Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

இன்பசுற்றுலா - ஏற்காடு

Image
"ஏழைகளின் ஊட்டி ஏற்காடு  "            ஏழைகளின் ஊட்டி  என்றழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் சேலம் நகரிலிருந்து  முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருபது கொண்டை  ஊசி வளைவுகளுடன்  கடல் மட்டத்திலிருந்து சுமார் 1850  அடி உயரத்தில்  இருக்கிறது ஏற்காடு  ஏரியின் எழில் மிகுத் தோற்றம்       நான் 1981-1992 வரை ஏற்காடு பகுதியில் நான் பணிபரியும் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தின் வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்தேன்.அன்று பணி நிமித்தமாக நான் சுற்றித் திரிந்த நாட்களில் இருந்த தோற்றம் இன்று காலப்போக்கில் மாறி விட்டது. தற்போது நிறைய தங்கும்  விடுதிகள் கட்டப்பட்டு போக்குவரத்தும் மிகுதியாகி இருக்கிறது.அதற்கேற்றாற்போல் சாலை வசதியும் மேம்பட்டிருக்கிறது இந்த ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியில் இருந்து செல்லும் உபரி நீரே கிள்ளியூர் நீர்வீழ்சியாய்  கொட்டிக் கொண்டிருந்தது  தற்போது  ஏரியில் நீர்மட்டம் குறைந்ததும்  அருவி இருக்குமிடம் தெரியாமல் கட்டிடங்களாய் மட்டுமே உள்ளது         இந்த முகத்துவாரத்தில்  உள்ள நீரேற்றும் நிலையத்தின் வாயிலாக இங்குள்ள அனைத்துப் பகுதிகளுக்க

சித்திரை மகளே வருக.........

சித்திரை மகளே வருக சீர்மிகு வாழ்வைத் தருக சீரிய பணிகள் செய்தே சிறப்புற ஆசியும் தருக கற்பனை செய்யும் அறிவை காலமும் எனக்குத் தருக கற்றதில் உள்ள குறையை கற்கத் தெளிவைத் தருக அற்ப மனித பிறப்பில் அன்பாய் நாளும் இருக்க அப்பன் ஆத்தா ஆசிரியராய் அறிவை இன்னும் தருக உலகில் உள்ள உயிர்கள் உயர்வாய் என்றும் இருக்க உழவன் வாழ்வை சிறக்க உடனே மழையைத் தருக எத்தகு பணியும் எளிதில் ஏற்றம் கிடைக்கச் செய்து எளிமை வாழ்வை  வாழ என்னுடன்  துணையாய்  வருக நேசமும் நட்பும் சூழ்ந்தே நிறையாய் வாழ்க்கை வாழ நித்திரை நாளும் கிடைத்து நிம்மதி மனதில் தருக (கவியாழி)

வெட்கமாய் இருக்குது விளக்கணைங்க....

வெட்கமாய் இருக்குது விளக்கணைங்க விடிந்ததும் சொல்லுறேன் தூங்கிடுங்க சுத்தமாய் எனக்கு விருப்பமில்லை சொல்வதைக் கேட்டு உறங்கிடுங்க மிச்சமாய் எதுவும் தரவேண்டாம் மேனியில் கையும் படவேண்டாம் அச்சமாய் இருக்க வழியில்லையே  அவங்களும் நமக்குத் துணையில்லையே கூச்சமாய் எனக்கு இருக்குதுங்க குறுகுறுன்னு எதுவோ ஓடுதுங்க பேச்சினால் என்னை மடக்காதீர் பிள்ளைக்குத் தெரிஞ்சா தவறில்லையா மச்சினி இன்னும் ரகசியமாய் மருமகள் இருந்தும் தெரிந்தவளாய் துச்சமாய் எண்ணியே அவங்களெல்லாம் தினமும் அடிக்கடி நடக்கிறதாம் உங்களைப் பத்தித் தெரிந்துதானே உடம்புல வலியும் மறந்துநானே உள்ளுக்குள்ளே பயமாய் இருப்பதாலே உடனே தள்ளிப் போயிடுங்க சத்தியம் சொல்லி செய்யுறேண்டி சங்கதி எதுவும் செய்யுலடி மிச்சமும் தடவி அமுக்கிடுறேன் முன்னம்போல் உடம்பும் இருக்குமடி இப்பவே கழுத்து பரவாயில்ல இடுப்புல வலியும் அதிகமில்ல சுத்தமா முதுகுல வலியில்ல சத்தியம் இன்னைக்குக் காத்திட்டிட்டீங்க -----கவியாழி----- (வயதாகி விட்டால் இப்படித்தான் நிலைமை இருக்குமோ?)

இணையத்தால் இணைந்தோம் மகிழ்ந்தோம்-2

Image
.  இரண்டாவது நபராக திரு.துளசிதரன் அவர்களைத் தொடர்புகொண்டு பேசியபோது ஓ..மீசைக்கார நண்பரா என்று கேள்விகேட்டுவிட்டு அவரே தொடர்ந்து நிச்சயம் நான் உங்களைச் சந்திக்க வேண்டும்உங்களை எங்கு எப்படி எப்போது காண்பது என்று ஆசிரியருக்கே உரித்தான கேள்விகளால் மகிழ்வோடு கேட்டார்.நானும் திங்கட்கிழமை வந்து அன்றிரவே சென்னைத் திரும்ப இருக்கிறேன் என்றதும் ஏன் இன்னொருநாள் தள்ளிபோட முடியாதா என்று திரு.தேவதாஸ் அவர்களைப் போலவே கேட்டார்.   நான் என் நிலையைச் சொல்லி அவசர வேலையாக வந்த காரணத்தினால் இப்போது முடியாது மற்றொருநாள் வருகிறேன் பிறகு பார்க்கலாமே என்றதும்  உடனே இல்லை இல்லை நண்பரே உங்களை நான் எப்படியும் பார்த்துவிட  வேண்டும் நான் பணி செய்யும் இடம் பாலக்காடு என்றும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிசெய்வதாகவும் இங்கிருந்து 180 கிலோ மீட்டர் தள்ளி எனது வீடு உள்ளதென்றும் திங்கள் வந்து வெள்ளியன்று வீடு திரும்புவேன் என்றும் சொல்லியதுடன் இன்றிரவு 10.30 மணிக்கு உங்களது தொடர் வண்டி பாலக்காடு வரும் அப்போது உங்களைச் சந்திக்க முடியுமா அல்லது தூங்கி விடுவீர்களா என்றார்."கரும்புதின்னக் கூலியா நண்பரை சந்திக்க சிர

