சிறைபிடிக்கும் மழலைகளே....
மெல்ல மெல்ல தாவிவந்து மேனியோடு சேர்ந்த ணைத்து எல்லையில்லாக் குறும்பு செய்யும் எனதருமைக் குழந்தைகளே வண்ண மயில் போலவும் வயதையொத்துப் பாடவும் சின்னதாகக் கதையைச் சொல்லி சிரித்து விளை யாடவும் எண்ணமெல்லாம் ஓரிடத்தில் எளிதில் நம்மை வசப்படுத்தி சின்னக் சின்னக் குறும்புகளில் சிறைபிடிக்கும் மழலைகளே பள்ளி செல்லும்போது மட்டும் பார்வையாலே சிறைபிடித்து எல்லையினைத் தாண்டிச் சென்று ஏன்அழுது செல்லுகிறாய் கண்ணெதிரே வளர்ந்துநீ கல்வியிலும் சிறந்திடவே புன்னைகையைத் தந்துவிட்டு புகழுடனே நன்கு படிப்பாய் (கவியாழி)