Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

முற்போக்குச் சிந்தனையால் வாழும் மனிதமே!

சாதியெனும் பட்டத்தைத் தலைமீது தந்ததா சக்தி வாய்ந்த எதிரிகளால் வளர்ந்து வந்ததா மோதிவரும் கூட்டமெல்லாம் உழைக்க மறுப்பதால் முன்னோர்கள் சொன்னதென வளர்த்து வருவதா பாதிவயிறு உண்ணாமலே உழைக்கும் வர்க்கமே பகலிரவாய் மோதிக்கொண்டு சாதி வளர்ப்பதா மீதியுயிர் போகும்வரை வெட்டிச் சாய்ப்பதால் மீண்டுவரும் பயனையாரோ மகிழ்ச்சிக் கொள்வதா? பாடுபட்டுச் சேர்ந்து வாழும் கூட்டம் மட்டுமே பகலிரவாய் அன்பு கொண்டு கூடிவாழுமே நாடுவிட்டு நாடுபோவோர் அந்த நாட்டிலே நாகரீக போர்வையாலே சொல்ல மறுப்பதேன்? வேளாண்மை  நம்தொழிலாய்ப் போற்றி வாழ்வதால் வேலைவெட்டி யில்லா நிலைமை மாறியே ஏழைகளும் ஒற்றுமையாய் சேர்ந்து வாழவே ஏற்றத்தாழ்வு மாறிவிடும் உண்மை உழைப்பிலே! அன்புடனே ஒற்றுமையாய் இணைந்து செல்வதால் அன்னியனும் பயப்படுவான் நம்மைப் பிரிக்கவே பண்புடனே பழகுவதால் பயனும் உள்ளதே படித்தோரே புரிந்தோரே உண்மை நிலையிதே! படிப்பறிவு நிறைந்திருக்கும் இந்தநாளிலும் பகைமையோடு வாழ்வதனால் பயனும் இல்லையே முடிவேடுப்பீர் வாழும்வரை உண்மை நிலையினை முற்போக்குச் சிந்தனையால் வாழும் மனிதமே! (கவியாழி)

கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா?

கடவுளே  கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா? கயவர்கள் நிம்மதியாய் காசு பார்க்க விடுவானா? திருடன்  துரோகிஎல்லாம் தைரியாமாய் திரிவானா? காசு பணத்திற்காக கள்ள தொழில் செய்வானா? இல்லாதவன் ஏங்குகிறான் இருப்பவனோ  பதுக்குகிறான் உள்ளதை சொல்பவன் உயர்வின்றி தவிக்கிறான் நல்லவனாய் இருப்பவன் நாளும்  மனதால்இறக்கிறான் பொல்லாங்கு சொல்பவன் புகழோடு இருக்கிறான் உனக்காக செய்வதை ஏழைக்கு கொடுக்கசொல்! உயர்வாக உன்னிடம் ஒழுக்கத்தை பயிலசொல்! தனக்காக உள்ளதுபோக தருமம் செய்யச்சொல்! மனித நேயம்  மறக்காமல் மனிதனை இருக்கசொல்! மனிதனாக இருக்க மனிதாபிமானம் மதிக்கசொல்! பெற்றோரை,மற்றோரை மாண்புடனே மதிக்கசொல்! தனியொழுக்கம் கற்றுதந்த ஆசிரியரை மதிக்கசொல்!!! (கவியாழி) 21.12.2012 ன் மறுப்பதிவு