இணையத்தால் இணைந்தோம் மகிழ்ந்தோம்

Image
          நான் அவசர வேலையாக கேரளாவிலுள்ள  கொச்சின் நகருக்கு செல்வதாய் இருந்தேன்.நான் செல்லும் எல்லா ஊர்களிலும் ஏதாவதொரு இணைய நண்பர்களை சந்திக்க விரும்புவது வழக்கம் அப்படி செல்லும் முன் இணையத்தின் இணையில்லாத தவிர்க்க இயலாத அனைவரும் அறிந்த நண்பர் திரு.திண்டுக்கல்.தனபாலனிடம் கேரளாவில்  இணைய நண்பர்கள் உள்ளனரா என்று ஒரு நாள் முன்புதான் கேட்டேன்.மாலை என்னை அழையுங்களேன் என்று  சொன்னார் மாலையில் அவர் இரண்டு நண்பர்களின் கைப்பேசி எண்களைத் தந்து நீங்களே பேசிவிடுங்கள் என்றார்.         23.03.2014 அன்று  மாலை நான் திரு.தேவதாஸ் அவர்களை தொடர்பு கொண்டபோது மகிழ்ச்சியுடன் என்னை நினைவு கூர்ந்து  எனது தளத்துக்கு வந்து அனைத்தையும் படிப்பேன் என்றும் மற்ற இணைய நண்பர்களைப் பற்றியும் விசாரித்தார்..அப்போது இன்று இரவு புறப்பட்டு நாளைக் காலை எர்ணாக்குளம் வருகிறேன், நான் பயணிக்க ஒரு வாடகை மகிழுந்து (கார்) வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன் உடனே இன்னும் சிறிது நேரத்தில் தொடர்பு கொள்கிறேன் என்று சொன்னபடியே உங்களுக்கு வாடகைக் கார் பேசிவிட்டேன் என்றார்.மேலும் நானே நேரில் வருகிறேன் என்று மனமுவந்து சொன்னது எனக்கு மக

அன்புச் செல்லக் குழந்தைகளே

அன்புச் செல்லக் குழந்தைகளே அறிவில் சிறந்த முல்லைகளே பண்பேக் குறையா செல்வங்களே பாசம் மிகுந்த மொட்டுகளே நல்லப் பிள்ளை அனைவருமே நன்குப் பேசி மகிழுங்களே அன்பு பாசம் அறிவையுமே அறிந்து பகிர்ந்து சொல்லுங்களே மாலைப் பொழுதில் விளையாடி மகிழ்ந்து நட்பாய் ஆடுங்களே மனதில் உள்ள எண்ணங்களை மதித்து உணர்ந்து செய்யுங்களே நல்ல நல்லக் கதைகளையும் நல்லோர் சொன்ன கருத்துகளும் நாளும் படித்து வாருங்களே நாட்டில் சிறந்து வாழுங்களே அன்னைத் தந்தை சொல்வதிலே அர்த்தம் உணர்ந்து கொள்ளுங்களே அறிவைச் சொல்லும் ஆசிரியர்கள் ஆழ்ந்து  மகிந்து   படியுங்களேன் (கவியாழி)

கான்க்ரீட் காற்றும் காடுகளும் மரங்களும்

         தென்றல் காற்று ,மழைக் காற்று ,சோலைக் காற்று ,வாடைக் காற்று என பலவாறு  அழைத்தேப் பழக்கப்பட்ட நமக்கு கான்க்ரீட் காற்றுப் பற்றியும் தெரிந்திருக்கும்.அவ்வாறு தெரியாத நண்பர்களுக்காக இந்தப் பதிவைப் பகிர்வதற்கு விரும்புகிறேன்.          தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுதும் காட்டிலும் குடிசையிலும் கொட்டடியிலும் சாலை ஓரத்திலும் குறுகியக் குடிலையே வசிப்படமாகக் கொண்ட அடித்தட்டு மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டினால் சிறிதேனும் சேமிப்பை வைத்துக் கொண்டு கடன் வாங்கியாவது ஒரு சிறிய தார்சுக் கட்டிடத்தை  கட்டி  வசிக்கும் நிலையில் எல்லோருமே ஆசைப் படுகிறார்கள்.         கட்டுமான நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு அழகிய சிறந்த பாதுகாப்பான காற்றோட்டமான ,வெளிச்சமான வீடுகளை தொகுப்பு வீடுகளாய்,அடுக்குமாடிக் குடியிருப்புகளாய் தனி பங்களாக்களாய்  கட்டி  அவரவர் விரும்பும் வண்ணம் கண்ணைக்கவரும் வகையில் விலையைக் கூட்டியும் கட்டிக் கொடுக்கிறார்கள்.         மேலும் கூட்டுக் குடும்பமுறை நடைமுறையில் தவிர்க்கப் படுவதாலும் ,வேலைக்காக சொந்த ஊரை விட்டு தனிக்குடித்தனமாய் வாழ வேண்டிய அவசியம் ஏற்படுவதனால

தத்து நடை நடந்துவந்து....

