Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

இரவெல்லாம் மழை துளிகள்

இரவெல்லாம் மழை துளிகள் இமைமூடா சிந்தனைகள் மிதமான குளிர் காற்று மீண்டு வரும் நினைவுகளால் மழைநேர பொழுது என்னை மறந்த நாட்களை நினைக்கிறது பகல் வேளைக் காட்சிகளாய் படம் காட்டிச் செல்கிறதே மகிழ்ச்சியை மறந்து நானும் மழை யழகை ரசிக்கின்றேதே மரம் கொடிச்  செடிகளும்  மலர்ந்து நிற்பதை காண்கிறதே இமைமூடா நொடிப் பொழுதை இன்முகமாய் வேண்டுகிறது தேநீரும் பழரசமும் தேடியே திசை யெங்கும் பார்க்கிறது கனநேர மழை வீழ்ச்சி காதோரம் இனிக்கிறது கண்ண யர்ந்து தூங்கிடவே கட்டளையும் எனக்கு வருகிறது

நண்பர்கள் தினம்

ஊருமில்லை உறவுமில்லை உடன்பிறந்த சொந்தமில்லை பாசமான பந்தமில்லை பிரிந்திடாத நட்பே உண்மை தேவையென வரும் போதும் தேடிவந்து உதவி செய்யும் தோழமையின் தொடர் அன்பை தொடரவுமே  நன்றி சொல்வோம் நாளை முதல் நன்றியினை நண்பருக்கு வாழ்த்து ரைப்போம் நலவனாய் மாற்றிடவும் நாம் நட்பாக தொடர்ந்து செல்வோம் காலை மாலைக்  கைகூப்பி கண்டவுடன் வாழ்த்து சொல்வோம் கன்னியரும் காளையரை கண்டதுமே கைபிடித்து மகிழ்ச்சி செய்வோம் வேலை இந்த வேளையிலே வேதனைகள் மறந்து சிரித்து வேற்றுமையை தள்ளி வைப்போம் வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழ்வோம்

பதிவர்கள் அனைவரும் வருக.

Image
இம்மாநாடு சிறப்பாக நடைபெற தங்களால் முடிந்த பண உதவியை (இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு )விழா ஏற்பாட்டாளர்கள் ஆலோசனையின் பேரில் கீழ்க்கண்ட வங்கி கணக்கில் நன்கொடைகள்  வரவேற்கப்படுகின்றன First Name           : Raja (நம்ம அரசனின் இயற்பெயர்) Last Name           : Sekar Display Name      : RAJA. S Account Number : 30694397853 Branch Code        : 006850 CIF No.                : 85462623959 IFS Code             : SBIN0006850 MICR Code         : 600002047 Branch                 : SBI Saligramam Branch  Address               : 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093 Contact                : 044- 24849775 பணம் செலுத்துவதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொடர்புக்கு:  அரசன்(ராஜா)  -                                                   கைபேசி எண் - 9952967645 --கவியாழி--

குடும்பம் சிறக்கச் செய்வீர்

மனமே மனிதனின் எதிரி மாற்றமே அவனின் நண்பன் தினமும் நல்லதை செய்தால் திடமாய்  மாறும் மனிதமே கெடுதல் செய்யா மனதே கொடுக்கும் நன்மை நன்றே அடுத்தவர் மனதை  வருத்தி ஆறுதல் சொல்ல வேண்டாமே துணையாய் நல்ல வார்த்தை துயரம் போக்க இயலும் துணிவு என்று நினைத்து துச்சம் கொள்ள வேண்டாமே பழிகள் செய்யா வாழ்வும் பழுதாய் போனதும் இல்லை பயந்தும் வாழ்வோர்  என்றும் பெருமை பேசிய தில்லையே கொடுத்தும் உதவி செய்து கோழை யாகக  வேண்டாமே கொள்கை நன்றே வகுத்து குடும்பம் சிறக்கச் செய்வீரே

ஏழையுமே ஏழையாய் ......

