Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

வெற்றி பெறவே துடிக்குது..............

நேற்றைய வாழ்க்கை முடிந்தது நேரமும் காலமும் கழிந்தது நிம்மதி சிலநாள் கிடைத்தது நேர்மையாய் உணர முடிந்தது பார்ப்பவர் எண்ணம் புரிந்தது பாதையும் தெளிவாய் தெரிந்தது பகலும் இரவும் போலவே பசுமை வெறுமை கடந்தது இன்றைய நாளில்  நடப்பது இன்பம் விரும்பி வாழ்வது இளமை  வெறுமை இழந்தது இனிமை வாழ்க்கை ஏங்குது துன்பம் மெல்ல விலகுது துயரம் தாண்டி செல்லுது தூயநல்  நட்பும் தொடருது துணையாய்  அருகில் வாழுது நாளைய ஏக்கம் தொடருது நல்லதும் கெட்டதும் தெரியுது நாணயம் என்னுள் இருப்பதால் நன்மையும் தீமையும் தெளிந்தது வேதனை சிலதும் மறைந்தது வெளிச்சமும்  அதனால் வந்தது வேண்டி  விரும்பி  மனதுமே வெற்றி பெறவே  துடிக்குது -----கவியாழி------

அம்மா கடவுள் சரஸ்வதியே

அம்மா கடவுள் சரஸ்வதியே அகிலம் போற்றும் குணவதியே எல்லா குழந்தையும் கற்றிடவே என்றும் கொடுப்பீர் அருள்மழையே இல்லா பிள்ளையும் கற்றிடவே இலவசக் கல்வியை கொடுப்பவர்க்கும் பொல்லாப் பணத்தைப் பிடுங்கியும் பொழுதும் கொள்ளை அடிப்பவர்க்கும் சொல்லில் கடுமையாய்  இருப்போர்க்கும் சொல்லித் தந்தே மகிழ்பவர்க்கும் நல்ல ஒழுக்கமும் நன்னடத்தை நாளும் கற்பிக்கும் ஆசிரியருக்கும் செல்வம் சேர்க்கா பணியாக செலவில்லாமல் தினம் கற்பிக்கும் சொல்லில் சிறந்த சீமான்கள் செய்யும் பணியும்  சிறந்திடவே அன்பும் அறிவும் பெருகிடவே அனைவரும் போற்றும் கல்விக்கு அம்மாதாயே அருள் கொடுத்தால் ஆயுள் முழுக்க வணங்கிடுவேன் ----கவியாழி----

அய்யா வயதில் மூத்தவரே

அய்யா வயதில் மூத்தவரே அன்பில் என்னுள் ஆள்பவரே அழைத்தால் தினமும் மகிழ்பவரே ஆறாம் எண்ணில் அழைப்பவரே அன்பில் சளைத்தவர்  உங்களைபோல் அருகில் எனக்கு இல்லையே அதனால் எனக்கும் லாபமே அடிக்கடி கோபமாய் வாழ்த்துங்களேன் எல்லா  நண்பரும்  மகிழ்வாக எண்ணி இருந்திட நினைப்பவரே சொல்லால்  தவறை சுட்டியே சிறப்பாய் இருந்திடச் செய்பவரே என்மேல் என்ன கோபமைய்யா எதற்கு அப்படிக் கடிந்தீரோ என்னை விடவா உங்களுக்கு ஏக்கம் தந்திடும் மீசையுமக்கு பொல்லா கோபம் இல்லையே பொசுக்கி என்னைக் கொல்லவே எல்லா நாளும் இப்படியே என்னிடம் திட்டி வதைக்காதீர் --கவியாழி--

வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

வயதாகிப் போனாலும் வற்றாத வாலிபமும் மீண்டும் திரும்பாத வாழ்த்துகின்ற வயதிலும் வந்திடும் வாடிக்கையாய் அன்றி நின்றிடும் திரும்பாத முகத்தையும் திருப்பிடும் தீராத ஆசையைத் தூண்டிடும் தெரிந்தோரை மீண்டுமே அழைத்திடும் திரவியம் உள்ளதைக் காட்டிடும் வருந்தாத உள்ளங்கள் இல்லையே வார்த்தையில்  சொல்லவும் மில்லையே பொருந்தாத இடத்திலும் பொங்கிடும் புகழையும் சமயத்தில்  மழுக்கிடும் தெரிந்தோரே உண்மையை சொல்லுங்கள் தெளிவில்லா சங்கதி இன்றுமே தொடர்ந்திடும் என்பதும் உண்மையா தெளிந்தீரா இப்போதும் நன்மையாய் அன்பெனும் அடிமை உண்மையாய் அமைந்திட்ட வாழ்கையே நன்மையாய் துன்புறும் மனதையும் காத்திடும் தூயஒழுக்கமும் வாழ்வில் சேர்த்திடும் புரிந்தீரா சொலவதைக் கேட்டதை புலப்படுதா சொல்லிலே உண்மையை வருந்தாத வாலிப மூத்தோரே வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

தமிழ்மணப் பட்டையை வைத்தீர்.....

