ஊரே கும்பிடும் உத்தமி .........
  தனியாக யாரும் சென்றால்  துணிவாக எதிர்த்து நிற்கும்  தர்பாரும் விலகிச் செல்ல  தரையிலே ஊர்ந்து செல்லும்   துணிவுள்ள மிருகம் அல்ல  துண்டு கயிறு போலவுள்ள  பணிவான உயிர் அதுவாம்  பயந்து சென்று ஓடுவதாம்   ஊரையே காலி செய்யும்  உருண்டு நீண்ட மேனியாய்  ஒருவருமே பார்க்காத தனியிடமாய்  ஒளிந்தே பயந்தே வாழ்ந்திடுமாம்   போருக்குப் போவோரை எதிர்த்திடுமாம்  பொல்லாத திரவியத்தால் கடித்திடுமாம்  பேருக்குச் சத்தமாய் இருந்தாலும்  பயமாக ஒதுங்கிச் சென்றிடுமாம்   வீறிட்டுக் கத்தி பயந்தால்  விரைவாகத் தானும் பயந்தே  வேர்விட்டு விஷத்தைக் கக்கிடும்  விரைவாக உயிரைப் போக்கிடும்   ஊருக்கு வெளியில் வாழ்ந்திடும்  உண்மையில் பயந்து ஓடிடும்  நீர்வயல் ஓரங்களில் வாழ்ந்திடும்  நல்லவளாய் ஊரே கும்பிடும்