தத்து நடை நடந்து வந்து தாவித்தாவி தூக்கச் சொல்லும் திக்கித் திக்கி பேசுகின்ற தின்ன அடம் செய்யுகின்ற முத்து முத்துப் பல்லைக் காட்டி முத்தம் தந்து மடியில் அமர்ந்து முப்பொழுதும் அருகில் வந்தும் முத்தமழை விரும்பித் தந்தும் பட்டுப் போன்ற மேனியுடன் பாட்டுப்பாடிக் கதைகள் கேட்கும் பாட்டன் பாட்டி எப்பொழுதும் பக்கத்திலே இருக்கச் சொல்லும் பஞ்சுபோன்ற மெத்தை யாக்கி படுத்துறங்கி நெஞ்சின் மேலே பகலும் இரவும் எப்பொழுதும் பக்கத்திலே நெருங்கி வந்து தொட்டுத் தொட்டுப் பேசிதினம் தொந்தரவு செய்கின்ற மொட்டு போன்ற மழலைகளுக்கு நித்தம் கதை சொல்லுங்களேன்  (கவியாழி)

மழையே நீயும் மீண்டும் வா!வா!!

மழையே நீயும் வா வா மகிழ்ச்சி எமக்குத் தா தா மரங்கள் வளர  செடிகள் வளர மீண்டும் மீண்டும் தொடர்ந்து வா பிழையே செய்யா உயிரினமும் பிழைக்க வைக்கத் தொடர்ந்து  வா பிழையாய் வெட்டிய  மரத்தை பிழைக்க வைக்க நீயும் வா புயலாய் சூழ்ந்தும் ஓடிவா புதிதாய் உணர்வைக்  கொடுக்க வா பூச்சியும் பறவையும் பறக்கவும் புல்லும் பூண்டும் முளைக்கவும்  வா நாட்டு மக்கள் மனங்குளிர வா நல்ல காற்றுமே கிடைக்க நாகரீகம் என்ற பெயரில் நாசமாக்கும் குளிர்விப்பான் தவிர்க்க வா கடனே கேட்கா  காற்றை கண்குளிர கொடுக்க  வா காய்ந்த நிலத்தைப் பசுமையாக்க கழனிப் பயிர்கள் செழிக்க வா நாட்டு உழவன் மகிழ வா நாளும் உணவு கிடைக்க வா நீயும் உடனே விரைந்து வா நித்தமும் மக்கள்  மகிழ வா (கவியாழி)

இறைவனைக் காணவில்லையா?

இறைவனை இன்ப மாக்க இன்னிசைச் சத்தம் ஒலிக்கப் பறையடி மேளம் முழங்கப் பாட்டுப்பாடி ஆட்டமாடி வேட்டுச் சத்தம் கேட்டுமே வெளிச்சமாய் ஒளி வீச உடுக்கை அடித்துப் பாடி ஊரே ஒன்றாய் கூடி எல்லோரும் ஒன்று சேர்ந்து இறைவனுக்கு பொங்கல் வைத்து நல் விருந்துப் படைத்து நலமாக வாழ வேண்டி உள்ளவரும் இல்லாத ஏழையும் ஒன்றாக தேர் இழுத்து பல்லா ண்டாய் மகிழ்ந்தும் பரவசமாய் வேண்டி வந்தும் எல்லோரும் அன்பாய் அழைத்தும் யாருமே பார்க்க முடியாத பொல்லாத சக்தி அவன் பொய்யாக வாழ்கின் றானோ (கவியாழி)

மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு....

துணையாய் தொடர்ந்து வந்து தோழனாய் நட்பு கொண்டு மனதில் குடிகொள்ளும் மனைவியாய்இருக்க வேண்டும் பெற்றவரை பிள்ளைகளைப் போல் பேதமும் பார்க்காது விருப்பமாய் உற்றாரும் வாழ்த்திச் செல்லும் உற்றவளின் குணமே வேண்டும் பிறி தொன்றும் கேட்காத பிறரைப் பற்றிக் கூறாத அன்புடனேஆசை கொள்ளும் அன்னையாய் இருக்க வேண்டும் ஆசை அன்புக் கென்று அகம் மகிழ பிள்ளையுமே அளவான செல்வமும் சேர்த்து அன்பான குடும்பம் வேண்டும் பணி முடிந்து வரும்போது பணம் மட்டும் கேட்காத குணமுள்ள மனைவி வேண்டும் குடும்பம் மகிழத் துணைவேண்டும் (கவியாழி)

தேனெடுக்கும் அவசரத்தால்.....

நீரி ருக்கும் நிலத்தினிலே நிச்சயமாய் வாழ்ந்து வரும் நிம்மதியாய் வளர்ந்து வந்து நிறம் மாறி பூவாகும் பூப்பூக்கும் முன்னே தேனீ புகுந்து உள்ளே தேனெடுக்க தேன் குடிக்கும்அவசரத்தால் தெரியாமல் பூத்து விடும் குருவிகளும் கொத்தித் தின்ன கொள்கையுடன் படை யெடுக்க கொஞ்ச நேர இடைவெளியில் வண்டுகளே தேன் குடிக்கும் வண்ட துவும்  கொண்டாடி வேலையினை செய்த பின்பு கண்டதுமே பறிக்கத் தூண்டும் கண்ணி மைகள் ஊஞ்சலாடும் வண்ணங்களோ பலநிறத்தில் வயது வந்த பெண்களையும் எண்ணமதை கவ்விச் சென்று எடுத்துடனே சூடச் சொல்லும் பெண்மணியின் பூ வாசம் பொறுமை யின்றி ஆண்களையே போரின்றி உடன்படிக்கை பெண் மனதில் குடியேறும் கண்ணி ரண்டும் ஒப்பந்தம் கண்ணடித்து செய்து கொண்டு எண்ணியதை இணை யிரண்டும் இனிமையாக உறவு கொள்ளும் (கவியாழி) காதலர் தின வாழ்த்துக்கள்...

பொறுப்புள்ள தந்தையாய்....

