Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

ஆண்களின் மாரடைப்புக்குக் காரணம் பெண்களா?

மாரடைப்பு நோய் என்பது பெண்களை விட  ஆண்களை அதிக அளவில் தாக்குகிறது. அதிகமாக   என்பது சதவிகிதம் ஆண்கள் இவ்வாறான மாரடைப்பு நோய்க்கு உள்ளாகிறார்கள்.சரியான உடற்பயிற்சி உடலுழைப்பு,உணவு கட்டுப்பாடு இல்லாமை ,அதிக அலைச்சல்,பணத்தேவைக்கான நெருக்கடி போன்ற காரணிகளே பெண்களைவிட ஆண்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம்  உண்டாகி மாரடைப்பு ஏற்படுகிறது. மேலும் நம் உடலின் கழிவானது சிறுநீர்,மலம்,வேர்வை,மாதவிடாய்,விந்து வெளியேறுதல் போன்ற  இயற்கை நிகழ்வுகளால் நமது உடலில் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு  நல்ல ரத்தம் இருதயத்திற்குக் கிடைக்கிறது.நாற்பது வயதில் தான் அதிக உழைப்புக்கும் அலைச்சலுக்கும் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி வீடு வாகனம் மற்றபிற பொருட்களையும் பிள்ளைகளின் உயர்கல்வி அவர்களின் எதிர்கால நலன் குறித்த கவலைகள் போன்ற காரணங்களே மனவழுத்தம்,உறக்கமின்மை ,வீட்டில் பிரச்சனைகள் எனப் பல வழிகளிலும் மனிதனின் மனதை முடக்கச் செய்யும் காரணிகளாய் இருக்கிறது உடலில் ஹார்மோன் உற்பத்தி குறையும்போதும் நமக்குச் சில அறிகுறிகளைக் காட்டும் அப்போதே நாம்  மருத்துவரை அணுகி நமது இதயத்தின் இயக்கம், செயல்பாடு,ரத்தத்தின் அடர்த்தி,எ

பள்ளிச் செல்லும் பிள்ளைகளே

பள்ளி செல்லும் பிள்ளைகளே பாடம் படிக்கப் போறீங்களா நல்ல செய்தி அறிவுரைகள் நாளும் கற்கப் போறீங்களா சொல்லக் கேட்ட செய்திகளை சொல்லி வைத்த உண்மைகளை மெல்ல மெல்ல உள்மனதில் மிகவும் நன்றாய் சேர்த்திடுங்கள் தாத்தா பாட்டி சொல்வதிலே தமிழில் சொன்ன கதைகளிலே படித்தால் தானே புரிந்திடும் பள்ளியில் இதையும் படிப்பீரே உலகம் முழுவதும் உங்களுக்காய் உரிய முறையில் எழுதியதை பலதும் கற்றுப் பயனடைவீர் பாரினில் சிறப்பாய் இருந்திடுவீர் இதையே அனைத்து ஆசிரியரும் எடுத்துச் சொல்லி மாணவர்க்கும் கதையில் உள்ள உண்மைகளை கற்றுத் தெளிய  வைத்திடுவீர் உள்ளம் மகிழப் படித்திடுங்கள் உண்மை நிலையும் அறிந்திடுங்கள் உலகம் சிறக்க வாழ்ந்திடவே உயர்ந்த களமே அமைப்பீரே

வேலைக்கு ஆட்கள் தேவை

வேலைக்கு ஆட்கள் தேவை ,ஆண்-பெண் ,அதிகச் சம்பளம், ஏ.சி வசதியுடன் வேலை வாய்ப்பு,தங்குமிடம் உணவு இலவசம்,குறைந்த நேரம், அனுபவமில்லாத,குறைந்த கல்வித் தகுதி இருந்தால் போதும்,வாகனம் இலவசம்,குழந்தைகள் காப்பகம் உண்டு, போனஸ் ,வீட்டுவாடகை , குடும்பத்துடன் தங்குமிடம் இலவசம் போன்ற  பல சலுகைகளுடன் அழைத்தாலும் உள்ளூரில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. ஆனாலும் மும்பை,குஜராத்,டெல்லி,கேரளா,ஆந்திரா,கர்நாடகா  போன்ற வெளியூர்களுக்குச் சென்று அங்குக் கடுமையாக உழைத்தும் அந்தந்த ஊர்களில் தங்கியும் வேலைச் செய்கிறார்களே ஏன் அப்படி இங்கு நம்மூரிலேயே ஏன் உழைக்க முன்வருவதில்லை .பல நேரங்களில் கொத்தடிமை மீட்பு ,அங்குத் தமிழர்களை அடித்து விரட்டுகிறார்கள்,சம்பளம் கொடுக்கவில்லை  போன்ற எல்லாப் பிரச்சனைகள் இருந்தாலும் உள்ளூரில்  வேலைசெய்வதில்லை  இது ஏன்? யாரால் ? எப்படி? இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதோ? ஏழ்மை என்பதே தமிழ் நாட்டில் இல்லையோ? அல்லது தொழில் வளம் மிகுந்த நிலையில் உள்ளதோ?. தமிழர்களின் பொருளாதார நிலை  உயர்ந்து விட்டதோ? இப்படி எண்ணற்ற கேள்விகள் என்மனதில் எ

விரும்பி உன்னை முத்தமிட...

