Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

இடையில் வந்த சாதியாலே

உயர்ந்த தாழ்ந்த சாதியென்றே உண்ணும் உணவில் இல்லையே உலகில் பேசும் மொழியிலேயும் உயர்ந்து தாழ்வு மில்லையே உழைக்கும் இனம் மட்டுமே உயர்வுத் தாழ்வு பார்க்கிறார்கள் பிழைக்க வழித் தெரிந்திருதும் பேதம் கொண்டு வாழ்கிறார்கள் ஒற்றுமையாய் வாழ்ந்த மக்கள் ஓலமிட்டே தினம்  அழுகிறார்கள் உழைப்பதற்கே தினம் பயந்து ஓடி ஒளிந்து வாழ்கிறார்கள் மறக்க வேண்டா மென்று மக்களையும் சேர்கிறார்கள் மனிதனையும் மிருகமாக்கி மக்களாட்சி கேட்கிறார்கள் இழிந்த நிலையில் வாழ்கையில் இதையும் ஏன்  வளர்க்கிறார்கள் இடையில் வந்த சாதியாலே இனம் பிரிந்து நிற்ககிறார்கள் துயரம் மிகும் வாழ்க்கையில் துணைக்குச் சாதி வேண்டுமா தூய்மையான அன்பும் நட்புடனே தூய வாழ்க்கை வேண்டுமா

பதிவர் கூட்டம் 01.09.2013

Image
பதிவுலகில் கூட்ட மொன்று பழகி சேர்ந்து வளருது பண்புடனே அனைவருமே பாசம் கொண்டு தொடருது  கலை இலக்கியம் நாடகமும் கல்விப் பற்றி விழிப்புணர்வும் உலகமெல்லாம் நடக்கின்ற உயர்ந்த பல விஷயங்களுடன் வலையுலகில் அனைவருமே வாழ்த்துப் பாடி மகிழுது வேறுநாட்டு மக்களுடன் வலையில் சேர விரும்புது வரும் 01.09.2013 அன்று சென்னையிலே இணைய வேண்டி வருக வருக வென்றே வலை யுலகை அழைக்குது அனைவருமே வந்திடவே அழைப்புச் சொல்லி வருவதால் ஆர்வமுடன் கலந்து கொள்ள ஆசை எனக்கும் தூண்டுது வலையுலகில் பவனி வரும் வயதோரும் முதியோரும் வருங்காலச் சரித்திரமாய் வந்திணைந்து சேர்ந்திடுங்கள்

குண்டுக் குழந்தைகள்

Image
             (நன்றி கூகிள்) தாய்பால் மட்டும் போதுமே தவிர எதுவும் வேண்டாமே நோய்கள் அதனால் தீண்டாதே நன்றே வளர்ந்திட உதவுமே அன்னை மனமும் அறிந்திடும் அன்பாய் பண்பாய் வளர்ந்திடும் காண்போர் மனதும் தீண்டிடும் கன்னத்தை கிள்ளிடத் தூண்டிடும் செயற்கை உணவைக் கொடுக்காதீர் சீக்கிரம் வளர்வதைப் பார்க்காதீர் இயற்கையை மாற்றிப் போகாதீர் இன்னல்கள் தேடி ஓடாதீர் அதிக உட்டம் கொடுப்பதனால் அளவில் பெரிதாய் குழந்தைகளும் எளிதில் உருவம் பெரிதாகி எல்லா உறுப்பும் பெருத்திடுமே பார்க்க நமக்கே அழகாகும் பார்த்ததும் தூக்கிட முடியாது படிக்கும் போதே அதனாலே பசங்கள் கேலியும் செய்வாரே இயற்கை உணவை கொடுங்கள் இதமாய் பதமாய் வளருங்கள் எல்லோர் போல மெலிதாக்க ஏற்றப் பயிற்சியை  நாடுங்கள்

நினைத்தேன் சொன்னேன்....

ஒதுங்கி வாழ்வது தவறு ஒற்றுமை காப்பதே சிறப்பு ஒன்றி ணைந்து  சேர்ந்தால் ஒளிமயமாகு முன் வாழ்வு                    ***** சினம் கொள்ள மறந்தால் சிரிப்பை துணைக்கு அழைத்தால் செழிப்பை முகத்தில் காணலாம் சிறப்பாய் உடலைப் பேணலாம்                      ***** வாழ்க்கை என்றப் பாதை வட்டமானது வண்ணம் மிகுந்தது எளிமையும் மனதில் ஏழ்மையானது எப்படியும் வாழலாம் வாழ்ந்திடு                      ***** உள்ளம் சொல்வதைக் கேட்டு உரியவர் மனதை அறிந்து செய்யும் செயலை துணிந்து செய்திடும் காரியம் ஜெயமே                       ******

17.07.2013 அன்று கோவைப் பதிவர்களோடு ......

