தெய்வங்கள்

தெய்வங்கள்

இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பா

இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பா
இனிமேலும் இருந்திடலாம் அன்பாய்
புத்த கங்கள் சுமந்த காலத்தை- நாமும்
புதிதாய் நினைத்து மகிழ்ந்திடலாம் வா !

கற்பனையாய் படித்த அந்த நாட்களில்
கல்விகற்க மட்டும் பழகி வந்தோம்
விற்பனைக்கே அறிவை வருத்த வில்லை
விடிந்ததுமே மனப்பாடம் செய்து வந்தோம்

கற்பனையாய் மட்டுமே அதிகம் எழுதியதால்
கைநிறைய அடியும் வாங்கி கொண்டோம்
கற்றதனால் பலபேர்கள் மகிழ்ச்சியாய்-ஆசிரியர்கள்
கைகுலுக்கி பாராட்டும்  பரிசும் பெற்றார்கள்

இடைவெளி நேரம் விட்டதுமே
இணைந்து பேசி மகிழ்ந்து வந்தோம்
மடையாய் வெள்ளம் செல்வது போல்
மாலையில் பறந்தே சென்று விட்டோம்

நெடுநாள் தொடர்பு மறந்திருக்க
நேசமும் பாசமும் சேர்த்திழுக்க
பலநாள் நினைவுகள் பகிர்வதற்கு-நம்மில்
பலபேர் சேர்ந்தே பகிர்ந்தே மகிழ்ந்திடலாம்

 கவியாழி.கண்ணதாசன்
10.04.2020.சென்னை

Comments

  1. அருமை....பசுமை நிறைந்த நினைவுகளை நினைவூட்டிப் போகும் கவிதை அருமை..

    ReplyDelete
  2. மகிழ்வு நண்பரே தொடர்க

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்