Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

உறவென்று சொல்ல வெட்கமடா...

சொல்லாமல் கேட்காமல் சுயமாக முன்வந்து கொடுக்கா உறவும் சோம்பலாய் இருக்கையில் அறிவைச் சொல்லாத அப்பாவும்  அம்மாவும் இல்லாத போதும்  இயைந்து எடுத்துச் சொல்லா உடன்பிறப்பும் இருப்பதைக் கொடுத்துத் துணையாய் இன்முகம் காட்டா நட்பும் பொல்லாத நேரத்தில் புரியாத போலியாய்த் தேவையென நடித்தே தள்ளாத காரணம் சொல்லி தாங்க வைக்கும் உறவும் நிலைமை தெரிந்தும் வருந்தாமல் நேரமும் பழிக்கும் மனைவி வயதைக் கடந்தும் வேலையின்றி வருந்தாத வாரிசின் அலட்சியமும்  உறவென்று சொல்ல வெட்கமடா உலகில் இதுவும் உண்மையடா பிள்ளைகள் இருந்தும் தொல்லையடா பிறப்பே தவறாய் எண்ணுதடா @@@@@ கவியாழி  @@@@@@

கூட்டமாய் சொந்தங்கள் அருகில் இருந்தும் ...........

கூட்டமாய்ச் சொந்தங்கள் அருகில் இருப்பர் கொடுப்பதை வாங்கிடப் பலர் வருவர் நோட்டமாய்க் கவனித்து நேர்வழி சொல்லாது-கெட்டும் நோயுற்ற மனதையே குத்திக் கிழிப்பர் வாட்டமாய் வாழ்கையில் வந்தே உதவிடார் வழித்துணை யாருமே வந்திட மாட்டார் வாழ்க்கையில் துன்பமாய்  வாழ்ந்திடும் போதிலே-இருந்தும் வசவுமாய்ப் பழியுமாய்ச் சொல்லத் தயங்கிடார் கூட்டணி சேர்ந்து பழித்தே  பேசுவர் கூடுதல் சுமையாய்த் தனித்தே வைப்பர் பாட்டனும் பேரனைப் பார்க்க மறுப்பர்-ஆனாலும் பாசமாய் இருப்பதாய் அனைவரும் நடிப்பர் ஏழ்மையைப் போக்க யாருமே வந்திடார் ஏசியும் பேசியும் இருக்கத் தவறிடார் ஊரையும் நாட்டையும் உவமையாய்ச் சொல்லியே-வாழ்வில் ஊழ்வினை என்றே பலரும் சொல்லிடார் கேட்டதைக் கொடுத்து உதவி செய்தால் கேளிக்கை பேசலை நிறுத்தி கொண்டால் வாழ்கையின் தத்துவம் விளக்கிச் சொன்னால்-நிச்சயம் வணங்கியே கடவுளாய்  நன்றி சொல்வார் இயன்றதைக் கொடுத்து உதவி செய்து எதிர்காலத் தேவைக்கு  வழி அமைத்து முயன்றுமே விரைவில் முன்னுக்கு வர-உறவே முடிந்தால் அனைவரும் உதவி செய்வீர் ******கவியாழி******

பெற்றோரும் பிள்ளைகளும் .......

