கண்ணன் வருவானா?முத்தம் தருவானா?
(நன்றி கூகிள்) வெண்ணையைத் திருடிய கண்ணன் வேதமும் சொல்லிடும் மன்னன் ராதையை துரத்தியே மகிழ்ந்தான் ரசித்தவர் விருப்பமும் அதுதான் இன்றும் தொடரும் கனவுகள் இதுபோல் இருப்பதும் தவறா கண்ணனின் லீலைகள் கண்டதால் காண்பவர் உள்ளமும் மகிழ்ந்ததால் திண்ணையில் கதைகளை மறந்து திரையில் காணும் நிகழ்வை இன்னமும் ஏங்கும் பெண்டீர் இருப்பதும் இல்லைத் தவறாய் பூவையே கேளடி உண்மையை பூவினுள் வண்டென புகுந்தே புதுக்கதை என்னிடம் கேட்டே பொழுதும் தொடர்வதும் ஏனோ பேதையே தெரிந்தால் சொல்லடி போதையே எனக்கு குறையலை ஏனடி நில்லடி பாரடியே ஏக்கமும் அவனென கூறடியே பாவையர் ஏக்கமும் தணிக்க பாவலன் அவனென சொல்லடியே தாகமும் தணிந்திட தீர்ந்திடவே தலைவனும் அவனென எண்ணடியே மேனியில் வண்டெனப் புகுந்தே மீட்டிடும் ராகங்கள் இனிதே தேடியே தொடருதே மீண்டும் திருடியே சென்றவன் கண்ணன் வாடிய என்முகம் பார்க்க வருவானா? மீண்டும் தருவானா?