பொறுப்புள்ள தந்தையாய் இருந்து பிள்ளையைப் படிக்க வைத்து மறுத்திடா செலவு செய்து மக்களைக் காத்திடு உண்மையாய் உணர்த்திடு உள்ள கடமை உன்னுடைய வேலை யென்று உள் வாங்கிப் புரிந்திடவே உதவியாகச் சொல்லிக் கொடு தடம் புரண்டு செல்லாமல் தன் மானம் இழக்காமல் இடம் பொருள் ஏவலையும் இன்முகமாய் சொல்லி வளர்த்திடு நன்னடத்தை நா நயம் நல்லோரின் நல் ஆசியும் எல்லாமும் தெரிந்திடவே எப்போதும்உணர்த்தி விடு மென்மையாக சொல்லிக் கொடு மகிழ்ச்சியாக உணர்த்தி விடு பெண்மையின் உயர் தத்துவத்தை போற்றிப் போற்றி வாழவிடு

கனவுகள் தரும் தொல்லை

உதிரிக் கனவுகளை நினைத்து உள்வாங்கி நினைத்தால் உண்மை யது புரியாது உறக்கம் மீண்டும் வாராது தெருவோரம் நடந்த நிகழ்வோ தென்றலென வீசும் காற்றோ வண்ண நிறம் கொண்ட வாசமுள்ள பூக்கள் வாசமன்றி உயிர் நீத்து மறைந்த உற்றாரும் பெற்றோருமே வந்து உண்மை ஏதோ சொல்ல உருப்படியாய் புரியாமல் இருக்கும் கற்பனையான கனவு வந்து கால மெல்லாம் வருத்த நற்பலனை அறிய வேண்டி நாலுபேரைக் கேட்டு தெளிய அத்த னைக்கும் காரணமாய் அனைவருமே மாற்றிச் சொல்லி நற்பலனாய் மட்டும் சொல்வர் நல்லதா கெட்டதா புரியாது ஆழ்மனதில் அடியெடுத்து ஆனந்தமாய் உறங்கும் போது நான் கண்ட கனவுகள் நல்ல பலன் தந்ததில்லை (கவியாழி)

எப்போதும் வெற்றிபெற...

மழுக்கினால் மீண்டும் கூராகு மறுபடி சிறந்து  சீராகு தடுக்கினாலும் விழுந்து விடா தைரியமாய் நிமிர்ந்து நில்லு களப்பணியில் கவலையின்றி கருத்துடனே செய்ய மறுக்காக் கச்சிதமாய் இலக் கதனை கடைசிவரை முடித்திடு தடுத்திடு மந்தத் தடைகளைத் தகர்த்திட முயற்சி செய்து பகிர்ந்திட்ட காரியம் முடித்து பார்போரை வியக்கச் செய்திடு எப்படியும் எழுந்து நின்று எல்லோரும் வியந்திடவே நீ எழுச்சியுடன் நிமிர்ந்து நின்றால் எப்போதும் வெற்றியே மகிழ்ச்சியே (கவியாழி)

பகட்டு வாழ்கையால் பயனேது ?

ஆயிரம் பலதும் சேர்த்தாலும் ஆயுளும் அதிகம் இருந்தாலும் ஆலயம் தோறும் பணமாக ஆண்டவன் மகிழக் கொடுத்தாலும் ஊரும் பெரும் செல்வாக்கும் உயர்ந்த பொருளை கொண்டாலும் உற்றார் அருகில் இல்லாத உயர்ந்த வாழ்க்கை பலனுன்டா பேரைச் சொல்லி அழைத்திடவும் பேதைமை இன்றி பழகிடவும் நாளும் அருகில் மகிழ்வுடனே நல்ல நண்பர்கள் வேண்டுமடா வாடா போடா என்றழைக்க வாழ்ந்த கதைகளை தெரிவிக்க ஆத்தா அப்பனும் அருகிலின்றி ஆனந்த வாழ்வு கிடைத்திடுமா சுற்றமும் சொந்தமும் துணையின்றி சொர்க்கமே உனக்கு கிடைத்தாலும் பற்றும் பாசமும் கிடைக்காத பகட்டு வாழ்க்கையால் பயனேது (கவியாழி)

பொறுப்பில்லா பிள்ளையினால்....

பொறுப் பில்லா பிள்ளையினால் பொறுமை யிழந்து  தவிப்பவரே வெறுப் படைந்து  வேதனையால் வெம்பியே வருந்த வேண்டாம் தடுத்திடும் காரண மறிந்து\ தைரியம் தனைக் கொடுத்து மிடுக்குடன் நடக்க சொல்லி மக்களை  நீர் வளர்த்தால் இலக் கங்கே தருகையிலே இயலாமல் தவிக்கையிலே கலக்க மின்றி யோசித்தால் காணும் பலன் கிடைப்பதையும் துடுக்குடனே செய்யும் வேலை துன்பமதைத் தடுக்கு மென்றும் துணிந்து நின்று முயற்சிக்க துணையாய் சொல்லும் வார்த்தை கவனமாக உணர்தினாலே கவலை யெல்லாம் தீர்த்திடுமே கனிவுடனே இருக்கு மெனவே கடுமை யின்றி சொல்வீரே (கவியாழி)

அதிகாலைப் பனிபொழிவால்.....

Image
அதிகாலைப் பனிபொழிவால் ஆனந்தம் எப்போதும் இருக்கட்டும் அதன்பின்னே  மழைத்துளியும் அடிக்கடியும் தூரட்டும் மிதமாக மழை பெய்தும் மீண்டும் மகிழ்ச்சி  இருக்கட்டும் பதமாக சிணுங்கலோடு தொடக்கம் பக்குவமாய்  உணர்ந்து ரசிக்கட்டும் இடையிடையே கதைச் சொல்லி இதமாக தழுவ வேண்டும் இடியுடன் மழை பொழிந்தால் இறுக்கி அணைக்க வேண்டும் மெலிதான மெல்லிசையை மெய்மறந்து கேட்கவேண்டும் மேனியெங்கும் சிட்டெறும்பாய் மெதுவாக கவ்வ வேண்டும் உடலெங்கும் கொடிபோல தழுவ வேண்டும் காதல் உணர்சிகளை எழுச்சியுடன் ஒற்றுமையாய் தீண்டவேண்டும்

பெண்ணுக்கு கல்வியைக் கொடுப்பீரே.....