          உறவு, உரிமை என்ற பந்தம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் மட்டுமே தொடர்வது. இந்த இரண்டும் செவ்வனே கடைபிடிக்க முடியுமானால்  இந்தப் பிறப்பும் இந்த உறவும் இனிமையாய் இருக்கும்.  இல்லையென்றால் சொல்லொணாத் துன்பமும் மனவலியுமே மிஞ்சும். பெற்றோர்கள், பிள்ளைகளின் நேர்மையான ஆசைகளை  வளர்ப்பதும் அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்ற முயலுவதும்  அவசியம்.             பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமே தம் பிள்ளைகள்  நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குச் சென்று, நல்லவிதமாக மணமுடித்து,   பேரக் குழந்தைகளுடன்  மகிழ்ச்சியாய்  இருந்தால் போதும்  என்பதே ஆகும்.  அதற்காக, அவர்களின் படிப்பு விஷயத்தில் கண்டிப்பாக இருந்தாகவேண்டிய  கட்டாயம் உள்ளது.              அவ்வாறு  படிக்கும் காலத்தில்  பொறுப்புடன் இருந்து  எதிர்காலத்தில் தன்னைத்தானே உணர்ந்து செயல்பட வழிகாட்டுவது  பெற்றோர்களின்   முதல் கடமையாகும். நல்ல உடை, உணவு, சேமிப்பு, சுகாதாரம் நட்புடன் கூடிய நல்ல பழக்க வழக்கங்கள் போன்றவற்றையும் அறிவுறுத்துதல் பெற்றோர்களின் அடுத்த கடமையாகும்.               தாங்கள் வசதியின்றி நடுத்தர வர்க்கத்தைச்

முத்துக்கள் பத்து.(முகப்புத்தகப் பதிவுகள்)

அன்பு எல்லா உயிரிடமும் இருக்கும் அனுதாபம் மனிதனுக்கு மட்டுமே irukkum ________________________________________ இளமைக்கும் முதுமைக்கும் வலையே இன்பமான தளமாக உள்ளது எத்திசையும் உறவு கொள்ள ஏழுகடல் தாண்டியும் இணைக்கின்றது ____________________________________ நண்பனை தெரிந்து கொள்ள நாடுவாய் -கஷ்டமென நட்பின் ஆழத்தை அறிவாய் _____________________________________ பணத்தால் எல்லாம் வாங்கலாம் நல்ல குணத்தால் எதையும் வெல்லலாம் _______________________________ தருகின்ற இரைச்சலும் தவிர்த்திடவே தலையில் கவசம் அணிவீரே _____________________________________ ஏமாந்ததும் ஏமாற்றியதும் நீ தானே? _____________________________________ மனிதன் இறந்தபின்பு மறுபிறவியில்  எந்த சாதியில் சேர்க்கப் படுகிறான்? ____________________________________ இரசாயண கலவையே மனிதன். உயிர்போன பின்பு குப்பைதான் ____________________________________ இரவுக்கும் பகலுக்கும் இமை மட்டுமே சாட்சி இமைகளை மூடிவிட்டால் ஏது காட்சி? ______________________________________ துயரமும் வாழ்கையில் பார்த்தவன் துன்பத்தை

ஊரே கும்பிடும் உத்தமி .........

தனியாக யாரும் சென்றால் துணிவாக எதிர்த்து நிற்கும் தர்பாரும் விலகிச் செல்ல தரையிலே ஊர்ந்து செல்லும் துணிவுள்ள மிருகம் அல்ல துண்டு கயிறு போலவுள்ள பணிவான உயிர் அதுவாம் பயந்து சென்று ஓடுவதாம் ஊரையே காலி செய்யும் உருண்டு நீண்ட மேனியாய் ஒருவருமே பார்க்காத தனியிடமாய் ஒளிந்தே பயந்தே வாழ்ந்திடுமாம் போருக்குப் போவோரை எதிர்த்திடுமாம் பொல்லாத திரவியத்தால் கடித்திடுமாம் பேருக்குச் சத்தமாய் இருந்தாலும் பயமாக ஒதுங்கிச் சென்றிடுமாம் வீறிட்டுக் கத்தி பயந்தால் விரைவாகத் தானும் பயந்தே வேர்விட்டு விஷத்தைக் கக்கிடும் விரைவாக உயிரைப் போக்கிடும் ஊருக்கு வெளியில் வாழ்ந்திடும் உண்மையில் பயந்து ஓடிடும் நீர்வயல் ஓரங்களில் வாழ்ந்திடும் நல்லவளாய் ஊரே கும்பிடும்

ரசித்தவர்கள்