Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

சித்தமும் கலங்கிட செய்தாயோ ?

தலைநிமிர்ந்தே தினமும் வணங்கி தலைவனாய் கும்பிட்டு மகிழ்ந்தோம் நிலையில்லா வாழ்க்கையினை நீ- இன்று நெடும் சுமையாய் எம்மை நினைத்தாயோ தினம் பலபேர் மடிவதால் தீங்கு செய்யும் மக்களுக்கு பணமும் பொருளும்பயனின்றி-மக்களின் பாசம் நேசம்  பகிர்ந்தாயோ அழிவுப் பாதையை அறிந்தாயோ அழிக்கும் வேலையும் இதுவன்றோ இழிவாய் தெரியும் இதனை நீ-இனியும் இறைவா மீண்டும் அழிவைத் தொடராதே பூமியின் சுழற்சியை புரிய வைக்க புத்துயிர் மக்களை  தெளிய வைக்க நித்தமும்  நிம்மதி யிழக்க செய்து-மனிதன் சித்தமும் கலங்கிட செய்தாயோ கவியாழி. கண்ணதாசன்

மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே

மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே மறந்ததை இழந்ததை அறிவாயோ புகழ்சியின்  உச்சத்தில் உன்னை-இன்றும் பூமியில் தினமும் வணங்குகிறோம் இயற்கையை மனிதன் அழித்தனால் இளமையில் உழைக்கத் தவறியதால் உறக்கத்தை நீயும் கெடுத்தாயோ-மக்களின் உழைப்பையும் மறக்கத் துணிந்தாயோ மக்களில் பலபேர் மகிழ்ச்சிக்கு மானிடம் மறந்ததை அறிந்தாயோ மதத்தால் இன்றும் பிரிவினையை-அன்பை மனிதனும் மறந்ததை உணர்ந்தாயோ பிழைக்கவும் வழியே தெரியாமல் பிணமாய் மக்கள் உயிர்வாழும் பணத்துக்கும் மதிப்பைக் கொடுக்காமல்-உலகே பயத்துடன் வாழ பணித்தாயோ கவியாழி.கண்ணதாசன் 07.04.2020- சென்னை

எல்லை யில்லா எழிலாள்.......

கல்லில் வடித்த சிலையோ கற்பனை வடிவின் கலையோ சொல்லில் விளங்க வில்லை சுடராய் தெரிந்தாள் அழகாய் எல்லை யில்லா எழிலாள் ஏக்கம் கொண்ட குயிலாள் வெள்ளை அழகே இல்லை விரைந்தே சிரித்து மறைந்தாள் கொள்ளை அழகாய் இருந்தும் குறையாய் இருந்தது வறுமை பிள்ளை யவளைப் பெற்றோர் பிணியில் அவளை வளர்த்தார் இல்லை என்ற நிலையில் ஏழ்மை சூழ்ந்த வழியில் தொல்லை யில்லா அழகால் தூரத்தில் பார்க்க மறைந்தால்..... .பருவம் பதினெட்டில்........8 ..................(கவியாழி)................

தமிழ் மரபுவழிப் பயணம்

Image
        17.03.2019  அன்று ஞாயிற்றுக்கிழமையில் தமிழ் மரபு அறக்கட்டளையின்  தமிழ் மரபுவழித் தேடி 36 பேர்  குளிரூட்டப்பட்ட பேருந்தில் சென்றோம்.செல்வி.சுபாசினி அவர்களின் தலைமையில் திரு.ஸ்ரீதரன் அய்யா அவர்களின் வழிகாட்டுதலுடனும் திரு.காந்தி. அவர்களால்  பயணம்  ஏற்பாடு செய்யப்பட்டு கோயம்பேட்டிலிருந்து காலை ஆறு மணிக்குப் புறப்பட்டு முதலில் காஞ்சிபுரம் அடுத்த காவேரிபட்டினம் அருகிலுள்ள மகிந்திரவாடி  எனும் சிற்றூரில் அமைந்த குடைவறைக் கோவிலுக்கு முதலில் சென்றோம். பின்னர் அங்கிருந்துப் புறப்பட்டு ராணிபேட்டை சிப்காட் வழியாக திருவலம் சென்றோம்,நாங்கள் பேருந்தைவிட்டு இறங்கி கோவிலுக்குள் நுழையுமுன்னே நடைசாத்திவிட்டார்கள் என்பது வருத்தமாக இருந்தாலும் அங்கு வெளியே இருந்த கலைநுட்பமான கல் தாழி மேலும் சுவரில் வரைந்திருந்த சிற்பங்கள் மற்றும் கல்கதவு போன்றவற்றை  வியப்புடன் பார்த்தோம்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மேல்பாடி நோக்கி பயணமானோம் ,நல்லவேளை அங்கு கோவில் திறந்தே இருந்தது அங்கே ஆர்வத்துடன் உள்ளே நுழைய முற்படுமுன் அதிக வெப்பத்தினால் தரையில் கால் வைக்கமுடியாத நிலையில் பலரும் தயக்கம் காட்ட

