Posts

Showing posts from April, 2021

தெய்வங்கள்

தெய்வங்கள்

பருவம் பதினெட்டுடில்.......9

பருவம் பதினெட்டில் ........9 ----------------------------------------- பூவிதழ் பற்றிட துடிக்கும் புன்னகை மறந்திட்டு பருகும் மேனியில் கைத்தடம் பதித்தால் மேகலை கிங்கிணி யாகும் தேயிலைத் தோட்டத்தின் அருகில் தேனடை பார்த்திட்ட நொடியில் மாவிலைத் தோரணம் மறந்தே மனமிடத் தோன்றிடும் அழகே பாமகள் வரிகள் அழகாய் படித்திட நிதமும் பிடிக்கும் பூமகள் அழகை நினைத்தே பூத்திடும் கைகளும் சிலிர்த்தே யாரிவள் தேரோ சிலையோ யாசகம் துறந்த தமிழோ போரிடும் நிலையில் வீரம் பொசுங்கி உரமாய் போகும்.......10 கவியாழி.கண்ணதாசன் 

குழுவாய் உழைப்போம் நிலத்தில்....

 குழுவாய் உழைப்போம் நிலத்தில் ..... ------------------------------------------------------- கேள்விகள் ஆயிரம் கேட்கலாம் கேட்டதை மாற்றிக் கூறலாம் வேள்விகள் நிறைய செய்யலாம்-மன வேதனை தீர்க்க முடியுமா போலிகள் வாழ்க்கையை மாற்றலாம் போதையில் வாழ்க்கையை மறக்கலாம் வேலியே பயிரை மேய்வதால்- கொடும் வேதனை எங்கே சொல்வது காலையில் எழுந்ததும் பூசைகள் கடவுளைப் பார்கவும் ஆசைகள் வேலைக்கு மாத்திரை போடாமல்-வயிற்றுக்கு விருப்பமாய் உணவு செல்லுமா ஆதிக்கத் திமிரில் வாழ்பவன் ஆசையாய் உறங்க முடியுமா போதிக்க மறுத்த தலைவனை -இன்று புறம்பான பேச முடியுமா நீதிக்கதைகள் யாவையும் இன்றும் நிலையாய் நிற்கக் காரணம் ஆதித் தமிழனின்  பெருமையே-உணர்ந்து ஆணவம் மறந்து வாழுவோம் தேடிப் பிழைப்பதை மறந்து தோழமை உறவும் மகிழ்ந்து கூடி வாழ்வோம் ஊரில்-விரும்பி குழுவாய் உழைப்போம் நிலத்தில்... கவியாழி.கண்ணதாசன்

ரசித்தவர்கள்