தெய்வத்தின் கருணைக் கிடைத்திட.....
ஏழரைச் சனியின் தாக்கத்தால் ஏற்றம் குறைந்ததாய் சொல்வோரே காலையில் எழுந்ததும் கடவுளுக்கும் கற்பூரம் காட்டி வணங்குவோரே இறைவன் செயலைக் குறைப்பதற்கே எல்லா கோவிலும் செல்வோரே ஏழை எளியவர் தவிப்பதற்கு இறைவன் காட்டும் வழியென்ன வாழ்க்கைச் சக்கரம் இதுவன்றோ மேலும் கீழும் வருமன்றோ வாழும் முறையுயே என்றிருந்து வந்தத் துயரையும் வென்றிடலாம் உள்ளக் குறையை சரிசெய்தால் உயரும் வழியைக் கண்டிடலாம் நல்லச் செயலை நாள்தோறும் நம்பிச் செய்தால் உயர்ந்திடலாம் தெய்வம் தங்கும் கோவிலாக தினமும் மனதை வைத்திருந்து தெரிந்தோர் உயர வழிசெய்தால் தெய்வத்தின் கருணைக் கிடைத்திடுமே