Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

நெடுநெடுவென வளர்த்தவள்............

நெடுநெடுவென வளர்த்தவள் நேர்ப் பார்வை இல்லாதவள் சிடுசிடுவென இன்று எரிகிறாள் சினத்துடன் ஏனோத் தவிக்கிறாள் கடுகடுவெனும் காரணம் காணாது கண்ணைக் கசக்கி அழுகிறாள் விடுவிடுவென எதேயோ தேடி வழியை நோக்கியேப் பார்க்கிறாள் தடதடவென வண்டியில் அவன் தலையைக் கண்டதும் மகிழ்கிறாள் குடுகுடுவெனப் பாய்ந்து ஓடி கொஞ்சி அவனை அணைக்கிறாள் கிடுகிடுவென இடியின் சத்தம் கண்டு பயந்ததுபோல் நடிக்கிறாள் சலசலவென மழையைப் பார்த்ததும் சத்தமின்றி முத்தமும் கொடுக்கிறாள் சிடுசிடுவும் எங்கோ மறைந்தது சீக்கிரம் உண்மையும் தெரிந்தது படபடவென இதயம் துடித்ததும் பயமும் அவளுக்குத் தெளிந்தது

தேனாய் சுவையாய் இனிக்குமாம்

முள்ளு முள்ளாய் இருக்குமாம் முக்கனியுள் பெருத்து வளருமாம் வேலிபோட்ட காவல் தாண்டி வேண்டியது இனிப்பாய் மணக்குமாம் வண்ணம் ஒன்றே மஞ்சளாம் வாசனை எப்போதும் கெஞ்சலாம் வண்ணப் போர்வைப் போர்த்தியே வாழும் நாளோ சேர்த்தியாம் எல்லா நாளும் கிடைக்குமாம் எல்லோர் மனதும் விரும்புமாம் இல்லா மக்கள் மனதுமே இதனை சுவைக்க விரும்புமாம் தின்னத் தின்ன திகட்டுமாம் தேனாய் சுவையாய் இனிக்குமாம் திரும்பத் திரும்பக் கேட்குமாம் தேனில் ஊறியே சாப்பிட்டால் தேனமுதாய் மனதும் மகிழுமாம் எல்லை யில்லா மகிழ்ச்சியே எல்லோர் மனதில் இருக்குமாம் பிள்ளைமுதல் கிழவர்வரை கொள்ளைப் பிரியம் விரும்புமாம் ---பெயரென்ன???

சிரித்து மகிழ்ந்தே ஆடுமாம்

வானத்துக்கும் மேகத்துக்கும் சண்டையாம் மின்னலும் மழையும் இருக்குமாம் சூரியனுக்கும் பூமிக்கும் ஏக்கமாம் சந்தோசம் தினமும் வேண்டுமாம் எருவுக்கும் நிலத்துக்கும் கல்யாணமாம் எல்லா பயிருக்கும் உற்சாகமாம் மலருக்கும் தேனிக்கும் இன்பமாம் மகரந்தம் பூக்களின் கொண்டாட்டமாம் பயிருக்கும் பூச்சிக்கும் சண்டையாம் புழுவுக்கும் குருவிக்கும் கும்மாளமாம் பசுமைக் குளிர்ச்சியாய் இருக்குமாம் பார்க்கும் எல்லாமே மகிழ்ச்சியாம் ஆட்டுக்கும் மாட்டுக்கும் உற்சாகமாம் ஆனந்த பாட்டோடு ஊர்கோலமாம் செடிகளுக்கும் கொடிகளும் கூடுமாம் சிரித்து மகிழ்ந்தே ஆடுமாம் இதெல்லாம் காணும் உழவனுக்கு எப்போதும் கிடைக்கும் மகிழ்ச்சியாம் தப்பாக எண்ணாத அன்னாருக்கு இப்போது காணாத வறட்சியாம்

தீண்டத் தகாத மனிதன் யார்

பிணத்தை தின்பவனா இல்லை பெண்மையை அறியாத மனிதனா தினத்தை யறியாத பிறவியா தீண்டத் தகாத மனிதனா உழைப்பே இல்லாமல் ஒதுங்கியே உழைப்பவன் பணத்தை சுரண்டி பகட்டு வாழ்க்கை வாழ்பவனும் பாவத் தொழில் செய்யுபவனும் அடுத்தவன் பிழைப்பை கெடுத்து ஆயுளும் பணம் சேர்க்கும் அற்பப் புத்திக்காரன் அறிந்தே அன்றாடம் காய்ச்சியிடம் சுரண்டுபவன் பதுக்கலை பலவாறு செய்யும் தலுக்கு மேனியை வைத்து தகாத தொழில் செய்யும் இழுக்குப் பிழைப்பை செய்பவன் பிச்சைக் காரனிடமும் பிடுங்கும் எச்சில் பொறுக்கி கயவன் எந்த நிலையிலும் சாதி(தீ)யை எங்கும் சாதியை வளர்ப்பவன் பொய்யே பேசிப் பிறரையும் நம்ப வைக்கும் பூசாரி பாவம் தீர்க்க வருவோரிடம் பணம் கறக்கும் பொய்யாளன் வாழ்கையே வெற்றி டமாய் வாழ முடியாதோ ரிடமும் குழப்பிக் கூலி கேட்கும் கொடியோன் கொள்கை உடையோன் இவ்வாறான இழிநிலை கொண்டவனே அவ்வறுப்பேசி அடுத்தவனை பழிப்பான் அவனைக் கண்டு அஞ்சாமல் அவ்விடமே அடையாளம் காண்பீர்