நண்பரே அன்பரே வாருங்கள் நல்லதை எல்லோர்க்கும் தாருங்கள் நாட்டிலே நடக்கிற செய்தியும் நல்லதாய் கதைகளும் சொல்லுங்கள் வீட்டிலே ஆதரவு முக்கியம் விடியலில் எழுவதும் அவசியம் பாட்டுக்கள் கதைகள் கட்டுரைகள் பார்த்ததும் படிப்பது அவசியம் தமிழ்மணப் பட்டையை  வைத்தீர் தணிந்ததா தாகமே இனிமேல் கருத்துக்கள் அதிகமாய் சொன்னால் கடையில்  வாடிக்கைப் பலபேர் அடிக்கடி வலைக்கு வாங்க அனைவரின் படைப்பையும் படிங்க பொறுப்புள்ள கருத்தையே சொல்லி புகழ்பெறம் வரிசையில் நீங்க எழுத்திலே உமக்கு ஏற்றம் இருப்பதாய் அறிந்தே உரைத்தேன் இன்னுமும் சிறப்பாய் எழுதி இமயம் போற்ற வாழ்க

நானும்இறைவனே

படைப்பில் நானும் இறைவனே பண்பாய் நானும் தினமுமே பாட்டாய் எழுதித் தருவேனே பதிலும் தினமும் கொடுப்பனே உருகி உருகி எழுதியும் உணர்ச்சி மிகுந்தே சொல்லியும் உண்மைத் தன்மை மாறாது உள்ளதை நன்றே சொல்வேனே எதுகை மோனை எழுத்திலே என்றும் தொடர்ந்தே காப்பேனே எல்லா நேரமும் நல்லதாய் எதையும் எழுதி விடுவேனே காதல் காமம் எழுதுவேன் கண்ணீர் வந்திட சொல்லுவேன் ஊர்கள் சென்றதை சொல்லுவேன் உணர்ச்சிப் பொங்கிட எழுதுவேன் மனதில் தோன்றும்  எல்லாமே மகிழ்ச்சிக் கொண்டே  எழுதியே மக்கள் என்னை ஒதுக்கும்வரை மகிழ்வாய் கவிதை படைப்பேனே அழகாய் கவிதை படைப்பதால் அன்பாய் நாளும் இருப்பதால் அனைவரும் என்னை விரும்புவதால் அதனால் நானும் இறைவனே

மணிக்கூடும் மனிதக்கூடும்

எத்தனை மணித்துளிகள் இப்போது என்று கேட்டாலும் தப்பேது முப்போதும் ஓடினாலும் தப்பாது முறையாக ஓடிடுவாய் எப்போதும் ஒவ்வொரு மணித் துளியும் ஓய்வுக்காய் என்றுமே தவறாது ஒப்பில்லா காலத்தை உணர்த்தாமல் ஒருபோதும் தடுமாறி நிற்காது நொடியுமே தவறாக ஓடவில்லை நிமிடமும் தனக்காக நின்றதில்லை மணியுமே அவசரமாய் சென்றதில்லை மனிதரைப்போல் குற்றமாய் சொன்னதில்லை ஏழையாய் இருந்தாலும் எப்போதும் எல்லோரும் அவசியமாய் தன்னோடு எப்போதும் துணையாக வந்திடும் எந்நாளும் சரியாகக் காட்டிடும் இருதயம்போல எப்போதும் ஓடிடும் இன்முகமாய் காலத்தைக் காட்டிடும் இதையாரும் வெறுக்கிறவர் இல்லார் இலவசமாய் தருகிறவர் உண்டா --கவியாழி--

மீசை மட்டுமே அழகா

மீசை இருந்தால் அழகேதான் மாதமும் மழித்தால் நல்லதுதான் ஆசை அதனால் குறையாது ஆயுளில் அதனால் பயனேது மீசை இல்லா முதியோரே மீண்டும் வசந்தம் கேட்பாரோ மீண்டும் மீசை வையுங்கள் மிகுந்த இன்பம் கொள்ளுங்கள் ஆண்கள் அனைவரும் பெரும்பாலும் ஆசைக் கொண்டே வளர்திடுவர் ஆயுள் முழுக்க சிலபேரோ அதையும் துறந்தே இருக்கின்றனரே அய்யா பெரியவர்  என்னிடமே அதனால் கடிந்தே பேசியதால் என்னா செய்வேன் இளையவன்நான் எப்படி மறுத்தே சொல்லிடுவேன் அய்யா வயதில் மூத்தோரே அய்ந்தாம் நிலையில் உள்ளவரே அடியேன் என்னை வெறுக்காதீர் அன்பைக் கொடுக்க மறக்காதீர்

இன்பமாய் உலா.....செல்லுங்கள்

இன்பமாய் உலா செல்வீரே இல்லறம் சிறக்குமே  கண்டீரா இன்னலும் தீர்ந்திட சென்றிரா இன்பமாய் இனியச் சுற்றுலா மலைப்பகுதியும் மரங்கள் வளர்ந்த மிதமாய் குளிரும் தரைபகுதியும் நீரால் சூழ்ந்த நீர்ப்பகுதியும் நிலமேத் தெரியாத பணிப்பகுதியும் உல்லாசமாய் எல்லாமும் நினைத்தே ஊரெல்லாம் தொலைதூரம் சென்றே பொல்லாதக் கோபத்தைக் குறைத்தே பொறுமையாய் செல்வீரே அடிக்கடியே துன்பமும் நீங்கிடும் துணையாலே தினந்தோறும் மகிழ்ந்திடும் வாழ்கையில் அன்பையும் கூட்டிடும் மகிழ்ச்சியில் அனைவரும் விரும்பிடும்  சுற்றுலா பண்பையும் நன்றே மாற்றிடும் பணியிலும் ஊக்கத்தை கூட்டிடும் இன்பமாய் சிலநாள் இருந்தால் இதயமும் மகிழ்ந்தே சிரிக்குமாம் ---கவியாழி---

