Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

இதுவும் வாழ்க்கையா?

திருடன்கூட தன்தொழிலை தெய்வமென போற்றிடுவான் அரசியல் வாதியும் அவனைப்போல் அலைந்தே திரிந்தே செய்திடுவான் பதுக்கல்காரன் பதுக்கியதை பழகிப்போன தொழிலென்பான் கல்வியை விற்கும் மோசடியும் கடவுள் சேவை தொழிலென்பான் லஞ்சம் கேட்போன் லட்சியமாய் கொஞ்சம்தானே கொடு என்பான் வஞ்சகம் செய்வோன் வருத்தமின்றி வாழ்க்கை பிழைப்பு இதுவென்பான் தினமும் காலை எழுந்தவுடன் திரிந்து அலைந்தே செய்திடுவான் பொருத்தமான தொழிலென்றே புதிதாய் தொழிலை தேட மாட்டான் சீ......இதுவும் வாழ்க்கையா?

மதமின்றி மனிதனாக முடியுமா?

http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post.html

ஆம் ! தமிழா .......

வாய்மூடி மௌனியாக வாழத்தான் வேண்டும் வந்தோரோயும் சொந்தமாக வாழ்த்தத்தான் வேண்டும் கூன் குருடு செவிடு போல இருக்கத்தான் வேண்டும் கூடிவாழ்வதில் ஒற்றுமை கொண்டுத்தான் ஆக வேண்டும் தொழில் முடங்கி தொடரத்தான் வேண்டும் தொல்லைகளைத் தாங்கியும் சிரிக்கத்தான் வேண்டும் வந்தோரை வாழச் சொல்லி வழியின்றி தவிக்க வேண்டும் வாழ்நாளை  சுருக்கி வயிரும் காயத்தான் வேண்டும் சன நாயகம் என்றும் சகித்துக்கொள்ள வேண்டும் சமதர்ம சமுதாயம் போற்றத்தான் வேண்டும் சாதியும் வேண்டும் சமத்துவமும் வேண்டும் மீதியும் கேட்டு மிதிபட்டு முரண்பட்டும் வாழ வேண்டும் உண்ண உணவில்லை உள்ளூரில் சங்கம் வேண்டும் சாத்திரம் பேசி சகோதர சண்டையும் வேண்டும் இருந்தாலும் எல்லாமே சகித்துவாழ வேண்டும் எப்போதும் தமிழுக்காக ஏழ்மையோடும் வாழ வேண்டும் ஆம் .. தமிழா ! வாழ்ந்துதான் ஆக வேண்டும்

இதழ் வேண்டும் எனக்கு..........

இதழ் வேண்டும் எனக்கு இதழ் வேண்டும் இமைமூடிப் பருக இதழ் வேண்டும் இணையாகும் முன்னே இதழ் வேண்டும் இறுக்கி அணைத்தபடி இதழ் வேண்டும் நுனி நாக்கில் சுவைக்க இதழ் வேண்டும் நெடுநேரம் முடியாத இதழ் வேண்டும் முடியாத நேரமாய் இதழ் வேண்டும் முப்பொழுதும் உணவாக இதழ் வேண்டும் எப்போதும் சுவையாக இதழ் வேண்டும் எழுச்சிப் பெரும் முன்னே இதழ் வேண்டும் இனிக்கின்ற  கனியாக இதழ் வேண்டும் கட்டுடலை சூடாக்க இதழ் வேண்டும் கனிந்தவுடன் முழுவதுமாய் கடைசிவரை எனக்கு  அது ? வேண்டும்.