குற்றம் மட்டும் சொல்லாதீர் குறையைச் சுட்டி நகைக்காதீர் சுற்றம் நட்பும் சேர்ந்தேனும் சொல்லி  மாற்ற தவறாதீர் நக்கல் செய்து பேசுவதும் நல்லதைச் சொல்ல மறுப்பதுமே சிக்கல் கொண்டு இருக்கையிலே சொல்வதை முனைந்து சொல்வீரே அச்சம் தவிர்க்கச் சொல்லுங்கள் ஆளுமை கற்க உதவுங்கள் மாணவ பருவ  வாழ்கையுமே மகிழ்ந்தே இருக்க வைப்பீரே அக்கம் பக்கம் பழகுவதை அருகில் உள்ள நண்பர்களை சுற்றம் உறவும் இருப்பதையுமே சொல்லி புரிய வைத்திடுங்கள் நிச்சயம் முடிந்தால் கல்விக்கு நேரமும் பணமும் செலவழித்து பக்கத் துணையாய் இருப்பீரே பெண்ணுக்கு கல்வியைக் கொடுப்பீரே

பிறப்பே தவறாய் எண்ணுதடா...

சொல்லாமல் கேட்காமல் சுயமாக முன்வந்து கொடுக்கா உறவும் சோம்பலாய் இருக்கையில் அறிவைச் சொல்லாத அப்பாவும்   அம்மாவும் இல்லாத அறிவை   இயைந்து எடுத்துச் சொல்லா உடன்பிறப்பும் இருப்பதைக் கொடுத்துத் துணையாய் இன்முகம் காட்டா நட்பும் பொல்லாத நேரத்தில் புரியாமல் போலியாய்த் தேவையென நடித்து தள்ளாத காரணம் சொல்லி தாங்க வைக்கும் உறவும் நிலைமை தெரிந்தும் வருந்தாமல் நேரமும் பழிக்கும் மனைவி வயதைக் கடந்தும் வேலையின்றி வருந்தாத வாரிசின் அலட்சியமும்   உறவென்று சொல்ல வெட்கமடா உலகில் இதுவும் உண்மையடா பிள்ளைகள் இருந்தும் தொல்லையடா பிறப்பே தவறாய் எண்ணுதடா @@@@@ கவியாழி   @@@@@@

மனமே மீண்டும் வருந்தாதே.......

மகிழ்ச்சியில் திளைக்கும் மனமே மகிழாதோர் இல்லை தினமே நெகிழ்ச்சியாய் இருப்போர் சிலரே நெஞ்சுருக மகிழ்வோர் பலரே நேசிக்கத் தெரியா மனிதன் நேசமற்ற மனிதன் உள்ளத்தில் நாளும் தாவும் குரங்கு-மனிதன் நிம்மதி மறந்த விலங்கு காணும் காட்சிகள் அவலங்கள் கண்டும் காணா உள்ளங்கள் தேசம் தோறும் சண்டைகள்-மனிதமே தேடிக் காணா உண்மைகள் வெறுமையான மனித உள்ளம் வேதனையில் தவிக்கும் இல்லம் வீண்பேச்சு சந்தேகம் விவாதம்-இன்று விதியல்ல இது மெல்லோர்க்கும் பணமில்லை சிலருக்கு வாழ குணமில்லை கொடுத்துமே உதவ தினம் வருகின்ற தேவையே-என்றும் தீராத ஆசை நோயே மனமே மீண்டும் வருந்தாதே மனிதனின் நிலையால் கலங்காதே குணமே இதுவென வழுவாதே-எல்லா குறைகளும் தீர்த்திடும் உணர்ந்தாலே (கவியாழி)

சாலை விதியை மதிப்பீரே

Image
       நவநாகரீக மாற்றத்தில் மக்களின் பொருளாதாரம், வாழ்க்கை வசதி , கல்வி,சுகாதாரம், வேலைவாய்ப்புகள் மற்றும் வாகனத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாமல் அனைவருக்கும் வாகனம் அவசியம்  என்ற நிலையாகிறது.நமது நெடுஞ்சாலைகளும்  நல்ல தரத்துடன் மாறி நல்லதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் கெடுதல்களையும் நாம் அனைவரும் உணரவேண்டும்  இன்று எல்லோருமே பெரும்பாலும் சாலை விதிகளை கடைபிடிக்கிறோம் ஆனாலும் சில நேரங்களில் விபத்து நடப்பதை தவிர்க்க இயலாமல் போகிறது.இங்கு  குற்றம் குறைகளை தவிர்க்க ஒவ்வொரு தனி மனிதருக்கும் சாலையின் பயன்பாடு அவசியம் பற்றித் தெரிந்திருந்தாலும் அவசரம் என்ற அலட்சியத்தால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முன்வரவேண்டும். சாலைவிதிகளை அறிந்தும் தவறிழைத்தல் என்ற காரணமே விபத்துக்கு முக்கிய காரணமாய் இருக்கிறது.முந்திசெல்லுதல் ,தவறான இடத்தில் வண்டிகளை நிறுத்தி வைத்தல் ,மாற்றுவழியில் அவசியமற்ற வேகம், பாதசாரிகளின் ஒழுங்கற்ற சாலையைக் கடக்கும் முயற்சி, விலங்குகளை  சாலையில் திரிய விடுதல்  போன்றவையே முக்கிய காரணிகளாய் இருக்கிறது தனி மனித ஒழுக்கமே சாலையில் விபத்துக்கள்

மனிதம் மனதில் இருந்தாலே......