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமே

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமா உலகினில் மீண்டும் திரும்புமா பழகிய நாட்களும் மறக்குமா பாசமும் நேசமும் கிடைக்குமா அழகிய நாட்களை மறந்திட அன்பை மீண்டும் கொடுத்திட பழகியே நேசத்தை காட்டிட படைத்தவர் உயிரை மீட்டிட தினமும் மகிழ்ச்சியே தந்திட்ட திங்களும் வணங்கிட செய்திட்ட மனிதருள் தெய்வமாய் திகழ்ந்திட்ட  மகனாய் என்னை படைத்திட்ட உறவை மறந்து பிரிந்த உண்மையில் அன்பைப் பகிர்ந்த உணர்ச்சியில்  நான் வருந்த உடையோரை எங்கே மறைந்தீர் தினம் தோறும் வேண்டுகின்றேன் திங்கள் தோறும் அழைக்கின்றேன்  விரும்பாது சென்ற பிதாக்களே வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்களேன் ---கவியாழி---

இன்றைய மாணவர் வாழ்க்கை

இன்றைய  மாணவர் வாழ்க்கையோ இழிந்தே செல்லும் நிலையாலே பண்பை மறந்தே மாணவனும் பகலில் குடித்து கெடுவதுமேன் மகனும்  மறைந்து குடிப்பதில்லை மாணவனாய் இருந்து படிக்கவில்லை அவனின் வாழ்வைக் கெடுப்பதற்கா தினமும் பணமே கொடுப்பதுமேன் அறிவை வளர்க்கும் மாணவன் அடிமையாகும் மதுவைக் குடித்து அறியாமல் செய்யும் தவறுக்கு அப்பனும் ஆத்தாளுமே துணையாமே இளமை  வாழ்வோ சிலகாலம் இனிமை சேர்க்க ஒழுங்காக இல்லமும் உன்னைக் கொண்டாட இருப்பாய் சிறப்பாய் பொறுப்பாக தலைமைப் பொறுப்பை அறிந்தேநீ தினமும் கற்பாய் முறையாக தினமும் படிப்பைத் தொடங்கினால் தெரியும் மகிழ்வாய் எதிர்காலம்

வெள்ளையப்பன் வேதனையை மறைப்பவன்

வெள்ளை நிறத்தவன்  அவன் வேதனையை மறைக்க வைப்பவன் எல்லா  வீட்டிலும் இருப்பவன் ஏழையின் வீட்டிலும் குடியிருப்பவன் கொள்ளைப் பணத்தை முழுங்கி குடும்பம் முழுதையும் வதைப்பவன் இல்லை யென்றாலும் விடமாட்டன் இம்சையை தீர்க்கவே  விரும்புவான் தொல்லை கொடுக்கும் வலிக்கு தோதாய்  வந்து காப்பவன் பிள்ளைத் தாத்தா பாட்டிக்கும் பிணியைத் தீர்த்து வைப்பவன் எத்தனை  நிறத்திலும் இருந்தாலும் எல்லோர் மனதைப் போலவே துள்ளிச் சிரித்தே தொடர்வான் துணையாய் கூடவே வருவான் வறுமை வயதும் பாராமல் வாழ்வை தொடர விரும்பினால் வள்ளல் போலவே  நிம்மதியை வாரிவழங்கியே மகிழ்ந்திடுவான் முதியோர்தின வாழ்த்துக்கள் ---கவியாழி--

கண் கண்ணாடியைக் காணவில்லை

கண்கண்ணாடியைக் காணவில்லை கண்டு பிடிக்க முடியவில்லை கண் அழற்சியானதால் எப்போதும் கண்சிவந்து எரிச்சல் தாளவில்லை இல்லத்தார் எல்லோரும் கண்டுபிடிக்க இண்டு இடுக்கு  இடமெல்லாம் இரண்டு நாளாய்த் தேடுகிறோம் இயலவில்லை இருக்குமிடம் தெரியவில்லை நாவறண்டு கத்தினாலும் முடியாது நாநயமாய் பேசினாலும் வந்திடாது நான்வைத்த இடத்தைக் காணாமல் நண்பர்கனிடம் சொன்னாலும் கிடைக்காது மூன்று வயது நினைவுகூட முந்தி கொண்டு வருகிறது மூக்கில் மாட்டும் கண்ணாடியின் மூடிப்போன இடம் தடயமில்லை பேயறைந்த முகத்தைப் பார்த்து பேரன் பேத்தி  சிரிக்கிறார்கள் பேந்த பேந்த முழிப்பைப் பார்த்து பேருதவி மனைவியும் செய்கிறார்கள் வீட்டுக்கு வந்தவரின் கதையை விருப்பமின்றிச் சொன்னபோது  நானும் விட்டுவிட்ட பொருள் கணக்கை விபரமாகச் சொல்ல முடியவில்லை