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

மேலே கண்ட பழமொழி எல்லாத  தமிழ் மக்களுக்கும் தெரிந்த ஒன்று. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள்  ஒரு சில நாட்களில்  இப்படி எண்ணி வருந்துவதுண்டு.இது நமது கலாச்சாரம் மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்படும் நிகழ்வும் உண்மையும் கூட. சிறிய வயதில் பள்ளி செல்லும்போது பார்த்து பத்திரமாய் திரும்பி வா சாலையை கடக்கும்போது இருபுறமும் பார்த்து  வா என்றும். பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டயா ? பள்ளியில் என்ன பாடம் நடத்தினார்கள்  என்றும் அக்கறையோடு விசாரிப்பார்கள் அப்போது நல்ல பிள்ளையாக எல்லாவற்றையும்  ஒன்று விடாமல் சொல்லுவார்கள். அதே பிள்ளை கல்லூரிக்கு போகும்போது  நீங்க பத்திரமாய் அலுவலகம் சென்று வாருங்கள் சரியா சாப்பிடுங்கள்என்றும் நான் வீடு திரும்பி  வரும்போது  உங்களுக்கு  ஏதாவது வாங்கி வரட்டுமா என்பது போன்ற  அக்கறையும் அன்பில் முதிர்ச்சியும் தெரியும்.பண்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்காலம் பற்றிய யோசனையையும் கேட்பார்கள்.. வேலைக்கு செல்லும்போது அன்பிற்கு குறைவிருக்காது ,நாம் சாப்பிட விரும்பும்,  விரும்பாததையும் வாங்கி வந்து  நம்மோடு பகிர்ந்துண்டு மகிழ்வார்கள்.சரியாக  ஊதி

"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"புத்தக வெளியீட்டு விழா

Image
"அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"  புத்தக வெளியீட்டு விழா  படங்கள் திரு,நல்லி குப்புசாமி அவர்களால் நான் (கவியாழி) கௌரவிக்கப்படுகிறேன் திரு,திருமாவளவன் அவர்களால் மணிமேகலை ப பிரசுரத்தின் சார்பாக நினைவுப் பரிசு  வழங்கப்படுகிறது  திரு.திருமாவளவன்  அவர்களால் "அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?"  புத்தகம் வெளியிடப்பட்டு  புலவர்.ராமநுசம் அவர்கள் புத்தகத்தை பெற்று கொள்கிறார். இவ்விழாவிற்கு   குடும்பத்தோடும் நண்பர்களோடும் தனியாகவும் வந்திருந்து வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, கவியாழி.கண்ணதாசன்

தற்கொலைத் தண்டனை யாருக்கு?

எண்ண கனவினில்  நாளும் வடிவமைத்து எத்தனையோ சிந்தனையை முன் நிறுத்தி அத்தனையும் வண்ணமாய் உருக்கொடுத்து-அன்பாய் சித்தனாக சிலைபோல நெஞ்சில்  வளர்த்தார்கள் சிறுஎறும்பும் சீண்டாது பார்த்திருந்து சிறிய வயதிலே  செம்மையாக நகையணிந்து உரிய கல்வியையும் உடன் கொடுத்து-ஊர்பேச பருவ வயதையும் பார்த்து பூரித்திட்டார்கள் தெருவோரம் நின்று தினமும்  ரசித்து தினம்தோறும் உணவும் விரும்பிய தீனியும் மனம்கோனது மகிழ்ச்சியாய் திணித்து-அன்றாடம் அகமெல்லாம் அன்பொழுக நாளும் பார்த்தார்கள் இளமை பருவத்திலே எத்தனையோ  கற்று எளிமை பண்பையும் சொல்லி கொடுத்து வளமையாக்கி வடிவமைத்து  வாழவேண்டி-நலம்கான கிழமை தோறும விரதமும் இருந்தார்கள் இத்தனையும் செய்தும் இழி மனதில் பித்தனாய் மாறி  பிறள் புத்தியால் தத்துவம்  பேசி தவறான முடிவை-மனமொடிந்து சத்தியம் தவறி சாகமட்டும் துணிந்ததால் புரியவில்லை எனக்கு புதிரோன்றும் அறியவில்லை புரிந்தவரையும்  காக்க பொருளேதும் சேர்க்கவில்லை மடையனே மன்னிக்கமுடியாத இடையனே-விடையடைய மனம்திறந்து  சொன்னாயா மனிதனாக நின்னாயா மதி  இழந்தோரே  மனபயம்  கொண்டேரே விதி முடியவில்லை வீணான எண்ணத்தால்

ரசித்தவர்கள்