Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

பருவம் பதினெட்டில்.....2

அழகிய முகமில்லை் யென்றாலும் அவளுள் மனதில் குழப்பம் செழுமையே எதிலும் இன்றி சினம்மட்டும் முகத்தில் தெரியும் தோழிகள் இருந்தும் தனியே துவண்டே தனிமை விருப்பம் நூலிழை போன்றதொரு சிரிப்பே நண்பிகள் பார்க்க கிடைக்கும் ஆலிலை கண்ணனாய் நினைப்போர் அருகிலே செல்லவும் தயக்கம் மேனியில் கைப்பட பேசும் மெய்யான உறவுகள் இல்லை வானிலே சிறகடிக்கும் வயதில் வாட்டமென்ன நோக்கமென்ன பூமியில் வாழும் உயிர்களும் புன்சிரிப்பை மறத்தல் தவறே... தொடரும்...... (கவியாழி)

பருவம் பதினெட்டில்.....

பருவம் பதினெட்டில் இருக்கும் பார்த்திட மனதை தேடும் உருவம் மனதில் உணர்த்தும் உதடுகள் கணியாய் சுவைக்கும் தனிமை அவளது விருப்பம் தவிப்புகள் மனத்தில் தஞ்சம் இனிமையாய் இருந்தது பார்வை இதழில் புன்னகை கொஞ்சம் அழகில் தெரிந்தது வசதி ஆனாலும் இல்லை மகிழ்ச்சி உறவில் ஏதோ குழப்பம் உள்ளத்தில் அதனால் வருத்தம் பழகிட தோழிகள் இருந்தும் பாவைக்கு தனிமையே விருப்பம் உளவியல் காரணம் தெரிய உற்றே நோக்கினான் ஒருவன்.... தொடரும்...... -----–-கவியாழி-----

பசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே !

உலகில் தோன்றும் உயிர்கள் யாவும் இறைவன் கொடுத்த வரமாய் எண்ணும் உயர்ந்த எண்ணம் கொண்டோர் பலரும்_ பெண்ணை குறையாய் எண்ணி கொடுமை செய்தே ! கருவில் வளரும் சிசுவை அறிந்தும் கட்டளை விடுவார் கருவில் சிதைப்பார் உருவாய் வளர்ந்து  மகளாய்ப் பிறந்தால்- உடனே உயிரையும் எடுப்பார் உணர்வை  இழந்தே !! கடவுள் உருவாய் கருணை மழையாய் காலையும் மாலையும் பாலைத் தந்திடும் பசுவும் ஈன்றிடும் கடுவன் சிசுவைக்-கொல்வார் பாலை மட்டும் உணவாய்  கொண்டே !!! பசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே பார்த்திடும் கண்கள் வேதனை கொண்டே சிசுவை கொல்லுதல் முறையாய் என்றே- மனதில் சிவனைக் கேட்கிறேன் கேள்வியாய் இன்றே !!!! ------- கவியாழி-------

கடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ?

கடவுளின் பெயரால் கையேந்தி நிற்பவனும் காடு கழனிகளில் சாதி வளர்ப்பவனும் உடமையை இழந்தவனிடம் ஊசி விற்க -இன்னும் ஊரையே கொளுத்தியும் உத்தமனாய் நடிக்கின்றான் சட்டிப் பானையில் சமைத்து வந்தாலும சாதியை வளத்துப்  பெருமைக் கொண்டாடி வெட்டிப் பேச்சால் வீதிக்கு வீதி-பிழைப்பாய் விற்கிறான் வேதனையை வளர்கிறான்  பொட்டிப் பாம்பாய் வளர்ந்த வனெல்லாம் பொறுமை கொண்டு படித்தவன் கூட புட்டி முழுதாய்க் குடித்துவிட்டு-சாதி பெருமைப் பேசிப்மடிந்தே சாகிறான் நீதி நேர்மை நிம்மதி தருமென நியாயம் தர்மம் சந்ததி விளக்கென போதியரசன் போற்றிய கொள்கையை-இன்று புரிந்தும் மறந்தும் வாழ்வது முறையா? --கவியாழி--