பாம்பையே படம் பிடித்தேன்

Image
மைசூர் பயணம் தொடர்ச்சி ......  நாங்கள் அனைவரும் மைசூரிலுள்ள மிருக காட்சிச் சாலையில் ஒவ்வொரு பகுதியாக சென்று வந்தோம்.அப்போது மதிய நேரம் என்பதால் பெரும்பாலான விலங்குகள் தூங்கிக் கொண்டிருந்தன.என்னைபோல சுறுசுறுப்பாய் சிலதும் இருக்குமே என்றுதான் அந்தப் பகுதிக்குச் சென்றோம்.   ஆம் ,நகரத்து நண்பர் பாம்புகள் இருக்கும் பகுதிக்குச் செல்லலாம் என்று அடம்பிடித்தார் . ஒரு கண்ணாடிப் பெட்டி அருகே  நண்பர்களை வழக்கம்போல நானே படம் பிடித்தேன். அப்போது ....... ""பின்னாடிப் பாம்பு " என்று சொன்னதும் எல்லோருமே அங்கிருந்து துள்ளி ஓடி வந்தார்கள்.நான் அந்த பாம்பு நீளமாய் கண்ணாடிக்குள்ளே ஊர்ந்து சென்றதை கூறியதும் அப்படியா நாங்கள் மிக்கப் பயந்து  விட்டோம் என்றார்கள். என்னோடு வந்த நன்பர்கள் ஆமாங்க சிங்கமேதான்  என்னைப் பார்த்துப் பயந்துடிச்சி ராஜ நாகம்  நலம் விசாரித்தது மலைப்பாம்பு அமைதியானது மைசூர்  அரண்மனை  சூரியனின் காலை வணக்கம்                                                  மைசூரும்  மாலை நேரமும்                        நிமிசம்மா கோயில

மைசூர் பயணமும் படங்களும்

Image
நான் கடந்த வாரம் மைசூர் சென்றிருந்தேன்  அங்கு நான்கு நாட்கள் நண்பர்களுடன் தங்கி மகிழ்ந்தேன்  எல்லா இடங்களும் சென்றேன் இதயம் மகிழ்ந்து திரிந்தேன் அருள்மிகு சாமூண்டீஸ்வரி அம்மன் ஆலையம் எனது அலுவலக நண்பர்களுடன் நான் நந்திக்கோயில் மிருகக் காட்சிச்சாலை விலங்குகளைக் காண சென்ற ஊர்தி என்னைக் காண ஆவலாய் வந்த பாம்பு மைசூர் அரண்மனையின் முகப்புத்தோற்றம் மைசூரின் அதிகாலைத் தோற்றம் இம்மாதம் நடக்கவிருக்கும் தசரா விழா ஏற்பாடுகள் இன்னும் நிறைய படங்கள் எடுத்திருந்தேன்  எல்லாமே என்னால் பதிவிட முடியவில்லை முடிந்தால் விரும்பினால் மீண்டும் பதிவிடுகிறேன் ---கவியாழி--

பதிவர் விழாக் கணக்கு சரிபார்ப்புக் கூட்டம்

Image
விழுந்து விழுந்து சிரிக்கும் கே.ஆர்.பி.செந்தில், மதுமதி,கவியாழி,அரசன்,மெட்ராஸ் பவன் சிவகுமார்,ஸ்கூல் பையன் .சரவணன்,ஆரூர்.மூனா.செந்தில்.,ரூபக் ராம்,மின்னல் வரிகள்,பாலகணேஷ்,புலவர் அய்யாவைக் காணவந்த எனது நண்பர்.செல்லப்பா.ஆகியோருடன் வணக்கத்திற்குரிய அய்யா.ராமாநுசம்

இயற்கைச் சூழலை ரசியுங்கள்

இயற்கை சூழலை ரசியுங்கள் இனிமை கிடைப்பதை உணருங்கள் இன்பம் தேடிச்சென்றாலே எப்போதும் இளமை கொண்டே வாழலாம் கண்கள் குளிர்ச்சி கொள்ளும் கனத்த மனதும் லேசாகும் அங்கம் முழுதும் மகிழ்ச்சியால் அடையும் நன்றே உணர்வாலே மலையில் மரங்களைக் காணுங்கள் மகிழ்ச்சி கிடைத்திடும் நம்புங்கள் இலைகள் தழைகள் பசுமையாய் இன்பம் தந்திடும் இளமையாய் பசுமை மாறா காட்டிலே பாய்ந்து தாவிடும் குரங்குகள் பறந்து பேசிடும் பறவைகள் பார்க்கும் திசையிலே இன்பமே மான்கள் துள்ளி ஓடிடும் மயில்கள் தாவி களித்திடும் முயல்கள் ஒளிந்தே ஓடிடும் உள்ளமும் தூய்மை யாகிடும் அடிக்கடி வெளியே செல்லுங்கள் ஆனந்தம் மிகுவதைக் காணுங்கள் குடும்பம் அனைவரும் சேர்ந்தாலே குறையும் கஷ்டங்கள் தன்னாலே