மனிதம் இல்லா மனிதரையே மாற்றம் செய்ய வையுங்கள் மனதில் துளியும் அன்புடனே மனிதனாக வாழச் சொல்லுங்கள் செல்வம் அதிகம் சேர்ந்தாலே செல்லும் வழியும் தடுமாறும் சொல்லில் வார்த்தை  தவறாகி சொந்தம் தள்ளி உறவாடும் சொந்தமும் நட்பும் இல்லாமல் சுகமாய் வாழ்க்கை வாழ்ந்தாலும் செல்லும் வழியில் சிலரேனும் சிரித்துப் பேசச் செய்திடுங்கள் குற்றம் குறைகளை நல்லதை குணத்தை மாற்றி வாழ்வதை சுற்றமும் நட்பும் உணர்ந்ததை சொல்லிப் புரிய வையுங்கள் அருகில் இல்லா உறவுகளால் அதிகத் துன்பமும்  வருவதையும் அன்பே இல்லா மனிதர்களின் அடைந்த நிலையை காட்டுங்கள் மனித வாழ்க்கை உணர்வதற்கு மக்கள் சூழ்ந்தே வாழ்வதற்கு மனிதம்  மனதில் இருந்தாலே மகிழ்ச்சி நிறைந்து வாழ்ந்திடலாம் (கவியாழி)

மகிழ்ச்சி இல்லா நேரத்திலே...

மகிழ்ச்சி இல்லா நேரத்திலே மனதில் தோன்றும் எல்லாமே மறைக்க முடியா தருணங்களாய் மடியும் நிலைக்கு வந்துவிடும் மலையும் கடலும் வானமும் மரமும் செடியும் கொடியுமே மனதில் பாரத்தைக் குறைத்திடும் மகிழ்ச்சியை மீண்டும் தந்திடும் தோழமைத் துணிவும் சேர்ந்ததும் தொடரும் துன்பமும் விலகிடும் தொடரும் நட்பின் ஆதரவால் தொல்லைகள் மறைந்து சென்றிடும் இதயம் உணரா மனிதருக்கும் இனியவை செய்திடசொல்லிடும் இன்பம் தந்திடும் செயல்களை இனியும் செய்ய வைத்திடும் கலக்கம் வேண்டாம் நண்பனே கடவுள் போல வந்தேனும் கருணை கொண்டு உதவியாய் கடந்து செல்ல வைப்பார்கள் (கவியாழி)

புத்தகத் திருவிழா2014-செல்லப்பா அவர்களுக்குப் பாராட்டு

Image
நேற்று மாலை ஐந்து மணிக்கு திரு.செல்லப்பா அவர்களின் சிறுகதைத்தொகுப்பான "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் ' என்ற புத்தகத்தை அய்யா.புலவர் .ராமாநுசம் அவர்களின் திருக்கரங்களால்  அகநாழிகை பதிப்பகத்தார் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பதிவுலக நண்பர்கள் பலரும் திரு.பாலகணேஷ் அவர்களின் கைபேசிவழித் தகவல் கிடைத்ததும் சிரமம் பார்க்காமல் வந்திருந்து திரு.செல்லப்பா அவர்களை வாழ்த்தியபோது எடுத்த சில படங்கள். நான் அறிமுகம் செய்து பேசியபோது  மிக கவனமாக உரையை கேட்கும் மெட்ராஸ் பவன்  சிவகுமார்,நம்ம புலவர்.ராமாநுசம்,எழுத்தாளர்.செல்லப்பா  மற்றும் மின்னல்வரிகள் பாலகணேஷ் பன்.ராமசாமி,ஸ்கூல் பையன் சரவணன்,ஆர்.வி.சரவணன்,தோத்தவண்டா ஆரூர் மூனா செந்தில்,இரவின் புன்னகை செல்வின் அகநாழிகை புத்தக வெளியீட்டாளர்  பொன் வாசுதேவன் உஷா ராமச்சந்திரன், புதுவைக் கவிஞர் உமா மோகன், பெருமிதக் கவிஞர் தேனம்மை ஆகியோர்களுடன்  பொன்வாசுதேவன் வந்திருந்து வாழ்த்திய பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. (கவியாழி)

கடவுள் போலச் சொல்வார்கள்

உதவி செய்ய வருவோர்கள் உரிமையோடு  செய்வார்கள் உணரும் துன்பம் யாவையுமே உடனே தீர்க்கத்  துணிவார்கள் எண்ணம் முழுதும் உண்மையாய் என்றும் துணையாய் இருப்பார்கள் எதிலும் உரிமை சொல்லியே எளிதில் அன்பைப் பொழிவார்கள் ஊரும் பேரும் தெரியாமல் உற்ற நட்பு என்பார்கள் உள்ளம் முழுதும் தெய்வமாய் உணர்ந்துப் பழகி வருவார்கள் இன்றும் நட்பாய் ஒருசிலரே இப்படி மகிழ்ச்சி கொள்வார்கள் இதயம் நிறைந்து எப்போதும் இன்முகத்தோடு வாழ்வார்கள்  கடமை என்றே எண்ணியே கருத்தாய் செய்து முடிப்பார்கள் கடந்து வந்து வெற்றியக் கடவுள் போலச் சொல்வார்கள் (கவியாழி)

மகிழ்ச்சிக் கிடைத்தால் மறுக்காதே....

