Posts

Showing posts from August, 2020

தெய்வங்கள்

தெய்வங்கள்

அச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க !

Image
பச்சை இலைகளோடோரு பழுத்த யிலை பாதிகாய்ந்ததோர் பளுக்கா யிலை மிச்ச இலைகளெல்லாம் மேலே னோக்க மீதியிரண்டு மேன் கீழே நோக்கி ? உச்சமடைந்து உயிரைபோக்க கீழே உதிரக் காக்கும் நோக்கம் ஏனோ அச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க-பிறகு அதுவும் கருகி உரமாய்ப்போகும் மிச்சம் மீதி வாழும் நாட்கள தற்கு மீண்டும் கதிரவன் துணையே வேண்டாம் துச்சமில்லையென துடித்து விழாமல்-மரத்தில் தொங்கிக் கொண்டே விழுந்தே காயும் இயற்கை வழியில் இச்சைத் தீர்த்து இலைகள் போல மனிதன் வாழ்வும் சொற்ப நாட்கள் உலகில் உலவி-இறப்பு சோகமின்றி நல் நினைவாய் முடியும் .........கவியாழி.கண்ணதாசன்......           சென்னை.27.08.2020

தினமொறு நாடகம் உலகில் தோன்றும்.....

அறிவைத் திருடும் கூட்டம் எங்கும் அகிலம் முழுக்க போடும் ஆட்டம் பிரிவைத் தூண்டி உழைப்பைத் திருடி பேயயைப் போல பிழைப்பாய் வாழும் உறவாய் பழகி உணர்வைத் தூண்டி உரிமைக் காட்டி ஊர்ந்து செல்லும் உடையோர் இருக்க ஒளிந்தே வாழும் உலக மெங்கும் பயந்தே ஓடும் பிழையாய் தடத்தை பதியம் போட்டே பேதைமை மறந்தே நட்பாய் பேசும் விளையும் பயிரில் நஞ்சை வளர்த்து வேதனையோடும்  வீரத்தை காட்டும் தீயதை விதைத்து தீமையைப் பெருக்கித் தேடுவோர் கைகளில் விலங்கை மாட்டும் தீர்வினை காண மக்களைக் கொன்று தினமொறு நாடகம் உலகில் தோன்றும் வளமைச் சொல்லி வளங்களைத் திருடி வையகம் முழுதும் பசியைப் போக்கும் பிழையை அறிந்தும் புத்தரைப்போல பேசும் வார்த்தை ஆயிரம் சொல்லும் செழுமை இல்லா முகத்தைக் காட்டி செயலில் மட்டும் வீரத்தைக் காட்டும் சேர்ந்தே பலரும் திருப்பி அடித்தால் சோதனை என்றே விரைந்து ஓடும் .........கவியாழி கண்ணதாசன்......           சென்னை.......22.08.2020

விதியின் வேதனையும் விலகிடு.....கட்டுரை

தமிழ்நாடு 24.03.2020 க்குமுன் அதற்குப்பின் இன்றுவரை கடந்தகலங்களில் கண்ணீர் சிந்தாத மனிதனே இல்லை.மதத்தை கடந்து மனிதம் தேடி அலைய வேண்டிய அவலநிலையை கடந்து யாரும் சென்றிருக்க வாய்ப்பே இல்லை.கையில் காசில்லை கடனாக கொடுப்பவர் இல்லை.உழைத்த உழைப்புக்கே உறுதியான வேலையில்லை. ஆலைகள் ,அலுவலகங்கள் ,பள்ளிகள்,கல்லூரிகள் பேருந்துகள் ,கடைகள்,காட்சியாகங்கள்,மண்டபங்கள் மணவிழாக்கள்,கட்சிக்கு கூட்டங்கள்,கடைத்தெருக்கள் என எல்லாமே மூடிக்கிடக்க  உழைக்கத்திறனிருந்தும்  ஓய்வெடுக்க நிர்பந்தித்து வீட்டில் முடக்கி விதி விளையாடியது. அலுவலகம் செல்வோர் முதல்  அன்றாடம் உழைப்பவர் வரை சொல்ல முடியாத சோகங்களை கடக்கவேண்டிய  நிலையில் வேண்டா வெறுப்பாக தள்ளிவிடப்பட்டனர்.மூன்று வேலைச்சோறு ,முழுநாள் ஓய்வு நேரத்தில் தூங்கி வழிந்ததும் சில நேரங்களில் துயரத்தை எண்ணி வருத்தியவர் பலர். அனைத்து மத ஆலயங்களும் மூடின.ஆண்டவனுக்கு ஓய்வு கொடுத்தனர்.அத்தனையும் பார்த்துக்க கொண்டு அவர்களும் அமைதியாயினர். ஏழையும் வறுமையில் எப்போதும் வேண்டிக்கொள்ளும் இறைவனுக்கு ஏற்பட்ட நிலையெண்ணி எல்லோரும் வருந்தினர்.எதுவும் செய்ய முடியாத நிலையில் நொந்தனர் கொரனா

ரசித்தவர்கள்