முத்துக்கள் பத்து

Image
ஈர்ப்பு என்பது இயல்பாக வந்தால் தோற்பதில்லை துணையாகவே நிற்கும் தோல்வியை பார்க்காதவன் உலகில் யாருமில்லை துவண்டு வீழ்பவன் மனிதனில்லை வேள்விக்கு மயக்கமில்லை வீண் சந்தேகம் வெற்றி பெறுவதில்லை முயற்சிக்கு தடைகளில்லை முன்னேற்றம் யாரும் தடுப்பதில்லை? சிரிக்க மறக்காதே சிந்திக்க மறுக்காதே பொறுப்பை விலக்காதே பெருமையாய் பேசாதே காற்றுக்கு வழி சொல்ல கடமையாய் இருபது யார்? காலத்தை நிப்பாட்ட துணையாய் போவது யார்? வாழ்கையை தவறவிட்டு மனம் வெதும்பி போவது நீ..... வாழ விரும்பி முடிவு  வழியை திறக்கவும் நீ நீயே முடிவு செய்  நேர்மையாய் உணர்ந்து செய் உள்ளம் வதைப்படும்போதும் உணர்சிகள் தடைபடும்போதும் இதயம் வலிமையாகிறது ஈரம் இல்லாத எல்லாமே  இறைவனிடம் சேர்த்திடும்  ஆனால்  எண்ணங்கள் விரும்பிய எல்லோரிடமும் சேரும் துன்பப்படுவோருக்கு உதவு துன்பமாய் ஏற்றுக்கொள் துயர் நீக்கி தூய்மையாகு தெய்வமாய் நீ காணலாம் கடல் கடந்தாலும் கண்ணியம் மறக்காதே உடல் உழைப்பை கொடுக்க மறுக்காதே தடம் தவறி வாழ நினைக்காதே தமிழனின் தைரியத்தை என்றுமே இழக்காதே பணம் மட்டுமே மகிழ்ச்சியைத்தராது

வணக்கம்...வணக்கம்...வணக்கம்

வந்துவிட்டேன் மீண்டும் வந்துவிட்டேன் மக்களுக்கு வணக்கத்துடன்  வந்துவிட்டேன் விதியாலும் சதியாலும் வேலைப்பளுவாலும் விரக்தியின் காரணத்தாலும்  இதுநாளும் மதிகெட்டும் மனமும் புண்பட்டும் மக்களைக் காணாமல் இருந்துவிட்டேன் வலைப்பக்கம் வரமுடியாமல்  நெட்டின் வசதிஇன்றி தினமும் தவித்தேன் கதையும் மாறியது கடந்தது கவலையும் கொஞ்சமாய் தீர்ந்தது நிலையும் தேறியது நெட்டும் நிம்மதிதேடி இன்றுதான் வந்தது வலைப்பக்கம் வாராது இருந்தேன் வாழ்கையில் எதையோ இழந்ததாய் வாரம் இரண்டும் தவித்தேன் வந்துவிட்டேன் இனி மகிழ்வேன் துணையாக வந்த எல்லோரும் துடிப்பாக மீண்டும் வாருங்கள் விலையாக அன்பைத் தருவேன் வணங்கியே ஆசியும் பெறுவேன்

துயரங்கள் தொலைந்து போகும்

துயரங்கள் தொலைந்து போகும் ஆம் மறந்தால் துயரமும் மறைந்து விடும்.மறக்க முயற்சிக்க வேண்டும்  எல்லோருக்குமே மனதில் இனம்புரியாத வலி இருந்துகொண்டுதான்  வரும்.யாருக்குமே துன்பமோ துயரமோ இல்லாத வாழ்க்கை அமைவதில்லை. சிலபேர் சொல்லுவதுண்டு நான் எப்போதுமே துன்பப்படவில்லை என்று ஆனால் உண்மை அல்ல. வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் இருந்தால்தான் மனதில் மகிழ்ச்சியை உணர முடியும் என்பதை எல்லோருமே ஒத்துக்கொள்ள வேண்டும் .இந்த அனுபவத்தை உணராதவர்கள் யாரும் இருக்க முடியவே முடியாது.அப்படி அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது காரணம் அவர்களுக்காக வேறுயாரேனும் கஷ்டப்பட்டிருப்பார்கள். துயரை உணர்ந்தால் தெளிவு பிறக்கும். காரணம் தெரியும் அதனால் மீண்டும் அவ்வாறு நடக்குமுன் நம் மனது நம்மை எச்சரித்துவிடும்.எல்லோருமே எப்போதுமே நிம்மதியாக இருப்பதில்லை.சின்னச்சின்ன விஷயங்களிலும் நாம் கோபப்படவோ எரிச்சலடையவோ இருப்பதன் காரணம்  அதனால் ஏற்பட்ட மனகஷ்டமே நம்மை அவ்வாறு செய்யச்சொல்கிறது. வாழ்கையில் ஓவ்வொரு நிலைகளில் துயரப்பட்டிருப்போம் ஒவ்வொருவரும் துன்பப்பட்டிருப்போம்.இதுதான் வாழ்கையின் பரிணாம நிகழ்வு.நம்மையே மறந்து நாம் செ

