Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

மனிதநேயம் உள்ளவராய் வாழ்ந்திடுங்கள்

அடுத்தவரின் குறையை எண்ணி அனுதினமும் ரசிக்கதோன்றும் படித்தறிந்த மானிடனே நீ பண்ணுவது நல்லதில்லை எடுத்தெறிந்து செய்வதனால் ஏழுபிறப்பும் பாதித்ததாய் படித்தறியா முன்னோர்கள் பழமொழிகள் சொன்னார்கள் பணம்காசு கொடுக்காமல் பண்புகளை சொன்னாலே குணம்மாறி வாழ்ந்திடுவான் கும்பிடுவான் தெய்வமென வழியின்றித் தவிப்போருக்கு வயிற்றுப்பசி போக்கிடுங்கள் வாழ்வதற்கு நல்லவழி வணங்கும்படிச் செய்திடுங்கள் நாளிதுவே வாழ்வதற்கு நாளைக்குத் தெரியாது நாளைவரை உடன்வருவார் யாரேனவேத் தெரியாது வேலைக்கு மாத்திரையும் வேதனைகள் மறைவதற்கு இருக்கும்வரை   மனிதநேயம் இருப்பவராய் வாழ்ந்திடுங்கள்

நல்லவராய் வாழ்ந்திடுவோம்....

எண்ணத்ததைத் தூய்மையாக எப்பொழுதும் வைத்திருந்தால் எல்லோரும் மகிழ்ச்சியாக இன்பமாக வாழ்ந்திடலாம் சொல்லுவதைச் செயலாக்கி சொன்னபடி வாழ்ந்திருந்தால் செல்வமது நிலைத்திடுமாம் சொந்தமெனத் தாங்கிடுமாம் உள்ளமதில் கள்ளமின்றி உண்மையாகப் பேசிவந்தால் தொல்லையில்லா வாழ்க்கையாக தொடர்ந்திடலாம் எப்பொழுதும் அன்புடனே அறநெறியும் அடுத்தவருக்கு உதவியுமே இன்பமெனச் செய்திட்டு இருப்பதையுமே கொடுத்திடலாம் நண்பனையும் அன்புடனே நன்னடத்தைச் சொல்லிவந்தால் நன்றியுடன் இருந்திடுவான் நல்லபடி வாழ்ந்திடுவான் உள்ளவரை எச்செயலும் உயர்வதற்காய் செய்தாலும் நல்லவையே செய்திடுவோம் நல்லவராய் வாழ்ந்திடுவோம் (கவியாழி)

தவறிய அழைப்பு மிஸ்சுடு கால்.(Missed call)

                       தவறான அழைப்பு       (Missed call )  இதைப்பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.தவறிய,தவறான,அவசியமில்லாதது போன்ற அழைப்புகள் சில நேரங்களில் எரிச்சலையும்  கோபத்தையுமே தந்தாலும் சில நேரங்களில் போதிய கையிருப்பு இல்லாமை அல்லது அலைவரிசை பிரச்னை போன்றைவையும் காரணமாய் இருக்கிறது.ஆனாலும் பெரும்பாலானவர்கள்  தவறிய அழைப்பு  வருவதை விரும்புவதில்லை.சிலர் இதை வாடிக்கையாக கொண்டிருப்பதும் உண்மையே. இன்றைய நவீன காலத்தில் அவரவர் விருப்பத்திற்கேற்ப கைபேசி உபயோகித்து வருகின்றனர்.இதில் வயதோ,வசதியோ  வேறுபட்டாலும் விருப்பத்திற்காக,வசதிக்காக,அடுத்தவருக்காக  பல வண்ணங்களிலும் அதிக விலையிலும் வைத்துள்ளார்கள்.இங்கு கிராமமோ,நகரமோ பாகுபாடு இருக்கவில்லை.அவரவர் மனதைப் பொறுத்தே  உள்ளது. ஆனாலும்  இந்த தவறிய அழைப்பை பற்றி எல்லோருமே தெரிந்துள்ளனர். ஒவ்வொரு அழைப்பின்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும் கைபேசி அழைப்பு சில நேரங்களில்  சிலர் தவறான அழைப்பு  செய்வது மிகுந்த வேதனையும் கோபத்தையுமே ஏற்படுத்துகிறது.  பெரும்பாலும் உறவினரோ அல்லது நண்பர்களோ தவறிய அழைப்பு விடும்போது நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது ஆ

மலரும் தேனைத் தருவதில்லை

மார்கழி மாதத்தில் வண்டுகள் மலர்களைத் தேடி வருவதில்லை மலரினில் சேர்ந்திடும் பனியினால் மலரும் தேனைத் தருவதில்லை பனியும் அதிகம் பெய்வதாலே பூக்களும் அதிகமாய் பூப்பதில்லை பெண்களும் பூக்களை நினைத்தே பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை பனியில் தேனிகள் வருவதில்லை பகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை அதிகப் பனியால் ஆண்களுக்கும் அதற்கும்  இப்போ விருப்பமில்லை ஆக்கல் குறைந்த காரணத்தால் அழித்தலை ஆண்டவன் செய்வதால் அதனால் மக்களில் பலபேர் ஆலயம் செல்வதே உண்மை வருடக் கடைசி  உனக்கும் வரவு செலவு உள்ளதோ? ஏனிந்த வேதனை இறைவா! இதுவும் உனது செயலா?

சின்ன சின்ன மொட்டுகளே

சின்னச் சின்னப் பிள்ளைகளே சிரித்து மகிழும் முல்லைகளே வண்ணப் வண்ண பூக்களைப்போல் வந்தே சிரிக்கும் வாண்டுகளே நல்ல  நல்ல கதைகளை நாட்டில் நடக்கும் செய்திகளை வானில் மின்னும் நட்சத்திரம் வட்ட நிலவைப் பற்றியுமே தேனாய் இனிக்கும் வார்த்தையிலே தினமும் சொல்லி வந்திடவே தோளில் ஏறித் தினந்தோறும் தொல்லை செய்யும் செல்வங்களே குருவிக் காக்கை கொக்குபோல் குனிந்தும் தாவியும் ஆடவைத்து குழவி குழவி மகிழ்ச்சியாக கொள்ளை கொள்ளும் உள்ளங்களே எல்லை இல்லா கேள்விகளை எளிதில் புரிந்தே தெரிந்திட்டால் கொள்ளை இன்பம் கொண்டேநீ கொஞ்சி நன்றி சொல்வீரே 2014 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் ^^^^^^கவியாழி^^^^^^^

ரசித்தவர்கள்