Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

விதியின் வேதனையும் விலகிடு.....கட்டுரை

தமிழ்நாடு 24.03.2020 க்குமுன் அதற்குப்பின் இன்றுவரை கடந்தகலங்களில் கண்ணீர் சிந்தாத மனிதனே இல்லை.மதத்தை கடந்து மனிதம் தேடி அலைய வேண்டிய அவலநிலையை கடந்து யாரும் சென்றிருக்க வாய்ப்பே இல்லை.கையில் காசில்லை கடனாக கொடுப்பவர் இல்லை.உழைத்த உழைப்புக்கே உறுதியான வேலையில்லை. ஆலைகள் ,அலுவலகங்கள் ,பள்ளிகள்,கல்லூரிகள் பேருந்துகள் ,கடைகள்,காட்சியாகங்கள்,மண்டபங்கள் மணவிழாக்கள்,கட்சிக்கு கூட்டங்கள்,கடைத்தெருக்கள் என எல்லாமே மூடிக்கிடக்க  உழைக்கத்திறனிருந்தும்  ஓய்வெடுக்க நிர்பந்தித்து வீட்டில் முடக்கி விதி விளையாடியது. அலுவலகம் செல்வோர் முதல்  அன்றாடம் உழைப்பவர் வரை சொல்ல முடியாத சோகங்களை கடக்கவேண்டிய  நிலையில் வேண்டா வெறுப்பாக தள்ளிவிடப்பட்டனர்.மூன்று வேலைச்சோறு ,முழுநாள் ஓய்வு நேரத்தில் தூங்கி வழிந்ததும் சில நேரங்களில் துயரத்தை எண்ணி வருத்தியவர் பலர். அனைத்து மத ஆலயங்களும் மூடின.ஆண்டவனுக்கு ஓய்வு கொடுத்தனர்.அத்தனையும் பார்த்துக்க கொண்டு அவர்களும் அமைதியாயினர். ஏழையும் வறுமையில் எப்போதும் வேண்டிக்கொள்ளும் இறைவனுக்கு ஏற்பட்ட நிலையெண்ணி எல்லோரும் வருந்தினர்.எதுவும் செய்ய முடியாத நிலையில் நொந்தனர் கொரனா

சிரிக்கவும் சிந்திக்கவும் சிறந்த நட்பு

அருகில் வந்ததும் முகம் மலரும் ஆனந்தமாய் முதுகில் தட்டி கொண்டே என்னடா எப்படி இருக்கிறாய் நலமா-என்றே எற இறங்க மனதை அளந்து பார்க்கும்  புரியும் வரையில் கேள்வி கேட்டு புதிதாய் எதையோ தேடிப் பார்க்கும் மனதில் உள்ள வார்த்தை கேட்டு-அறிந்தே மருந்தாய் நட்பு நோட்டம் பார்க்கும் உடையில் தெரியும் சுருக்கம் மெல்லாம் உள்ளம்  வரையில் ஊர்ந்து சென்று தடைகள் என்ன என்பதை மட்டும்- உணர்ந்தே தைரியமான  நல்ல வார்தைகள்  சொல்லும் மனதில் ஓடும் சிந்தனை தனக்கு  மகிழ்வாய் இல்லை என்பதை காட்டும் தனமும் உடலும்  தவிப்பதை கண்டு -கண்கள் கனமே உணர்திக் கைகளைப் பற்றி தினமே பழகும் நட்பாய் இருந்தும் தெளிவாய் உள்ளம் இல்லையே வென்று பணமாய் பொருளாய் கொடுத்திட நினைக்கும்-நட்பே பரிவுடன் சொல்லும் அறிவுரைக்கோடி முகத்தைப்   பார்த்து அகத்திதில் புகுந்து முடிவில் உண்மை நிலையைக் காணும் கிடைக்கும் நட்பே கடைசி வரைக்கும்- உண்மை கடந்தும் நட்பே  என்றும் வெல்லும் கவியாழி....... சென்னை

60ல் தனியே இருக்கும் தைரியமில்லை....

இனியும் தொடரும் ஆக்கமும் ஊக்கமும் இனிதே கடந்த நாட்களின் அர்த்தமும் புதிதாய் தொடங்கும் பொழுதும்  கழிய-பறவையாய் புறப்பட்டு செல்வேன் பதிய தொடக்கமாய் பறக்கும் பறவைக்கு பார்வை முழூவதும் பசியை உணர்ந்தே தேடி தெரியுமாம் பார்க்கும் இடமெல்லாம் பறவையாய்- திரிந்து  பாசம்தேடி மகிவாய் பறந்து  போவேன் வாழ்வில் இதுவரை யாரையும் இழித்ததில்லை வாழ்வில் நட்ப்பை  வறுமையாய் விட்டதில்லை தாழ்ந்தும் பணிந்தும் தவறாய் வாழ்ந்ததில்லை - நட்பை தவிக்கவிட்டு தனியாய்  நடந்தே சென்றதில்லை  வாழ்க்கையும் வாய்மையும் என்றுமே தோற்றதில்லை வாழ்ந்தவர் வாழ்க்கையை மனதில் மறக்கவில்லை ஏழ்மையை மனதால் வென்று வாழ்ந்தும்-எப்போதும் ஏழைக்கு உதவிட இன்றுமே மறந்ததில்லை நாளும் பொழுதும் தேடி பிறக்கவில்லை நல்ல நேரம் பார்த்து  செய்ததில்லை கோளும் சூழும் கொண்ட வழியில்-மனிதனாய் கொள்கை கொண்டே இனியும் வாழ்வேன் இன்பமும் துன்பமும் இணையாய் இருப்பதில்லை இணையை பிரிந்தும் இதுவரை சென்றதில்லை தன்னலம்  கொண்டே தனியுறவு வைத்ததில்லை-60ல் தனியே இருக்கும் தைரியம் எனக்கில்லை ---கவியாழி---    சென்னை   11.07.2020  

தினமும் தூங்கியும் பொழுது போகலை..!