Image
17.07.2013 அன்று   நான் கோவை ரயிலில் சொந்த வேலையாக கோவைக்கு சென்றிருந்தேன்.என்னை கோவை பதிவர்களின் சார்பாக நண்பர் கோவை ஆவி (ஆனந்த்) அவர்கள் வரவேற்றார். அங்கிருந்து கோவைஆவியும்  நானும்  கோவையின் பிரபலப் பதிவர்களான.திரு.கோவை ஜீவா,உலகதமிழ் சினிமா ரசிகன் ஆகியோரய் சந்தித்தோம்.அங்கு  சென்னையை சேர்ந்த பதிவர்களின் நலன் விசாரித்தார்கள் பிறகு அடுத்த பதிவர் சந்திப்பு நிகழ்வு பற்றி ஆர்வமாய்  கேட்டார்கள் .அடிக்கடி நாங்கள் சந்திப்பதுப் பற்றி சொன்னதும் மகிழ்ந்தார்கள். ஆனால் நான் ரயிலிலேயே மதிய உணவு சாப்பிட்டேன் என்று சொல்லியும் நிச்சயம் எங்களோடும் உணவருந்த வேண்டுமென கட்டாயப்படுத்தி னார்கள் .அதனால் மேலும் நான் சாப்பிட வேண்டிய  சூழ்நிலையில் பரோட்டாவும்  மிளகு கோழி வறுவல் நால்வரும் பேசிக் கொண்டே உணவருந்தினோம். கோவை ஜீவா அவர்கள் எனக்கு பரிமாரியதுடன் கவனமாக அதைப் படங்களும் எடுத்துக் கொண்டார். பேச்சினூடேஉங்க வயது என்ன? என்று நண்பர் ஜீவா அவர்கள் கேள்வி கேட்டு  பின்அவரைவிட மூத்தவன் (நானும் இளைஞன்)என்று புரிந்து கொண்டு  அடுத்த கேள்வியாக எல்லோருமே கேட்க விரும்பும் கேள்வியைக் கேட்க கோவை ஆவி தானாக முன்வந்த

தாய்நாடு அழைக்கின்றது..........

அவசர உலகமோ அதற்குள்ளே அனைத்து உறவையும் கெடுக்கிறதே மிகச்சரியாகப் புரிகிறதே உண்மை மீண்டும் நம்மூர் அழைக்கிறதே எல்லா உறவும் மறக்கிறதே ஏற்றத் தாழ்வும் வருகிறதே என்பதை எண்ணியே மனமே எரிமலையாய் இன்று வெடிக்கிறதே நம்மூரைப் பார்க்க துடிக்கிறதே நல்லதும் கெட்டதும் காண்பதற்கு இல்லமும் தேடி அலைகிறதே இன்பமாய் இதுவே இருக்கிறதே காலடிப் பட்டதும் சிலிர்க்கிறதே கனவுகள் எல்லாம் நிஜமானதே ஊர்விட்டு மறந்து போன  உறவினை மீண்டும் நினைக்கிறதே இத்தனை நாள் மறந்திருந்த இன்பம் மீண்டும் வருகிறதே இங்கேயே நான் தங்கிடவே இன்று மனம் துடிக்கிறதே அப்பாவின் அன்பு மகிழ்கிறதே அம்மாவின் உணவும் ருசிக்கிறதே இப்போதும் உறவுகளை எண்ணி இனித் திரும்ப தருகின்றதே

தினம் தாலாட்டுக் கேட்கும்.....

கொன்றை மலர்க் குலுங்கும் குளமெல்லாம் அல்லி மலரும் கொஞ்ச வேண்டி சூழ்நிலைகள் கொண்டாட்டம் ஏங்கி  நிற்கும் வானமும் மகிழ்ச்சிக் காட்டும் வயலில் நண்டுகள்  ஓடும் மணம் முடிக்கும் மங்கைக்கு மலரும் மகரந்தமும் பிடிக்கும் தலைநிறைய பூச்சூடி துணையோடு தினம் தாலாட்டுக் கேட்கும் தனிமையும் வெறுக்கும்  ஏக்கம் தனியறையில் தானாகப் பேசும் ஆனால்..... ஆடியில் சேர்ந்தாலே ஆபத்தென அன்றே தவறாய் சொல்லி அன்பான தம்பதியைப் பிரித்து ஆருடமாய் சொல்லி வைத்தார்கள் மருத்துவ வசதி இன்றி மறுப்பவர் எவரும் இன்றி வீணான கற்பனையில் அன்று வேதனையாய் பிரித்து விட்டார்கள் மேமாதம் சூரியன் மேகமின்றி மேனியில்  வெயில் படும்போது சான் உடம்பு குழந்தைக்கும் சங்கடங்கள் வந்து சேருமென்றே தோதான சோதிடமும் சொல்லி தொலைவிலே  தள்ளி  வைத்தார்கள் விஞ்ஞான வளர்ச்சியிலே தேவையில்லை விரைவான மருத்துவம் உண்டு சிந்தித்து செயல்படுங்கள்  இன்று சேர்ந்தவரை மகிழ்வாய் விடுங்கள் இன்பத்தில் மகிழ்வோரை இணைத்து இளமையை உணர வாழ்த்துங்கள்

ரசித்தவர்கள்