நண்பர்களுடன்வா ல்பாறை சுற்றுலா

Image
நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடன் எனது சுற்றுலா அனுபவங்களைப்  பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையிலிருந்து காலை ஆறு பத்துக்குப்  எனது மகிழுந்தில்  புறப்பட்டு பகல் பன்னிரண்டு ஐம்பதுக்கு சேலம் சேர்ந்தேன். அங்கு எனக்காக காத்திருந்த நண்பர்களுடன் மூன்று மகிழுந்தில்  மொத்தம் பதினொருபேர் இன்ப உலாவாக  கோவை வழியாக பொள்ளாச்சி சென்றடைதோம்.இரவு நேரத்தில் மலையேற அனுமதி இல்லாததால் .இரவு பொள்ளாச்சியிலேயே தங்கி விட்டோம். அடுத்தநாள் காலை பதினோரு மணிக்கு மூன்று மகிழுந்துடன் இன்னொன்றும் சேர்ந்து மொத்தம் நாலுவதுமாய் சேர்ந்ததும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.அங்கு தின்பண்டங்கள் உணவு சமைக்க வேண்டிய பொருட்களுடன் மற்றும் சில இத்யாதிகளுடன் எல்லோரும் புறப்பட்டு சென்றோம்.வழியில் குரங்கு வீழ்ச்சி (monkey falls)செல்லாமென நினைத்து ஆழியாறு அணையைக் கடந்து சென்றால் அதிர்ச்சி?காரணம் தண்ணீர் இன்றி பரிதாபமாக குரங்குகளே வரிசையாய் பரிதாபமாய்இருந்தது. நாங்கள் எடுத்துச் சென்ற குடிநீர் பாட்டில்களிருந்து ஒன்றிரண்டை பகிர்ந்தளித்தோம். எமது குழுவிலிருந்த அத்தனை நண்பர்களின் ஒருமித்த உ

வயது இரண்டென் ஒன்பதில்

வயது  இரண்டெண் ஒன்பதில் வாலிபம் தொடங்கிய நிலையில் பயமென தெளிந்த பருவத்தில் பார்வையால் காதல் கொண்டோர் பள்ளியைத் துறந்துமுடித்துப் பல்கலைப் படிப்பில் நுழைந்து பிள்ளையைப் பொறுப்பாய் வளர்த்து பிணையில்லா வேலைக் கிடைக்க மெல்ல வெளியுலகில்உலவ மிதமான அறிவுரைச் சொல்லி செல்லமாய் சிறகடித்துச் செல்ல சினமின்றி வழி சென்றோர் கள்ளமின்றிக் கல்வியைக் கடந்து கைநிறையக் காசுக் கிடைத்தும் உள்ளம் மாறாமல் பெற்றோர் உறவினர் நண்பர்கள் வாழ்த்துரைக்க இல்லறம் தொடங்கும் இனியோரும் இணைந்தும் பிணைந்தும் இருப்பார்கள் சொல்லறம் புரிந்தும் மகிழ்வார்கள் சோதனை இடறின்றி வாழ்வார்கள் கவியாழி.......

39 வது புத்தகக் கண்காட்சியும் எனது "என்றுமே மகிழ்ச்சியாய் வாழலாம்' புத்தகமும்

Image
                 அன்பார்ந்த நண்பர்களே! அனைவருக்கும் எனது மகிழ்வான . நேற்று வணக்கங்கள். நேற்று சென்னை தீவுத்திடலில்  நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியைப் பார்பதற்காக சென்றிருந்தேன். நல்லப் பரந்துவிரிந்த இடத்தில் தீவுத்திடல் தமிழ்நாடு உணவு விடுதிக்கும்  போர் நினைவு சின்னம் அருகில் எல்லோருக்கும் வசதியான இடத்தில் அமைந்துள்ளது.            சனிக்கிழமை என்பதாலோ அல்லது  பள்ளிகள் திறந்த காரணத்தினாலோ சற்று கூடம் குறைவாக இருப்பதாகவே உணர்ந்தேன்.நல்ல அகலமான  விசாலமான அரங்கில் நிறையக் கடைகள் இருந்தன.இன்னும் சில கடைகளைத் திறக்காமலும் வைத்திருந்தனர்.              எனதுப் புத்தகம் வெளியிடும் புத்தகக் கடைக்கு சென்றேன் அங்கு எனது புத்தகம் எல்லோர் கண்ணிலும் படும்படியான இடத்தில் கண்ணைக்கவரும்படி வைத்திருந்தார்கள்.அதுப்பற்றிய  புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன். நண்பர்களே தீவுத்திடலிலுள்ள புத்தகக்கண்காட்சிக்குச் செல்லுங்கள் என்னோட புத்தகத்தோட மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வாங்கி மகிழுங்கள் .நிறைய நண்பர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்கி புத்தகம் படிக்கும் ஆர்வத்த

ரசித்தவர்கள்