கொஞ்சிக்கிறேன் நில்லு பொண்ணே

ரவிக்கைத் துணி யுடுத்தி ரத்தக் கலர்ப் பொட்டிட்டு உத்தரவு இல்லாமலே மனசில் உள் நுழைந்த பைங்கிளியே அஞ்சுமுழ மல்லிகைப் பூ ஆடுகிற காது சிமிக்கி பஞ்சுபோல உன்சிரிப்பால் பாடாய் என்னைப் படுத்துறியே திட்டம் போட்ட கெட்டிகாரி திரும்பிப் பார்க்க வைக்கிறியே பட்டம் போட்டு பரிசம்போட பக்குவமாய் நானும் வாறேன் இரட்டை சடை போட்டவளே ராத்திரிய கேடுத்தப் புள்ள கெட்டிக்காரி உன் குறும்பு கட்டி யள்ள தோணுதடி மஞ்சக் கயிறும் தாலியும் மாமன் உனக்கு வாங்கியாறேன் கொஞ்ச நேரம் நின்னுபேசேன் குறையிருந்தா சொல்லிப்போடேன் பஞ்சு மெத்தை தைச்சிருக்கேன் பட்டுத்துணியும் வாங்கிருக்கேன் மஞ்சகொடித் தாலிப் போட்டு கொஞ்சிக்கிறேன் நில்லு பொண்ணே பரிசம் போட நானுவந்தா பதிலைச் சொல்லி அனுப்பாம பாசக்கார மாமன் என்னை-விரட்டி பரிதவிக்க என்னை விட்டுடாதே தொடரும்.....

பொறாமை என்பதே வேண்டாமே

அவனா இப்படி மாறினான் அதையும் எப்படி நம்பினான் குணமே போற்றும் நல்லவன்-குறுகிக் குறைத்தப் பண்பே பொறாமையா ஆண்டுகள் பலநாள் பழகியதை அன்பாய் இருந்து மகிழ்ந்ததை தாண்டிய எல்லை நட்புறவை-எண்ணம் தவறாய் நினைப்பது இதுவன்றோ கொடுத்தப் பணத்தைக் கேட்டவரும் கொள்கை மாறிப் போனவரும் தடித்த வார்த்தைப் பேசியதால்-உடனே தானே வந்தது பொறாமையே அண்ணன் தம்பி உறவுகளும் அக்காள்த் தங்கைப் பிரிவதற்கும் எண்ணம் அதையே மாற்றியே-உறவில் ஏற்றத் தாழ்வை வளர்திடுமே தாத்தாப் பாட்டி உறவுகளை தள்ளி வைக்கும் நிலைமைக்கும் உள்ளக் காரணம் இதுவாகும்-அன்பை எள்ளி நகைக்கும் நிலையாகும் பணியில் சிறந்தோர் பரிதவிக்க பாடாய் படுத்தும் இச்செயலால் தெள்ளத்தெளிவாய் கெடுத்திடுவர்-பின்பு தூய்மை மனதையும் நசித்திடுவர் எளிதில் யாரையும் வசப்படுத்தும் எல்லா வயதினர் துணையாகும் பொல்லா நிலைக்குத் தள்ளிவிடும்-வியாதி பொறாமை என்பதே வேண்டாமே

அற்பனாய் தெரியும் அவரே சிவனார்

அழுக்குத் துணியும் பினுக்கு மணதர் அலையில்லா மனமும் ஆனந்த சிரிப்பர் இழுக்கு சொல்லை எதிர்க்க மாட்டர் எல்லா நாளும் மகிழ்ச்சி உள்ளர் பொற்சுவை அறியார்ப் புலனை மதியார் நற்சுவை நாவில் நாளுமே தெரியார் அற்பனாய் தெரியும் அவரே சிவனார் அந்நிலை நமக்கு அறிந்திட முடியார் பணம் பொருள் இடம் வேண்டார் பகட்டு யோக வாகனம் வேண்டார் குணம் தெரி குடிமை வேண்டார் உணவு தினம் உண்ண வேண்டார் சிரிப்பார் சினங்கொண்டு அடிபார் துடிப்பார் தொல்லையென நடிப்பார் அழமாட்டார் அமுதை தொடமாட்டார் ஆனாலும் நோயின்றி படுக்க மாட்டார் எக்கணம் தவமே செய்பவர் ஞானி என்பதை உணர்ந்த மனிதனே யோகி எங்கும் நிறைந்த எல்லோரின் தோணி என்பவன் சிவனே என்பதை யுணர்நீ சிந்தனை செய்வதை சொல்லத் தெரியா நிந்தனை எந்த நேரமும் மிருந்து பித்தனே என்றும் பைத்திய மென்றும் சித்தனை நீவிர் சொல்லல் முறையா

ரசித்தவர்கள்