ஈஸ்டர் நேசம் என்ற எனது வகுப்பாசிரியயை

ஈஸ்டர் நேசம் என்ற எனது வகுப்பாசிரியயை என்னை மிகவும் கவர்ந்த பிடித்த ஆசிரியை. நான் சாதாரண அரசுப் பள்ளியில் படிக்கும்போது எனக்குப் பிடித்த ஆசிரியையை  இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. நல்ல சிகப்பாய் மிகவும் அழகாக இருப்பார்கள் .அடிக்கவே மாட்டார்கள்.கன்னத்தை கிள்ளி செல்லமாய் முத்தமிடுவார்கள்.இன்னும் அவரின் முகமும் முத்தமும் அன்பும்  நினைவில் இருக்கிறது.  அப்போது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் இரண்டாவது படிக்கும்போது  . மதிய நேரத்தில் நிறைய மாணவர்கள் தூங்கி வழிவார்கள் நானும் அப்போது அப்படித்தான் தூங்கினேன். இதை மறுக்க யாராலும் முடியாது அப்போதைய வயது அப்படித்தான் இருக்கும்.ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் கதை சொல்ல தொடங்கினால் எல்லோருமே தூங்காமல் இருந்ததுண்டு அப்போதெல்லாம் நல்ல கான்கிரீட் கட்டிடங்கள் இருக்கவில்லை  ஓடுபோட்ட கூரைகள்தான் இருந்தது. ஆனால் நல்ல உஷ்ணமான காற்றோட்டமாய்  இருக்கும்.அவ்வாறான மதிய வேளையில் சில நேரங்களில் நானும் அசந்து தூங்கி வழிந்திருக்கிறேன்.அப்போதெல்லாம் சிறு குச்சியை வைத்து அடிப்பதுபோல்  மிரட்டுவார்கள். இன்னும் சில ஆசிரியர்களோ வீட்டுப்பாடம்  எழுதாமல் தல

கல்விக் கற்க உதவுங்கள்

பணம் மட்டும் வாழ்வாகாது பணத்தை  உண்ண முடியாது பணமும்  குணத்தை வாங்காது பணமே வருந்தி அழாது மனிதம் கண்டு மகிழுங்கள் மக்கள் மனதில் நில்லுங்கள் மட்டில்லாத உதவி செய்து மற்றோர் மனதில் வாழுங்கள் நேரில் பார்க்கா தெய்வத்தை நேர்மை இருந்தால் காணலாம் நன்மை நாளும் செய்தாலே நன்றே மகிழ்ந்து காணலாம் உண்மை உழைப்பு சத்தியத்தை உலகில் அனைவரும் போற்றியும் பெண்ணை மதித்து வாழ்ந்தாலே பேரும் புகழும் கிடைக்குமே கல்விக் கற்க உதவுங்கள் கருணை கொண்டே செய்யுங்கள் கஷ்டம் கொண்டே படிப்போரை கண்டு உதவி செய்யுங்கள் படிக்கும் பிள்ளைகள் யாவருமே பதராய் போக மாட்டார்கள் பண்பைச் சொல்லிக் கொடுத்தாலே படிப்பில் மேன்மைக் கிடைத்திடுமே

இனிவேண்டாம் என்தாயே

பழிவாங்கும் செயலாலே பாவம் மட்டும் குறையுமா பாரம் அதிகமாய் மாறுமா பழியும் உன்னோடு சேருமா மொழியாலே சின்னக் கணைவீசி முறையின்றி சொன்ன வார்த்தை வினையாக  எனைக் தாக்குமா விதிமாறி உன்னை வெல்லுமா வயதான காலத்தில் வேண்டுமா வாழ்த்துகிற நிலையும் மீறுமா தடையான காரணம் என்ன தயை கூர்ந்து சொல்வாயா விதியோடு விளையாடும்  நீ வீணான மதிகொள்ளக் காரணம் விளையாட்டுப் பிள்ளையின் செய்கையா விடுத்தவர் கல்வியின் கொள்கையா இனிவேண்டாம் என்தாயே இப்போதே இதை நிறுத்திவிடு இளவலைநீ  அன்பாலே வாழவிடு இனிமையை இனியேனும்  காணவிடு மதிகெட்டேன் மனையை விட்டேன் மருத்துவம் விரும்பியே இழந்தேன் இனியிழக்க என்னிடம் ஏதுமில்லை இனியாவது விதியை மாற்றிவிடு

மனிதம் போற்றி வாழுங்களேன்

இனமே தமிழன் என்றுரைத்து எதிலும் சேர்ந்தே முடிவெடுத்துப் பணமோ மதமோ பாராமல்-நட்பை போற்றி தினமே வாழுங்களேன் அண்ணன் தம்பி உறவுகளாய் அனைவரும் கூடி வாழ்வதனால் திண்ணைதோறும் நட்புறவாய்-அன்பை தினமும் போற்றி மகிழ்ந்திடலாம் உறவை மறுத்து வாழ்வதனால் உயர்வும் மகிழ்வும் தடையாகும் பிரிவைப் போற்றி வாழாமல்-ஒன்றிப் பிணைந்தே  மகிழ்ந்தே வாழுங்கள் மகிழ்ச்சியின் தத்துவம் புரியுமே மனித நேயம் தெரியுமே மக்கள் மனதை அறியுமே-உறவை மானிடம் போற்றி மகிழுமே சாதியும் மதமும் சொல்கிறது சரிசமம் உயிரென உயர்வாக நீதிக் கதைகளும் இதிகாசம்-எங்கும் நித்தம் சொல்வதும் இதைத்தானே மனித நேயம் வேண்டாமென மதமும் எங்கும்  சொன்னதில்லை மனிதனாக வாழ்வதற்கு  -நீங்களும் மனிதம் போற்றி வாழுங்களேன்

