Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

காதலி ! காதலா ! காதல்!

Image
ஒருதலைக் காதல் ஜெயித்ததில்லை உணர்வுள்ள காதல் தோற்றதில்லை மறு பிறப்பு மீண்டும் வருவதில்லை-காதல் மறந்து போனதாய் சரித்திரமில்லை மனம் பார்த்து வருவதே காதல் மிகையான பணம் பார்த்த தல்ல குணம் மாற்றியும் வரலாம்-காதல் கொள்கை உறுதி யோடும் வரலாம் அவசர காதல் அழிந்ததுண்டு அவசிய காதல் முறிந்ததுண்டு ரகசிய காதல் ஜெயித்ததில்லை-காதல் ரசனை மட்டுமே தகுதியில்லை மனதை மாற்ற போராடு மகிழ்ச்சியோடு அதை நீ நாடு புதிதாய் செய்வோர் புனிதத்தை -அன்பாய் புகழ்ந்து வாழ்த்தி  நீ சொல்லு பிரியும் காதல் தொடர்ந்ததில்லை பிரிக்கின்ற காதல் அழிவதில்லை புரிகின்றோர் காதல் முடிவதில்லை-வெற்றி புரிந்தோர் அதையும் தடுப்பதில்லை

இன்றும் உன்னைத் தேடுது

ஏங்கி ஏங்கியே என் இளமையை கழித்தேன் இன்னும் வேண்டியே-அதனால் இன்றும் நான் தவித்தேன் கனவினால் தினமும் தூங்க மறுத்தேன் காதலால் உன்னை -அங்கும் தேடியே  அலைந்தேன் சின்ன குழந்தைகள் சிறைபிடிக்குது செல்லமாய் கொஞ்ச-மீண்டும் உள்ளம் ஏங்குது ஆசை ஏனோ அடங்க மறுக்குது அணைக்க வேண்டியே-இன்றும் உன்னை தேடுது நீ வருவாயோ நிழல் தருவாயோ பூவுடன் வந்து-என்னை போர் தொடுப்பாயா

"மனிதமே" இறந்ததோ?

Image
மனிதமே இறந்ததோ மனசாட்சி அழிந்ததோ எங்கெங்கு காணினும் எண்ணற்ற கொலைகள் எல்லோரும் தூற்றும் கற்பழிப்புப் பிழைகள் வசதி வேண்டியே வழிப்பறிக் கொள்ளை வார்த்தை மாறியே வாழ்க்கைப் பயணம் பிழை செய்வதே பெருமையாய் போற்றுதல் ஊழலில் சேர்த்ததை ஒளிவின்றி செலவழித்தல் கள்ளச் சந்தையில் காசு பணம் சேர்த்தல் கலப்படத்தை நேர்த்தியாய் கைதொழிலாய் செய்தல் இயற்கையே மரித்ததால் இயலாமை தொடருதோ எங்கே போனது மனித நேயம் எப்படி வாழும் நீதியும் நியாயமும் சற்றே யோசிப்பீர் சந்ததிக்கு வாழ்வளிப்பீர்

இன்னும் நீ அழகி !

Image
இந்த வயதிலும் இன்னும் நீ  அழகி ! இளமை மாறாத-இன்றும் இன்பந்தரும் அருவி. பெற்றவன் மகிழும் சித்திரப் பெண்ணே ! இரவில் மிளிரும் -எதிரில் தெரியும் நிலவும் நீ ! என்னை தழுவும் இதமான தென்றலும் நீயே ! மாசியின் மகளே மாற்றம் தரும் பகலேஒளியே ! பார்ப்பவர் வியக்கும் பருவம் தாண்டிய அகலே! கனவில் கண்டு கண் விழித்ததும் மறைந்து சென்றதேன் ? மீண்டும் வருக ! மீதமும் தருக !!

