முதலில் அப்பனையே நாளும் தொழுவேன்
அப்பனுக் கிணையாக உலகில் ஆயிரம்த் தெய்வமும் உண்டோ ஆண்டவன் என்று சொன்னால்-முதலில் அப்பனையே நாளும் தொழுவேன் கற்பனைக் கெட்டாத கனவுகளுடன் கைபிடித்து நடக்கச் செய்து கண்விழித்துக் கதைசொல்லி-தினமும் கருத்துக்கள் ஆயிரம் சொல்வார் வார்த்தையில் மட்டும் சொல்லாமல் வாழ்க்கையைக் கற்றுத் தந்ததார் போர்கலம் தான் வாழ்க்கையென-தினம் புலர்ந்ததும் சொல்லி வைத்தார் ஏற்பதும் படிப்பதும் வாழ்க்கையென எப்போதும் சொல்லியே வளர்த்தார் எந்நாளும் அறிவையே எப்போதும்-நல்லவை எடுத்துரைத்தே படிக்க வைத்தார் சொல்லாத வார்த்தையை செய்கையில் செய்துகாட்டி புரிய வைத்தார் இல்லாமை இல்லையென-திறமை இருப்பதை காட்டி வளர்த்தார் அறிவையும் அன்பையும் வளர்த்து ஆணவம் என்பதை வெறுத்து துணிவையும் தூய்மையும் கொடுத்து-மனதில் துணையாக எப்போதும் இருந்திடுவார் ஆயிரம் வார்த்தையில் அடங்காது ஆணவம் எப்போதும் தோன்றாது அன்னையும் தந்தையுமே எனக்கு-கடவுள் அதற்க்குப் பின்னே மற்றதென்பேன்