முகப்புத்தகத்தில் வெளிவந்த முத்துக்கள் பத்து

தலைவனாய் தன்னையே பிரகடனப்படுத்திக்  கொள்பவன் புத்திசாலியில்லை தானென்ற அகம்பாவ ம் தவிக்க விடும் . தறுதலையாய் மாற்றிவிடும நண்பனை தெரிந்து கொள்ள நாடுவாய்  -கஷ்டமென நட்பின் ஆழத்தை அறிவாய் இறந்தபின்பு மறுபிறவியில் மனிதன்   சாதியில் சேர்க்கப் படுகிறான்? தேடல் இருந்தால் தான் தெய்வமும் கூடவரும் நமக்கெங்கே போச்சு மனித நேயம் ? தமிழ்இன உணர்வு? உன் வாழ்க்கை  உன் வசந்தம்   உன் விருப்பம்  வாழ்ந்துவிடு வாழ்க்கையை ! விருப்பமானவர்களாய்  தினமும் காதலியுங்கள்  அதற்கொரு தினம் வேண்டாமே ஈர்ப்பு என்பது  இயல்பாக வந்தால்  தோற்பதில்லை  துணையாகவே நிற்கும் தேடினால்தான்  தெளிவு கிடைக்கும் ஓடினால்தான் ஓய்வெடுக்க முடியும் தேடுங்கள் ஓடுங்கள்  வெற்றியும் கிடைக்கும் ----கவியாழி----

"முயன்றால் முடியும்"

        வழக்கத்தில்  " முயன்றால் முடியும்" , "முயற்ச்சித் திருவினையாகும் ", "முயற்சியில்லாதார் தோல்வி அடைவார்கள் ", "முயற்சி இல்லாதார் இகழ்ச்சி அடைவர்" இப்படி பல பொன்மொழிகளையும் பழமொழிகளையும் நாம் அறிந்தே கேட்டுவருகிறோம் சொல்லிவருகிறோம். உண்மை என்ன?             அதற்காக என்னென்ன திட்டமிடல் செய்து வருகிறோமா இல்லையே அதையும் முயற்சிச் செய்யவேண்டும் என்றே ஒவ்வொருமுறையும் காலம் கடத்தி வருகிறோம்.இதனால் யாருக்கு என்ன பயன்  என்பதை அறியாமலே சிலநேரங்களில் நம்மைநாமே ஏமாற்றிக்கொள்வதாய்  அமைந்துவிடுகிறது.  ஆனால் முயன்றால்  மனதும்  நம்மை அவ்வாறு  ஏமாற்றுவதில்லை         இதற்குத் தீர்வென்ன எப்படி ஆரம்பிப்பது எப்படி முடிப்பது என்ற வரைமுறையை நாம் தீர்மானிதாலோலிய எந்த விஷயத்திலும்  வெற்றி என்பது எளிதில்  கிடைக்காது.வரைமுறையை வரையறுக்க  வேண்டும் . தெளிவான தீர்க்கமான திட்டமிடல் வேண்டும்.அதற்காக மட்டுமே உழைக்கத் தயாராய் இருக்க வேண்டும்.         எல்லா வெற்றித் தோல்விக்குமே  காரணம் மனம்சார்ந்த  உணர்ந்த விஷயம்தான்.மனதில் உறுதியும் அழுத்தமும்  இல்லாவிட்டால் அச்செயலை

பதிவர்கள் கூட்டம்

Image
                                 நான் சுய அறிமுகம் செய்யும்போது                                        நண்பர்களுடன் நான்(நன்றி வெங்கட்) ஆர்வமாய் வந்தார்கள்  அனைவரும் ஆங்காங்கே பேசினார்கள் மகிழ்ந்தார்கள் ஆனந்தமாய் சிரித்தார்கள்  இணைந்தார்கள் அன்பாய் எல்லோரும் இருந்தார்கள் இன்பமே முகத்தில் தெரிந்தது இளமையாய் இருந்தது மகிழ்ந்தது துன்பமும் மறந்தது நட்பால் தூரமாய் அன்றுமே விலகியது பண்பால் சிறந்த படைப்பாளிகள் பசியைத் துறந்த உழைப்பாளிகள் நல்லதே சொல்லும் நல்லோர்கள் நட்பையே போற்றும் நல்பதிவர்கள் இளமை மறந்த பெரியோர்கள் இன்பமும் வெறுக்காத  இளைஞர்கள் இன்னுமே மணமாக பையங்கள் இனிமேல் தேடப்போகும் அவர்களும் சுதந்திரம் கொண்டே மகிழ்ந்தார்கள் சூழ்ந்தே பேசிச் சிரித்தார்கள் சொந்தம் கொண்டு அழைத்தார்கள் சொல்லொன்னா இன்பத்தில் மகிழ்ந்தார்கள் ---கவியாழி---

