அம்மா.....வருவாயா? (மீண்டும் )அன்பை .....தருவாயா?
http://tamilmanam.net/ உயிர் பிடித்து உடல் கொடுத்து உள்ளத்தில் நல் அன்பை விதைத்து நல்பிள்ளையாய் நாளும் வளர்த்து-என்னை செல்லமாய் நன்கு சீராட்டி வளர்த்தவளே அப்பனை அடையாளம் காட்டி எனக்கு அன்பையும் பண்பையும் ஊட்டி வளர்த்து அண்ணன் தம்பி உறவுகளும் சொல்லி-உரிமைக்கு அக்கா தங்கை கடமைகளும் போதித்தாய் கதைசொல்லி தூங்க வைப்பாய் கருத்துக்களை பேசவைப்பாய் நாளும் காண்பவர் எல்லோரின் உறவு சொல்வாய்-விழித்ததும் கண்டவரின் கண்படுமென பொட்டு வைப்பாய் தான் உணவு உண்ண மறந்தாலும் நான் தூங்க தாலாட்டு சொன்னவளே ஏனென்ற கேள்வி இன்றி எதிலும்-தப்பின்றி எந்நாளும் என்னுள் அன்பை சேர்த்தவளே கள்ளமில்லா அன்பை கனிவுடன் தந்தவளே கருவாக என்னை உருவாக்கி சுமந்தவளே பெரிதாக அன்பும் குடும்ப நெறியும்-குறைவின்றி உருவாக்கி வளர்த்தவளே உலகை உணர்தியவளே சொல்லோர்கள் தப்பாய் என்னை சொன்னாலும் எல்லோரையும் பதில் எச்சரித்து அனுப்பிடுவாய் செல்லமாக செய்யாதே என கண்கலங்குவாய்-யாரின்று மெல்ல புரியவைத்து மேனியை தட்டுவார்கள் என்னால் எழுத முடியவில்லை உருவாய் எதிரில் நீயே நிற்பதுபோல்எண்ணுகிறேன் சொன்னால் வ