குறள் வெண்பா

ஏனிந்த நாட்கள் இனிமை இழந்திங்கு ?   நானெங்குப் போவேன் நவில்   பூமானே! பெண்ணே! பூத்தமுதே! வந்தெனக்குத் தா..மானே இன்பம் தழைத்து! திடுக்கிட வைத்த தொடரைப் பார்த்து நடுங்கியே சென்றேன் நகர்ந்து! உறவுகள் சோ்பணம் உள்ளவரைத் சேரும்! சிறப்புகள் போகும் சிதைந்து தலைகுனிந்து நிற்கின்றேன்! தாயே அருள்செய்!   நிலையறிந்து காப்பாய் நிலத்து! சொல்லாலே இன்றும் சுடுகின்றாய்! வாழ்நாளில்   இல்லா நிலைஇஃது எனக்கு இனத்தின் பெயரால் இடும்பை தொடரும்   பணமே படைக்கும் பழி   இறைவன் இருந்திங்கு மக்களைக் காத்தால் குறைகள்   வருமோ குவிந்து ?   தாரணியில் போற்றித் தமிழை வளர்க்கின்ற   பாரதி தாசனைப் பாடு!

அருகிலே இருந்தும் அறிவில்லாக் கூட்டாளி

அப்பன் பங்காளி அவனுமே எதிராளி அருகிலே இருந்தும் அறிவில்லாக்கூட்டாளி சுப்பன் வந்து சண்டை போட்டால் சுருக்கெனக்கோபமாய்ச்சொந்தமென வருமாம் ! வசிக்கும் இடத்திலே வறப்புச்சண்டையிட்டு வருவோர் போவோரிடம் வசையான சொன்னாலும் கசக்கும் வார்த்தையால் கண்டபடி திட்டினாலும் பசிக்கும் நேரத்திலே பங்கிட்டு உண்பாராம் ஆடுகளும் மாடுகளும் அருகே சென்றாலே அதையும் விரட்டி அங்கிருந்து துரத்தி ஓடிச் சென்று ஓடோடி விரட்டிடுவான் ஓய்ந்த நேரம் உட்கார்ந்து பேசிடுவான் உழவுக்கு ஏர்பிடித்து உரிமையுடன் சென்றாலும் ஊருக்கு தெரிவதுபோல் உறக்கப் பேசிடுவான் இழவுக்குச் சென்றாலும் இணைந்தே போனாலும் இருப்பிடமே வந்தவுடன் இணைபிரிய மாட்டானாம் கிணற்றிலே நீரைக்காலமாய்ப் பங்கிட்டுக் கீழ்வயலில் பாத்தியிட்டுக் கீரைகளை விதைத்து பணத்திலே சரியாய்ப்பங்கும் தருவானாம் பங்காளி என்றழைத்துப் பாசமுடன் இருப்பானாம் உழைப்பவன் மட்டுமே உடனடி சச்சரவை ஊராரும் மெச்சும்படி உடன் பங்காளியென உரிமையுடன் சண்டையிட்டு உடனே கூடுவான் உலகமே வியக்கும்படி உரிமை கொண்டாடிடுவான் ! ( கவியாழி )

பார்த்ததும் திண்பதை நிறுத்து!

உறவுகள்  எனக்கு உதவி செய்யாது உணர்தவர் கண்டும் உண்மை சொல்லாது பிரிவினால் மனதில் பித்தம் பிடித்தேன் பிரிந்தவர் சொல்லும் காரணம் கேட்டே! வயிற்றில் கண்டதை விழுங்கி யதனால் வந்ததை உண்பதும் வாழ்வைக் கெடுக்க பயிற்சி தேவையா பலனேதும் உண்டா? பார்த்ததும் திண்பதை நிறுத்து! கொஞ்சிப் பேசும் கொழுந்தி யவளைச் கிஞ்சித்தும் இடம் கிடைக்க வழியின்றி வஞ்சித்துப் போகும் வாழ்க்கைத் துணையை வார்த்தை யுண்டோ  வைய? அந்த நாளில் கண்டதைத் தேடி அலைந்த நட்பு அடங்காமல் இன்றும் நொந்தக் கதையை நான் கேட்டே நொடிந்தே கடிந்தேன் இன்றே கண்ணும் இமையும் கலந்து பேசி கண்ணன் வரவைக் கண்ட பின்னே விண்ணைப் பார்த்து வீதியைக் காட்டி விடுகதை போட்டது எதற்கோ? (கவியாழி)