எங்கும்போகலை எதையும் பார்க்கல எந்த சொந்தமும் வீட்டில் சேர்க்கலை தங்கி வேலையும் செய்ய முடியலை-தவிப்பாய் தினமும் தூக்கியும் பொழுது கழியிலே கடைக்குப் போகலைக் காசு செல்வில்லை காணுமிடமில்லாம் கால்தடமும் தெரியலே உடைக்கு அழுக்கில்லை ஊரெங்கும் போகலை-இன்னும் ஊரடங்கு முடியுமென ஒருத்தருக்கு தெரியலை கொடுக்கல் வாங்கல் நட்புகள் அழைகலை கொண்ட உறவும் நீண்ட பிரிவால் கண்டுபேசி சிரிக்க முடியல -நிதியாய்  கண்ணீரைத் துடைக்க எனக்கும் வழியில்லை எங்குமே மழையில்லை இயற்கையே முறையில்லை எவ்விடம் செல்லவும் யாருக்கும் துணிவில்லை சங்கமும் இருந்தாலும் சனத்துக்கு உதவிட- சபையிலே பணமில்லை சட்டமும் சரியில்லை எந்த சாமிக்கும் கண்ணு தெரியலை ஏய்ச்சி பொழைக்கும் போக்கு பிடிக்கலை சொந்த காசையும் கண்ணில் காணலை-கணக்கில் செலவு செஞ்சிட பணமும் கையில்லை கவியாழி.கண்ணதாசன் 27.06.2020

எம்மன வேதனை யாரரிவார் ?

திண்ணையில்  அமர்ந்த நாளிலன்று தீவிரநோய் வந்து படுத்தோரு ண்டோ விண்ணில் வலம் வரும் கிருமியை-மக்கள் வீழ்த்திடும் மருத்துவம் யார் அறிந்தார் மண்ணையே தேடியே மக்களும் செல்ல மானுடம் தவறியே வாழ்விழந்து செல்ல பொன்னையும் விற்று படிப்பையும் மறந்து- நடந்தே தன்னையே காக்க தனியே செல்கிறார் இன்பமும் எங்கேத் தேடி சென்றதோ இளமையை முதுமை இணைந்து கொண்டதோ துன்பமும் துயருமே துணைக்கு வந்ததா-கொரானா தேடித்தேடி மக்களைக் கொல்வதா என் மன வேதனை யாரறிவார் என்னையும் அணைத்திட யார் வருவார் சொன்னதை நம்பிட யார் துணிவார்-உலகில் சொர்கமும் தேடியே யார் செல்வார் கவியாழி.கண்ணதாசன் 26.06.2020

இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பா

இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பா இனிமேலும் இருந்திடலாம் அன்பாய் புத்த கங்கள் சுமந்த காலத்தை- நாமும் புதிதாய் நினைத்து மகிழ்ந்திடலாம் வா ! கற்பனையாய் படித்த அந்த நாட்களில் கல்விகற்க மட்டும் பழகி வந்தோம் விற்பனைக்கே அறிவை வருத்த வில்லை விடிந்ததுமே மனப்பாடம் செய்து வந்தோம் கற்பனையாய் மட்டுமே அதிகம் எழுதியதால் கைநிறைய அடியும் வாங்கி கொண்டோம் கற்றதனால் பலபேர்கள் மகிழ்ச்சியாய்-ஆசிரியர்கள் கைகுலுக்கி பாராட்டும்  பரிசும் பெற்றார்கள் இடைவெளி நேரம் விட்டதுமே இணைந்து பேசி மகிழ்ந்து வந்தோம் மடையாய் வெள்ளம் செல்வது போல் மாலையில் பறந்தே சென்று விட்டோம் நெடுநாள் தொடர்பு மறந்திருக்க நேசமும் பாசமும் சேர்த்திழுக்க பலநாள் நினைவுகள் பகிர்வதற்கு-நம்மில் பலபேர் சேர்ந்தே பகிர்ந்தே மகிழ்ந்திடலாம்  கவியாழி.கண்ணதாசன் 10.04.2020.சென்னை

இளமைக் கால நண்பர்கள்

Image
நண்பர்களுடன் மீண்டும் சந்திப்பு முதலில் உள்ளவர்.சா.திருமாவளவன் அடுத்தவர் சரவணன் என்ற அமுலு நாங்கள் மூவரும் சேலத்தில் புனிதபால் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாகப் சேர்ந்த  நாள் முதல் சேர்ந்து பழகிவந்தோம்.மூவருக்கும் அரசுப்பணி கிடைத்ததும் மற்றும் திருமணம் முடிந்ததும் பதினைந்து வருட நட்பைத் துறந்து தனித்தனியே பிரிந்தோம். நான் உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள சேலம் சென்றிருந்தபோது அவர்கள் இருவரையும் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது.அதை அவர்களிடத்தில் திருமாவளவன் தற்போது வங்கி கிளை மேலாளராய் திட்டக்குடிக்கு அருகில் பணிபுரிந்து வருகிறார்.திரு.சரவணன் அவர்கள் சேலம் கோட்டத்தில் ரிவே துறையில் பணிபுரிந்து வருகிறார்

ரசித்தவர்கள்