றி அலைந்தே பொழுதும் கொல்லுதல் செய்தே பேயும் வாழட்டும் மகிழ்ந்தே =======கவியாழி======

இதுவும் மனித இயல்பன்றோ..........

கஷ்டத்தில் வாழும்போது காணாத சுற்றமும் நட்பும் உதவிக்காய் இஷ்டமாக வருவார்கள் இல்லையென இல்லாத ஒப்பாரி வைப்பார்கள் காரியம் நடைபெற வேண்டுமானால் கண்ணீர் விட்டும் அழுவார்கள் கவலைத் தீர்ந்ததும் உணராது கண்டபடித் தவறாய் சொல்வார்கள் குற்றம் சொல்லிப் பயனில்லை குறையாய் எண்ண வழியில்லை கொள்கை இல்லா மனிதனுக்கு குணமாய் அமைந்தது இயல்பன்றோ இல்லை யென்றே சொல்லாமல் இருக்கும் போதே  கொடுத்திடுங்கள் கொள்ளை இன்பம் உங்களுக்கு கொடுத்தே இதயம் மகிழ்ந்திடுமாம் பெற்றப் பிள்ளைகள் பேரின்பம் பிணிகள் அகன்றே நன்றாக இல்லை என்ற நிலையாக இனிதே மகிழ்ந்தே வாழ்ந்திடுமாம் இதயம் மகிழ உதவிடுங்கள் இனிமை வாழ்வுக்கு நிரந்தரமாய் இதையும் நல்ல சேமிப்பாய் இருக்கும் போதே செய்திடுங்கள் -----கவியாழி-----

ரசித்தவர்கள்