நண்பரையே இன்று காணவில்லை நாளும் கடந்து போகவில்லை எந்நிலையை எடுத்துச் சொல்ல -அவரன்றி எவரிடமும் மனது இல்லை பொன்பொருளைக் கேட்டதில்லை பெரும் தொகையும் தருவதில்லை என்னிடமும் கிடைப்பதற்கு வழியுமில்லை-அவரும் எனக்கும் சுமையாய் இருந்ததில்லை இரவிலின்று தூங்கவில்லை இன்று மனதில் மகிழ்ச்சியில்லை என்னவென்று புரியவில்லை -எப்படியோ என்னிடம் அமைதி இல்லை திரும்பி வரும் நேரத்தை நான் திசையெங்கும் பார்த்திருக்கிறேன் தெருவோரம் நின்று நானும்-உனக்காய் தேடிவந்து  தவமிருக்கிறேன்

இராய.செல்லப்பா அவர்களை வாழ்த்துவோம்

Image
          எனது நெருங்கிய நண்பரும் நமது வலையுலகில் "செல்லப்பா தமிழ் டயரி "மற்றும் "இமயத்தலைவன்" ஆகிய இரண்டு வலைப்பூக்களை வைத்திருக்கும் அன்பிற்குரிய திருவாளர்.இராய.செல்லப்பா அவர்கள் Corporation Bank ல் துணை பொது மேலாளராகவும் (AGM)  பணியாற்றி ஓய்வுபெற்று இப்போது கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள்  எழுதி வருகிறார்.          இவர் டெல்லியில் பணியாற்றியபோது டெல்லி தமிழ் சங்கத்துடன் இணைந்து பல கவியரகங்கள் பட்டிமன்றங்கள் நடத்தியும்  டெல்லித் தமிழர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து அரியபணியாற்றியவர்.அப்போதே பல தமிழ் ஆர்வலர்களை டெல்லிக்கு அழைத்து  அவர்களைக் கௌரவித்து மகிழ்ந்தவர்.          ஏற்கனவே இரண்டு கவிதை நூல்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.தற்போதும் ஒரு "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் " என்ற கதைத் தொகுப்பையும் வெளியிடவுள்ளார்.மேலும் அகிலஇந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் தனது படைப்புகளை ஒலி & ஒளி பதிவிட்டிருக்கிறார். ""அமரர் பிரபாராஜன் அறக்கட்டளை சார்பாக 'கலைமகள்' நடத்திய சிறுகதைப்போட்டியில்  'சாந்தி நிலவ வேண்டும்'

உறவென்று சொல்ல வெட்கமடா...

சொல்லாமல் கேட்காமல் சுயமாக முன்வந்து கொடுக்கா உறவும் சோம்பலாய் இருக்கையில் அறிவைச் சொல்லாத அப்பாவும்  அம்மாவும் இல்லாத போதும்  இயைந்து எடுத்துச் சொல்லா உடன்பிறப்பும் இருப்பதைக் கொடுத்துத் துணையாய் இன்முகம் காட்டா நட்பும் பொல்லாத நேரத்தில் புரியாத போலியாய்த் தேவையென நடித்தே தள்ளாத காரணம் சொல்லி தாங்க வைக்கும் உறவும் நிலைமை தெரிந்தும் வருந்தாமல் நேரமும் பழிக்கும் மனைவி வயதைக் கடந்தும் வேலையின்றி வருந்தாத வாரிசின் அலட்சியமும்  உறவென்று சொல்ல வெட்கமடா உலகில் இதுவும் உண்மையடா பிள்ளைகள் இருந்தும் தொல்லையடா பிறப்பே தவறாய் எண்ணுதடா @@@@@ கவியாழி  @@@@@@

கூட்டமாய் சொந்தங்கள் அருகில் இருந்தும் ...........

கூட்டமாய்ச் சொந்தங்கள் அருகில் இருப்பர் கொடுப்பதை வாங்கிடப் பலர் வருவர் நோட்டமாய்க் கவனித்து நேர்வழி சொல்லாது-கெட்டும் நோயுற்ற மனதையே குத்திக் கிழிப்பர் வாட்டமாய் வாழ்கையில் வந்தே உதவிடார் வழித்துணை யாருமே வந்திட மாட்டார் வாழ்க்கையில் துன்பமாய்  வாழ்ந்திடும் போதிலே-இருந்தும் வசவுமாய்ப் பழியுமாய்ச் சொல்லத் தயங்கிடார் கூட்டணி சேர்ந்து பழித்தே  பேசுவர் கூடுதல் சுமையாய்த் தனித்தே வைப்பர் பாட்டனும் பேரனைப் பார்க்க மறுப்பர்-ஆனாலும் பாசமாய் இருப்பதாய் அனைவரும் நடிப்பர் ஏழ்மையைப் போக்க யாருமே வந்திடார் ஏசியும் பேசியும் இருக்கத் தவறிடார் ஊரையும் நாட்டையும் உவமையாய்ச் சொல்லியே-வாழ்வில் ஊழ்வினை என்றே பலரும் சொல்லிடார் கேட்டதைக் கொடுத்து உதவி செய்தால் கேளிக்கை பேசலை நிறுத்தி கொண்டால் வாழ்கையின் தத்துவம் விளக்கிச் சொன்னால்-நிச்சயம் வணங்கியே கடவுளாய்  நன்றி சொல்வார் இயன்றதைக் கொடுத்து உதவி செய்து எதிர்காலத் தேவைக்கு  வழி அமைத்து முயன்றுமே விரைவில் முன்னுக்கு வர-உறவே முடிந்தால் அனைவரும் உதவி செய்வீர் ******கவியாழி******

ரசித்தவர்கள்