ஏழையுமே ஏழையாய்  இல்லை ஏளனமாய் சொல்ல வில்லை எழுச்சியாக  வளர்வ தில்லை ஏற்றமிகு  வாழ்க்கை யில்லை குற்றமுடன்  சொல்ல வில்லை கொள்கையிலே மாற்ற மில்லை கூடி வாழும் வாழ்கையினை கெடுத்ததாக வாழ்வ தில்லை கோழைகளாய் இருந்ததில்லை கொடுத்தவரை மறப்ப தில்லை கொடுப்பதிலே குறையுமில்லை கொடுத்தவரைக் குறைத்ததில்லை போதுமென்ற மனதே எல்லை போட்டிப் போடுவது மில்லை பொக்கிஷமாய் நல்லுறவை பேணிக்காக்க தவற வில்லை நாளைக்கான தேவையினை நாள்தோறும் நினைப்ப தில்லை நன்மையென அறிய வில்லை நாட்டுநடப்பு  தெரிவ தில்லை வேலையுமே  நாளும்  மில்லை வீட்டில் மட்டும் பஞ்சமில்லை விருந்தினரும் வந்து விட்டால் விருந்தளிக்க மறுப்ப தில்லை பேழையாக நட்பதுவை  அவன் பிரிந்து நின்று பார்த்த தில்லை பெற்றவரை விடுவ தில்லை பேணிக்காக்க தவற வில்லை

புலவர் அய்யாவின் வருகை

Image
 மதிப்பிற்குரிய புலவர் ராமநுசம் அய்யா. ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா முடித்து இன்று 18.08.2013 காலை 8.30  மணிக்கு புலவர்.அய்யா மகிழ்ச்சியுடன் வீடுதிரும்பி விட்டார்  மகிழ்ச்சியை  என்னோடு பகிர்ந்து உற்சாகத்துடன் இருக்கிறார்  என்பதையும்   தெரிவித்துக் கொள்கிறேன். அய்யாவின் பிரத்யோகப்படங்கள் மற்றும் பதிவுகள் இனித்  தொடந்து அய்யாவின் தளத்தில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

நேற்று -இன்று வாழ்க்கை

 கடந்த கால வாழ்க்கைமுறை ஈரெட்டில் கல்லா கல்வி. பதினாறு வயதுக்குள் கல்வியின் அவசியத்தைப் புரிந்து  படிக்கவேண்டும் மூவெட்டில் ஆகாத்திருமணம் இருபத்திநாலு வயதிற்குள் திருமணம் செய்யவேண்டும் அல்லது அதைப்பற்றி முயற்சியும் வேண்டும் .இதற்குள்  செய்யும் திருமணம் இனிமையை  தரும் என்பதே சிறப்பு. நாலெட்டில் பெறாப்பிள்ளை முப்பத்திரெண்டு வயதிற்குள் பிள்ளைப்பேறு அடைந்திருக்க வேண்டும்  அல்லது தகுதியை நிருபிக்க வேண்டும்.அதற்குமேல் பெற்ற பிள்ளைக்கும் பெற்றோருக்கும் புரிதல் இருக்காது . ஐயெட்டில் சேராச் செல்வம் நாற்பது வயதிற்குள் தனியாக பணம் சேர்த்து வீட்டையும் கட்டி செல்வத்தையும் தேடி வைத்து விடவேண்டும். இதை பெரியோர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன் ஆனால்.... இன்றைய வாழ்க்கை முறை 1-5       குழந்தைப் பருவம் மகிழ்ச்சியானது மகிழ்வார்கள் 5-25     படிப்பு படிப்பு வேறெதுவும்  முடியாது 25-35   வேலை கிடைத்தல்,திருமணம், உழைப்பு,சொத்து சேர்த்தல்  35-40   சேமிப்பு  ,மனக்குழப்பம் 40-60 பிள்ளைகளின் வாழ்க்கைப் பற்றிய  நிம்மதியில்லாத நிலை இறுதிவரை அவர்களின் நல்வாழ்வு குறித்த

ரசித்தவர்கள்