மகிழ்ச்சிக்  கிடைத்தால் மறுக்காதே மறுத்துப் பின்னால் வருந்தாதே புகழ்ச்சி மிகுந்து மயங்காதே பிறகு மயங்கி துடிக்காதே கிடைத்த வாழ்வைத் தொலைக்காதே தொலைத்து விட்டுக் கலங்காதே கிட்டும் வாய்ப்பை விலக்காதே கலங்கி உயிரைப் போக்காதே உழைத்து வாழ மறுகாதே உயர்வு உனக்குக் கிடைக்காதே ஓய்ந்து படுத்துக் கிடந்தேநீ உறங்கி வாழ்வை இழக்காதே தொடுத்த சொல்லால் துணையைநீ தொடரும் சொந்தம் முடிக்காதே தொலைத்து விட்ட வாழ்கையே தேடிச் சென்றும் கிடைக்காதே பெண்கள் கல்வி கொடுக்காமல் பிறந்த வாழ்வைக் கெடுக்காதே பிறப்பை தவறாய் நினைக்காமல் படிப்பைத் இடையில் நிறுத்தாதே கெடுத்தும் வாழ்வு வாழாதே கெட்டப் பின்பு துடிக்காதே கொடுத்து வாழ்ந்து மகிழ்ந்தாலே கொடுக்கும் நன்மை உணர்வாயே?

பொங்கலைக் கொண்டாடுவோம் .....

உலகத்துத் தமிழரெல்லாம் ஒற்றுமையாய்ச்   சேர்ந்திருந்து தமிழன்னை மகிழ்ந்திடவே  தவறாமல் பொங்கல் வைப்போம் நல்லோரை நாடிச் சென்று நல்வாழ்த்து சொல்லிடுவோம் நம்மக்கள் மனம்மகிழ நாடிச் சென்று உதவிடுவோம் புத்தாடை  தனையுடுத்தி  புதுப்பானை பொங்கலிட்டு தலைக்கரும்பு மஞ்சளுடன் தலைவாழை இலைபோட்டு உலகாளும் சூரியனுக்கும் உழவனுக்கும் நன்றி சொல்வோம் உயரும் வழி என்னவென்று உள்ளோர்க்கு எடுத்துரைப்போம்

பொங்கலே பொங்குக.....

தாத்தன் பாட்டிச் சொந்தங்களை தமிழில் இல்லா வார்த்தைகளில் பார்த்தே மகிழ்ந்தே சிரித்திடுவீர் பாசம் கொண்டே அழைத்திடுவீர் நேற்றும் நடந்தக் கதைகளையே நேசம் கொண்டே பேசிடுவீர் நேர்மை வீரம் சத்தியத்தை நேரில் கண்டேப் பேசிடுவீர் ஊரும் உறவும் உள்ளதென உரிமைச் சொந்தம் நல்லதென பேரும் புகழாய் வாழ்ந்திருந்த பெரியோர் கதைகளைக் கேட்டுடுவீர் வீரம் மிகுந்த தமிழர்களின் வேட்கை நிறைந்தப் பாட்டுகளும் வீதியில் சூழ்ந்தே விளையாடி விரும்பிப் பழகி மகிழ்ந்திடுவீர் தாழ்ந்த உணர்வும் இன்றில்லை தரணி முழுதும் கொண்டாடி தமிழர் திருநாள் பொங்கலையே தமிழர் அனைவரும் பொங்கிடுவீர் மஞ்சள் கரும்புடன் படையலிட்டு மாட்டையும் ஆட்டையும் வர்ணமிட்டு பொங்கலை வைத்துப் படையலிட்டு புகழ்ந்தே மகிழ்ந்தே வணங்கிடுவீர் பொங்கலே பொங்குக என்றுரைத்து பொழுதும் அனைவரும் சூழ்ந்திருந்து மங்கள நாளில் ஒற்றுமையாய் மகிழ்ந்தே சேர்ந்து சாப்பிடுவீர் (கவியாழி)

திருவாளர்.செல்லப்பா அவர்களின் சிறுகதைப் புத்தகம்

Image
கிராமத்துப்  பின்னணி உள்ள இந்த அட்டைப் படத்தைப் பார்க்கும்போது இவர் கிராமத்தை விரும்பி ரசிக்கும் எழுத்தாளர்  என்பதும்  படத்திலுள்ள சிறுமி செல்வி.சம்ப்ரித்தா(அவருடைய பேர்த்தி)  இவரது உறவுக்கு அய்யனாரைப் போன்று பாதுகாவலராய் இருப்பார் என்பதும் தெளிவாகப் புலனாகிறதல்லவா? இந்தப் புத்தகத்தில் உள்ள "சாந்தி நிலவ வேண்டும் " என்ற சிறுகதைக்காக பிரபா ராஜன் அறக்கட்டளையின் சார்பாகக் கலைமகள்  பத்திரிகை நடத்திய  சிறுகதைப் பரிசுபோட்டியில் இரண்டாம் பரிசு பெற்றபோது எடுத்த படம். மணிமேகலை பிரசுரமும் இணைந்து நடத்திய விழா.                               ஹரணி (முனைவர் க அன்பழகன்) தமிழ்ப் பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைகழகம், சிதம்பரம். சொல்லியது............     "ஒழுக்கமான படைப்புலகத் தர்மத்தோடு, மனிதநேயச் சிந்தனையோடு எடுத்துக் காட்சிப்படுத்துகிறார்  தன் உள்ள ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு. ஒருமுறை வாசித்தாலும் பன்முறை பாராயணம் செய்துவிட்ட ஒரு பாடம்போல மனத்தில் தேங்கி மாற்றங்களை விளைவிக்கும் சிறுகதைகள்." இன்றைய புதிய தலைமுறை  எழுத்தாளார்களின்    அதிக புத்த

மனிதநேயம் உள்ளவராய் வாழ்ந்திடுங்கள்

அடுத்தவரின் குறையை எண்ணி அனுதினமும் ரசிக்கதோன்றும் படித்தறிந்த மானிடனே நீ பண்ணுவது நல்லதில்லை எடுத்தெறிந்து செய்வதனால் ஏழுபிறப்பும் பாதித்ததாய் படித்தறியா முன்னோர்கள் பழமொழிகள் சொன்னார்கள் பணம்காசு கொடுக்காமல் பண்புகளை சொன்னாலே குணம்மாறி வாழ்ந்திடுவான் கும்பிடுவான் தெய்வமென வழியின்றித் தவிப்போருக்கு வயிற்றுப்பசி போக்கிடுங்கள் வாழ்வதற்கு நல்லவழி வணங்கும்படிச் செய்திடுங்கள் நாளிதுவே வாழ்வதற்கு நாளைக்குத் தெரியாது நாளைவரை உடன்வருவார் யாரேனவேத் தெரியாது வேலைக்கு மாத்திரையும் வேதனைகள் மறைவதற்கு இருக்கும்வரை   மனிதநேயம் இருப்பவராய் வாழ்ந்திடுங்கள்

நல்லவராய் வாழ்ந்திடுவோம்....