மகிழ்ந்திடும் நினைவுகள் தேடி..

உருவம் செழித்தே இருந்தும் உள்ளம் உணர்வை மறுத்தும் பருவம் தொடரும் கனவில்  பார்த்ததும் மனதில்  ஒளிக்கும் பொல்லா இளமை கனவு பொருந்தா நேரமும் வருத்தும் இல்லா நிலையை உணர்ந்தே எல்லா மகிழ்ச்சியும் பறக்கும் வாலிபம் வாயிலைத் தட்டும் வருவதை சொல்லி நிற்கும் மேகலை நனைய கண்ணீர் மேனியில் வழிந்தே நனையும் பூமகள் மனதில் தினமும் பூத்திடும் கனவுகள் கோடி மாமகள் தருணம் நாடி மகிழ்ந்திடும் நினைவுகள் தேடி...                                                 .பருவம் பதினெட்டில்........7 .8 .......(கவியாழி)....

இழிபிறவி எடுத்தவர்கள்

ஏய் இழி பிறப்பே ! உச்சகட்டவெறியோடு ஊரிலுள்ள பெண்களை துச்சமென நினைத்தே துரதித்துரத்தி கெடுத்தாயே-நீ பிச்சையெடுத்தாலுமுன் பிணியுணக்கு தீராது எச்சியிலை நாய்கள்போல் எக்குதப்பாய் கடித்திட்டு இச்சையினை முடித்திட்டு எவளருக்கே படுத்தாயே-தாய் மிச்சஉயிர்போகுமுன்னே மகன்வாழ வேண்டுமென்றும் பிச்சிப்போட்ட இலையைப்போல் பிரண்டியவள் தங்கையென்றே மதித்திருந்தால்  இழிவாக மடத்தனமாய் செய்வாயா ? புத்தன் வாழ்ந்த பூமியிலே-பெண்ணை புனிதமாக எண்ண வேண்டும் இவ்வுலகில் எத்தனை நாள் இன்னும் நீ இருந்தாலும் இழிவுடனே பெரும்துயரை இணைத்து நீ வாழ்ந்தாலும் புத்திகெட்ட உன்செயலை-நீ புலம்பி நாளும் திரிந்தாலும் செத்தவனாய் நடைபிணமாய் செழிப்பிழந்து அழிவாயே செய்திட்ட தவறெல்லாம் தினமுனக்கு பகையாகி பித்தனாக திரிவாயோ பிணமாகிப்போவாயோ ! கவியாழி.கண்ணதாசன்

இடையில் ஏதோ மனதில்.....

வயதில் மூத்தவன் னானாலும் வாலிபம் மறந்து போனாலும் நினைவில் ஒதுங்கி நின்றாலும் நிழலோ படிப்பைத் தேடி துணையாய் யாரும் இல்லை தூரத்து வயதில் தொல்லை தனியாய் தினமும் வந்தே தனிமைப் பிரிவை உணர்ந்தான் இனிய பொழுதை தினமும் இடரே யின்றி படிப்பில் தொடராய் படித்து மகிழ்ந்து தொடந்தான் படிப்பை உணர்ந்து இடையில் ஏதோ மனதில் இருட்டாய் இருந்த இடத்தில குடையுள் விளக்கை பிடித்து குமரியும் எதிரே தெரிந்தாள்  .... பருவம் பதினெட்டில்................7 ...........(கவியாழி)......................

ரசித்தவர்கள்