Posts

Showing posts with the label வேதனை

தெய்வங்கள்

தெய்வங்கள்

மனிதம் போற்றி வாழ்ந்திடவீர்....

மலிவான மனசாட்சி

 நடுஇரவில் நண்பர்களோடு சினிமா பார்த்து விட்டு நண்பர்களுன் பயணித்த 23 வயது மாணவியை கதறக்கதற கற்பழித்த குற்றவாளிகளை டெல்லி போலீஸ் கைது செய்தது .-செய்தி (குற்றவாளி : மாணவியா? அவரின் பெற்றோரா? நண்பர்களா? குற்றவாளிகளா? அரசாங்கமா?சமூகமா?)                                      """""""""""""""""""" மலிவாக மனசாட்சி மறைந்து கிடக்க மக்களும் எதையெதையோ தேடி சேர்க்க புத்தகம் போதனை சொல்லி இருந்தும்-புத்தியின்றி புலப்படுதே பெண்ணினம் இன்னும் வதைபடுதே பணம் வேண்டி  பலதவறும் பாவிகளை பண்கெட்டு  கேடுகளை செய்ய தூண்டி குணம் கெட்டு குலநாசம் செய்யுதே - மனதில் குடிகொள்ளுதே குற்றமாய் பிழை செய்யுதே சிறுபிள்ளை வாழ்வுதனை சூறையாடி செய்கின்ற தவறுகள் தொடர்கின்றதே சிற்றூரும் பேரூரும் சரிசமமாய் -நெறிகெட்டு சிற்றின்ப வாழ்க்கைக்கு துணை போகுதே படிப்பிருந்தும் பாவி மக்கள் பயணிப்பதே பகல் பொழுதை தாண்டியும் தொடர்கின்றதே தடைசெய்த  பழக்கங்கள் தவறாக தொடர்ந்து -தன்மானம் விடைபெற்று நெறிகெட்டு செயல்படுதே

ரசித்தவர்கள்