எண்ணத்ததைத் தூய்மையாக எப்பொழுதும் வைத்திருந்தால் எல்லோரும் மகிழ்ச்சியாக இன்பமாக வாழ்ந்திடலாம் சொல்லுவதைச் செயலாக்கி சொன்னபடி வாழ்ந்திருந்தால் செல்வமது நிலைத்திடுமாம் சொந்தமெனத் தாங்கிடுமாம் உள்ளமதில் கள்ளமின்றி உண்மையாகப் பேசிவந்தால் தொல்லையில்லா வாழ்க்கையாக தொடர்ந்திடலாம் எப்பொழுதும் அன்புடனே அறநெறியும் அடுத்தவருக்கு உதவியுமே இன்பமெனச் செய்திட்டு இருப்பதையுமே கொடுத்திடலாம் நண்பனையும் அன்புடனே நன்னடத்தைச் சொல்லிவந்தால் நன்றியுடன் இருந்திடுவான் நல்லபடி வாழ்ந்திடுவான் உள்ளவரை எச்செயலும் உயர்வதற்காய் செய்தாலும் நல்லவையே செய்திடுவோம் நல்லவராய் வாழ்ந்திடுவோம் (கவியாழி)

தவறிய அழைப்பு மிஸ்சுடு கால்.(Missed call)

                       தவறான அழைப்பு       (Missed call )  இதைப்பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.தவறிய,தவறான,அவசியமில்லாதது போன்ற அழைப்புகள் சில நேரங்களில் எரிச்சலையும்  கோபத்தையுமே தந்தாலும் சில நேரங்களில் போதிய கையிருப்பு இல்லாமை அல்லது அலைவரிசை பிரச்னை போன்றைவையும் காரணமாய் இருக்கிறது.ஆனாலும் பெரும்பாலானவர்கள்  தவறிய அழைப்பு  வருவதை விரும்புவதில்லை.சிலர் இதை வாடிக்கையாக கொண்டிருப்பதும் உண்மையே. இன்றைய நவீன காலத்தில் அவரவர் விருப்பத்திற்கேற்ப கைபேசி உபயோகித்து வருகின்றனர்.இதில் வயதோ,வசதியோ  வேறுபட்டாலும் விருப்பத்திற்காக,வசதிக்காக,அடுத்தவருக்காக  பல வண்ணங்களிலும் அதிக விலையிலும் வைத்துள்ளார்கள்.இங்கு கிராமமோ,நகரமோ பாகுபாடு இருக்கவில்லை.அவரவர் மனதைப் பொறுத்தே  உள்ளது. ஆனாலும்  இந்த தவறிய அழைப்பை பற்றி எல்லோருமே தெரிந்துள்ளனர். ஒவ்வொரு அழைப்பின்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும் கைபேசி அழைப்பு சில நேரங்களில்  சிலர் தவறான அழைப்பு  செய்வது மிகுந்த வேதனையும் கோபத்தையுமே ஏற்படுத்துகிறது.  பெரும்பாலும் உறவினரோ அல்லது நண்பர்களோ தவறிய அழைப்பு விடும்போது நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது ஆ

மலரும் தேனைத் தருவதில்லை

மார்கழி மாதத்தில் வண்டுகள் மலர்களைத் தேடி வருவதில்லை மலரினில் சேர்ந்திடும் பனியினால் மலரும் தேனைத் தருவதில்லை பனியும் அதிகம் பெய்வதாலே பூக்களும் அதிகமாய் பூப்பதில்லை பெண்களும் பூக்களை நினைத்தே பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை பனியில் தேனிகள் வருவதில்லை பகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை அதிகப் பனியால் ஆண்களுக்கும் அதற்கும்  இப்போ விருப்பமில்லை ஆக்கல் குறைந்த காரணத்தால் அழித்தலை ஆண்டவன் செய்வதால் அதனால் மக்களில் பலபேர் ஆலயம் செல்வதே உண்மை வருடக் கடைசி  உனக்கும் வரவு செலவு உள்ளதோ? ஏனிந்த வேதனை இறைவா! இதுவும் உனது செயலா?

சின்ன சின்ன மொட்டுகளே

சின்னச் சின்னப் பிள்ளைகளே சிரித்து மகிழும் முல்லைகளே வண்ணப் வண்ண பூக்களைப்போல் வந்தே சிரிக்கும் வாண்டுகளே நல்ல  நல்ல கதைகளை நாட்டில் நடக்கும் செய்திகளை வானில் மின்னும் நட்சத்திரம் வட்ட நிலவைப் பற்றியுமே தேனாய் இனிக்கும் வார்த்தையிலே தினமும் சொல்லி வந்திடவே தோளில் ஏறித் தினந்தோறும் தொல்லை செய்யும் செல்வங்களே குருவிக் காக்கை கொக்குபோல் குனிந்தும் தாவியும் ஆடவைத்து குழவி குழவி மகிழ்ச்சியாக கொள்ளை கொள்ளும் உள்ளங்களே எல்லை இல்லா கேள்விகளை எளிதில் புரிந்தே தெரிந்திட்டால் கொள்ளை இன்பம் கொண்டேநீ கொஞ்சி நன்றி சொல்வீரே 2014 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் ^^^^^^கவியாழி^^^^^^^

ரசித்தவர்கள்