என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள்

Image
ஆர்வத்துடன்  அனைவரும்  புலவர் அய்யாவுடன் பதிவர்களும் நானும் எனது சுய அறிமுகத்தின் பொது

பதிவர்கள் வரவைக் கண்டு மகிழ்ந்தேன்

பதிவர்கள் எழுச்சியைக் கண்டேன் பறந்து வருவதை அறிந்தேன் உறவை வளர்க்க துணிந்தேன் உங்களை வரவேற்று மனம் கனிந்தேன் சொல்லிப் புகழ விழைந்தேன் சொல்லில் தடுமாறி நின்றேன் மெல்லியச் சிரிப்பினை உதிர்த்தேன் மீண்டும் மீண்டுமே சிரித்தேன் நட்பில் நானும் மிதந்தேன் நாளும் அன்பில் நெகிழ்ந்தேன் பேச வேண்டித் துடித்தேன் பேசியப் பின்பு நினைத்தேன் வீரம் கண்டு சிலிர்த்தேன் தூரம் கேட்டுத் தொடர்ந்தேன் தொலைவில் இருப்பதை அறிந்தேன் தூய நட்பால் தொடர்ந்தேன் நேரில் காண இருந்தேன் நேரமின்றி நான் தவித்தேன் தமிழைத் தேனாய் குடித்தேன் தாகம் தீர்ந்து முடித்தேன்

மூத்தப் பதிவருடன் சென்னைக்கு வந்த முதல் பதிவர்

Image
      இன்று மாலை மூன்று மணிக்கு எனக்கு அவசர அழைப்பு திரு.ரமணி அய்யா. மதுரை அவர்களிடமிருந்து "நான் சென்னை வந்துவிட்டேன் நான் உடனே புலவர் அய்யாவைப் பார்க்க முடியுமா என்று சொன்னார்.  உடனே எக்மோர் ரயில் நிலையம் சென்று அவரை புலவர் அய்யாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். அங்கு முதன் முதலில் திரு .ரமணி அவர்கள்தான் பதிவர் திருவிழாவுக்கு வந்தார்  எனபதை சுமார்.மாலை 4.15 க்கு புலவர்.அய்யா அவர்கள் உறுதி செய்தார்.  அதன்பின் இருவரும் பழைய கதைகளை பேசி மகிழ்ந்தார்கள்.எனக்கு ஏதோ புத்தகத்தில் படித்த ஞாபகம்.இருவரும் தொடர்ந்து பேசியதிலிருந்து எவ்வளவு பெரிய ஜாம்பவான்களிடம் நட்புப் பாராட்டியுள்ளேன் என்பதை நினைத்து  அகமகிழ்ந்தேன். திரு.ரமணி அய்யா அவர்கள் ஈ.வே.ரா. பெரியாரின் பாட சாலையில்  அவருடன் அன்பைப் பகிர்ந்து திருச்சியில் பயின்றவர் என்பதை அறிந்து மனம் மகிழ்ந்தேன்.அப்போதே  பெரியாருடன் வீட்டில் தங்கி அவருக்கு பணிவிடைச் செய்தவர் என்பதை அறிந்து வியப்புற்றேன். அதுபோலவே புலவர் அய்யா அவர்கள் மாண்புமிகு.எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்தது பற்றியும் அவரின் ஆளுமைத்திறன் மற்றும் மனித நேய

விழாவில் கலந்துகொள்ளும் பதிவர்கள் கவனத்திற்கு...

             இன்றிலிருந்தே பதிவுலகம் சென்னையை நோக்கி புறப்படத் தயாராய் இருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க நாங்களும் தயார்தான் என்பதை அனைத்துக் குழுவினரின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன் செய்ய வேண்டியது           1,    பதிவர்கள் ஒவ்வொருவரும் கூடவே இன்னொரு பதிவரை அழைத்துவர முயற்சியுங்கள்.இவ்வாறான தனியுலகில் அவர்களையும் இடம்பெற செய்வது எல்லோரின் கடமையாகும். அவர்கள் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்விலும் உங்களின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும் .                2,   நிகழ்ச்சிக்கான இடத்தின் விலாசமும் ஒருங்கிணைப்புக் குழுவினரின் கைபேசி எண்களும் கையோடு மறக்காமல் எடுத்துவர வேண்டும். அல்லது வரும் முன்பே தகவலை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ தெரிவித்தல் நலம்.          3,  சென்னை வந்தவுடன் அரங்கத்தில் உள்ள செல்லும் முன்பே முன்பதிவு  பகுதியில் உள்ள பொறுப்பாளரிடம் சென்று உங்கள் பெயரைப் பதிவு செய்து  உங்களுக்கான அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.         4  அமைதியான முறையில் எல்லோருக்கும் நாகரீகமாக வணக்கம் சொல்லி நலம் விசாரித்து நமது பண்பாட்டை காத்தல் நன

ரசித்தவர்கள்