எனது 25 வது திருமண நாள் 10.03.2015

கடந்த வருடங்களில் கண்ட மகிழ்ச்சி களிப்பூட்டிய நாட்கள் கணக்கி லடங்கா கடனாகக் கிடைத்த கனிவான சொந்தங்கள் கண்டதும் இன்பங் கொண்ட நட்புகள் தொடந்த துன்பங்கள் தொலைத்த இன்பங்கள் துரத்தி வந்தாலும் தாங்கினேன் நேசித்தேன் அடர்ந்த மனதிலே அன்றாடம் பூசித்தேன் அம்மா அப்பாவை அளவின்றி யாசித்தேன் வெறுப்பேற்றி சென்ற  வீதிவழி உறவுகள் வீணாய் சண்டையிட்ட வீண்பேச்சுக் காரர்கள் பொறுப்பின்றி உறவாடி போய்விட்ட நண்பர்கள் போதையைத் தூண்டிய பேதைகள் இருந்தும் பணம்காசு சேர்க்காமல் பல்லிளித்துச் செல்லாமல் பதவியிலே தன்மானம் பறந்தெங்கும் போகாமல் குணம்மாறி சிறிதேனும் குற்றங்கள் செய்யாமல் குடும்ப உறவாக குறைவின்றி காத்திட்டேன் உறவுகள் என்னிடம் உதவி கேட்டால் உடனே செய்வேன் உறவையும் காத்தேன் பிரிவுகள் ஏற்பட பிணையின்றி செய்ததே பின்னாளில் தெரிந்தேன் பிரிவையும் தாங்கினேன் நட்புக்கு நான்தந்த நாட்களோ குறைவில்லை நாள்தோறும் மறக்காமல் நன்றியுடன் தானிருந்தேன் உட்பக்க இதயத்தில் ஓரிடத்தில் வைத்தும் உளமார தொடந்தும் ஒதுங்கிச் சென்றார் இக்கால வாழ்கையில் இடையூறு வந்தாலும் இனிமேலே த

"காளியூட்டு " நாவல் அறிமுகம்-சிறு குறிப்புகள்

Image
      கடந்த வாரம் 24.02.2015 அன்று தமிழ் புத்தக நண்பர்களால்  ஆழ்வார்பேட்டையில்  உள்ள "  TAG  " சென்டரில்  இந்நூல் அறிமுக விழா நடைபெற்றது .  எழுத்தாளர் திருவாளர்.மா.அரங்கநாதன் எழுதிய இந்நாவலை காவ்யா வெள்ளிவிழா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் இரண்டாவது நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. "பழந்தமிழ் வீரியமும் புதுமையும் இயைந்த மொழிநடை ,சொற்களைச் செதுக்கி சொற்களுட்புகுத்தும் தனித்துவம்  கொண்ட ஆளுமையில் " படைக்கப் பட்டிருக்கிறது அய்யா நா. கந்தசாமி அவர்கள் அணிந்துரையில் குறிபிட்டது:    நூலாசிரியர் சிறு கதைகளிக் கவிதை மாதிரியே  பண்டைய மரபின் படி யெழுதியுள்ளார்."அறிய அறிய அறியமுடியாத அளவில் மர்மமும் புதிருங்கொண்டு இருப்பது" ,"வாழ்க்கைப் போலவே எளிதாகவும்-புரிவது மாதிரியே புரிபடாமலும் " என்று அவர்தம் குறிப்பில் சொல்லியுள்ளார். திருவாளர் .மாசிலாமணி,கலைஞன் பதிப்பகத்தார் சொன்னது; "மண்ணோடும் மரபோடும் வாழ்க்கையின் யதார்த்தம் மேலோங்குகிறது.இவர் எழுத்து இயல்பு சொற்களுக்கு ஊடாக மனோதத்துவ ஒலி ஊடுருவிக் கொண்டிருக்கும்" முனைவ

ரசித்தவர்கள்