தெய்வங்கள்

தெய்வங்கள்

உலகம் முழுவதும் உயிரோடு உறவாடு......

உலகம் முழுவதும் அங்கங்கே
உரிமைப் பிரச்சனை வருகிறதே
உயிர்கள் பலவும் மடிகிறதே
உயர்வும் அதனால்  தடுக்கிறதே

கலகம் கலவரம் திருட்டுகளும்
கயவர் கூட்டக் கொள்ளைகளும்
கடிந்தே தினமும் நடக்கிறதே
கவலை மனதில் தருகிறதே

விலையும் தினமும் ஏறுவதால்
விஞ்சிக் கவலைத் தருகிறதே
பொன்னும் பொருளும் இல்லாமல்
புலம்பும் நிலையே வருகிறதே

திண்ணைப் பேச்சு இப்பொழுதே
தினமும் வீணாய் போகிறதே
பண்ணை எங்கும் காணாமல்
பரந்த வெளியாய் இருக்கிறதே

கவலை இல்லா வாழ்க்கைதனை
கடக்கும் நிலையும் திரும்புமோ
நிலைமை எப்போ மாறுமோ
நிம்மதி மீண்டும் திரும்புமோ

சண்டை என்றும் இல்லாமல்
சமத்துவம் எங்கும் விரும்பினால்
அனைத்துமே நிலைமை மாறிடும்
அகிலமே அன்பால் செழித்திடும்








Comments

  1. சண்டைச் என்றும் இல்லாமல்
    சமத்துவம் எங்கும் விரும்பினால்
    அனைத்துமே நிலைமை மாறிடும்
    அகிலமே அன்பால் செழித்திடும்

    அன்பால் செழிக்கும்
    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் பதிலுக்கும் நன்றிங்கம்மா

      Delete
  2. அமைதி எங்கும் நிலைத்திருந்தால்,
    சமத்துவம் அங்கு குடியேறும்.
    சமத்துவம் உயர்ந்தால்,
    சமாதானம் உருவாகும்.
    சமாதானம் நிலவினால்,
    உலகே அன்பு மயமாய் விளங்கும்.


    அழகான கவிதை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா .எல்லோர் விருப்பமும் இதுதானே

      Delete
  3. ..
    சண்டைச் என்றும் இல்லாமல்
    சமத்துவம் எங்கும் விரும்பினால்
    அனைத்துமே நிலைமை மாறிடும்
    அகிலமே அன்பால் செழித்திடும் ...

    இப்படி ஒரு நிலமை வந்தால் மிக்க மகிழ்ச்சியே..

    ReplyDelete
    Replies
    1. வந்துதான் ஆகணும் .இன்னும் எவ்வளவு நாள் சண்டையிட்டே வருவது? வருகைக்கு நன்றிங்க நண்பரே

      Delete
  4. ''..சண்டை என்றும் இல்லாமல்

    சமத்துவம் எங்கும் விரும்பினால்...''
    இப்டியானால் உலகு சொர்க்கமாகுமே!.....
    எல்லோரின் கனவுமிதே!.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்கம்மா.மீண்டும் மீண்டும் வாங்க மகிழ்ச்சி எனக்க தாங்க

      Delete
  5. அன்பால் அகிலம் செழித்திடும் காலம் விரைவில் வரட்டும் !
    உங்களுக்கு இருக்கும் கவலையில் கீழேயுள்ள வரியில் கானாவிடுபட்டுவிட்டது போலும் !கானா வரட்டும் ,உங்கள் கவலைகள் மறையட்டும் !

    #விலையும் தினமும் ஏறுவதால்
    விஞ்சிக்* வலைத் தருகிறதே#

    ReplyDelete
  6. கவலை இல்லா வாழ்க்கைதனை
    கடக்கும் நிலையும் திரும்புமோ
    நிலைமை எப்போ மாறுமோ
    நிம்மதி மீண்டும் திரும்புமோ// நல்ல கேள்வி! சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க சுரேஷ்

      Delete
  7. s, அகிலமே அன்பால் செழித்திடும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க கருண்

      Delete
  8. சண்டை என்றும் இல்லாமல்
    சமத்துவம் எங்கும் விரும்பினால்
    அனைத்துமே நிலைமை மாறிடும்
    அகிலமே அன்பால் செழித்திடும்/

    நிச்சயமாக
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்


    /

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சார்

      Delete
  9. நன்றிங்க சார்

    ReplyDelete
  10. அருமை.

    //உயர்வும் அதனால் தடுக்கிறதே//

    கெடுகிறதே என்று வரலாமோ!

    ReplyDelete
    Replies
    1. அப்படியே படியுங்க.வருகைக்கு நன்றி

      Delete
  11. சண்டை என்றும் இல்லாமல்
    சமத்துவம் எங்கும் விரும்பினால்
    அனைத்துமே நிலைமை மாறிடும்
    அகிலமே அன்பால் செழித்திடும்//

    அகிலம் அன்பால் செழிக்கட்டும்.
    அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்கம்மா

      Delete
  12. கருத்துள்ள கவிதைக்கு வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க நண்பரே.திருமணம் முடிந்ததா?

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more