Posts

Showing posts with the label அனுபவம்/சமூகம்/கட்டுரை

தெய்வங்கள்

தெய்வங்கள்

முதுமையில் இளமை ......

பாகம் இரண்டு ...  ...................................ஆம்  நான் வழக்குரைஞராக  பணியாற்ற  விரும்பும் நோக்கில்  சென்னை உயர்நீதி மன்றம் சென்றேன் .அளவற்ற ஆசைகளுடன்  நேரம் போவது தெரியாது நிறைய பேரைச் சந்திக்கலாம் ,உரையாடலாம், என்று பெரும் கனவுகளுடன்  சென்றேன்.ஆனால் முதலில் ஏமாற்றம் போலவே தெரிந்தது. நான் மாலை நேர வகுப்பில் {சேர்ந்து படித்ததினால் என்னுடன் படித்த யாரேனும் வருவார்களா என்று தேடினேன் தேடினேன் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன் நான் வசிக்குமிடத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து மைல் தொலைவில் இருப்பதால் நேரடியாக செல்வதில் சிரமம் இருந்தது.முன்பெல்லாம் பணி ஓய்வுப்பெறுவதுக்குமுன் எங்கு சென்றாலும் மகிழுந்துதான் செல்வதற்கு வசதியாக இருந்தது. இன்று நிலைமையே வேறு. இருச்சகக்கர  வாகனத்தில் சென்று அங்கிருந்து நகர்புற  தொடர்வண்டியில் செல்லும் நிலைக்கு ஆளானேன். அங்கிருந்து சிறிது நேரம் நடந்து செல்லவேண்டும் ஏனோ தெரியவில்லை என்னக்குள் இருந்த ஆணவம் எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்ற அசட்டு தைரியம் எல்லாமே சுக்கு நூறாகிவிட்டது. காரணம் என்னைபோலவே  நிறைய பேர் ஏறக்குறைய ஒரு லட்சம் செலவு செய்து  பதிவு செய்து வ

முதுமையில் இளமை

 முதுமையில் இளமை ஆம்! உணரமுடிகிறது. நான் ஓய்வுபெற்று ஓராண்டு முடியவிருக்கிறது இப்போதே மனம் வலிக்கிறது .எனக்கு மட்டுமா அல்லது எல்லா ஓய்வு பெற்ற பெரும்பாலான மக்களுமே இப்படியா என்று எனக்குள் ஒரு கேள்வி   கருவாகி விட்டது. இனம்புரியாத இழப்பு என்றுதான் சொல்லுவேன். நான் பணியில் இருந்தபோது எல்லாமே சரியான நேரத்தில் நடந்தது.காலையில் நடைபயிற்சி  பின் செய்திகள் கேட்பது அடுத்து நாளிதழ் வாசிப்பு என்று ஒவ்வொன்றும் சரியாகத்தான் நடந்தது.நான் எப்போதும அலுவலக பணியாளர் வரும் முன்பே சென்றுவிடுவேன்.பெரும்பாலான  பணியாளர்கள் உங்களுக்கென்ன அய்யா மகிழுந்தில் வந்துவிடுவீர்கள் என்று என்னையே குத்திக்காட்டுவார்கள் {தாமதிற்கான காரணத்தை சொல்ல மாட்டார்கள் ) இன்றும் முயற்சிக்கிறேன் முடியவில்லை .காரணம் வெறுமை ? நாம் நல்ல துடிப்புந்தானே பணியாற்றினோம் இப்போது ஏன் நம்மால் முடியவில்லை என்று என்னும் கேள்வி கேட்டே நேரம் கடந்து செல்கிறது .ஆனாலும் உள்மனது  அடிக்கடி சொல்லும் வார்த்தை உன்னால் முடியும் வெளியே சென்று வா எதையாவது தேடு தேடிக்கொண்டே இரு.வெளியே செல்ல முடியாததன்  காரணத்தைத் தவிர  என்னோடு பணிபுரிந்த நண்பர்களிடம் சொல்லுவே

ரசித்தவர்கள்