அவளுக்கு அப்படியொரு ஆசை

......... அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது .             அதிகாலை வேளையில் கடற்கரை அருகில் அமைதியான சூழலில் காலாற நடக்க வேண்டுமென்று...           அப்போது அவன் கேட்டான் ,ஆமா  என்னஇங்கு எதுக்கு அடிக்கடி வரீங்க?            அதையேன் இப்போ கேட்கிறீங்க? அவள் சொன்னாள் .           உடனே சுதாரித்தவளாய் அங்கே பாருங்க மீன்களெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாய் துள்ளி விளையாடுகிறது          அந்த அதிகாலையிலும் நிலவும் சந்தோசமாய் வெளிச்சத்தை கடலில் வீச இனிமையான கடல் காற்றும்  மட்டுமே அவளுக்கு சந்தோசமாய் இருந்தது.அவளுக்கு அப்படியொரு ஆசை           நான்  கேட்டேனே பதில் சொல்லவில்லையே?          உங்க பேரு என்ன எந்த ஊரு? சற்றே நிதானமாய் அவனை உற்று நோக்கினாள் ஏன்?     இல்ல தெரிஞ்சுக்கலாமே என்றுதான்,தினமும் அந்த முதியோர் இல்லம் வரீங்க அங்குள்ளவங்களிடம் ஆதரவா பேசுறீங்க அதனால் அதனால் ? நான் என் ஆத்ம திருப்திக்கு மட்டுமல்ல அங்கு எனக்கு வேண்டியவங்க இருக்காங்க அதுக்குதான் நான் வருகிறேன்       ஆனால் அவள் உண்மையை மறைக்கிறாள் என்பது அவனுக்கு தெரியும்.          எனக்கு உறவென்று சொல்லிக்கொள்ள ஒருவ

அவனுக்கும் நன்றி சொல்வேன்......

Image
அவனுக்கும் நன்றி சொல்வேன் ஆகையால் அவனென் அடிமை காலமெல்லாம் சுறுசுறுப்பாய் காணுகின்ற புது மலராய் காத்திருந்து தீண்டும்போது..... எத்தனை பக்கங்கள் எழுதிப் பார்த்து உறங்கினாலும் அத்தனையும் ரசிக்கிறேன் அன்புடனும் மகிழ்கிறேன் அதனால் சொல்கிறேன் அவனுக்கு .. சிலந்திபோல வலை சிங்காரமாய் பொட்டு எதிரியென எண்ணாமல் எல்லா உணவும் சாப்பிட்டு என் வயிறும் நிறைகிறது....... மனதின் ஒருபக்கம் மௌனமான  வலியும் மருத்துப் போனதால் பணம் மட்டுமே தேவை அதையும் கேட்கிறேன் அவனுக்காய்......?>

எங்கே நிம்மதி !

ஏழெட்டு வீடிறுக்கு ஏசி  காரும் நிறைந்திருக்கு கூவிட்ட குரலுக்கு கூட்டமாக நிறைய  வேலையாளிருக்கு வங்கியிலே பணமிருக்கு வாங்கி வைத்த நிலமிருக்கு பொருளிருக்கு நடைபோக தெம்பிருக்கு நலம்கேட்க நட்பிங்கே மட்டுமிருக்கு இத்தனை  இருந்தும் இறைவனை நினைத்தும் தப்பிருக்கே ஆம் பெற்றவரை விட்டுவிட்டு பொறுப்பை மறந்தேனே தவறு செய்தேனே நிறைந்த சொந்தமெங்கே நண்பர்களேங்கே தமிழே நீயும் எங்கே இத்தனையும் மறந்து இங்கே தனியாய் வாழ்வதா இனிய சொந்தம் மறப்பதா உண்பதும் உணவா உறவிழந்து மகிழ்வா எங்கே நிம்மதி பணம் பொருள் போதுமெனக்கு நேசமும் நிம்மதியும் வேண்டும் சொந்த நாடே சுகமென்று வந்தவழி செல்கிறேன் வாழுமிடம் செல்கின்றேன்

ரசித்தவர்கள்