இரவெல்லாம் மழை துளிகள்
இரவெல்லாம் மழை துளிகள் இமைமூடா சிந்தனைகள் மிதமான குளிர் காற்று மீண்டு வரும் நினைவுகளால் மழைநேர பொழுது என்னை மறந்த நாட்களை நினைக்கிறது பகல் வேளைக் காட்சிகளாய் படம் காட்டிச் செல்கிறதே மகிழ்ச்சியை மறந்து நானும் மழை யழகை ரசிக்கின்றேதே மரம் கொடிச் செடிகளும் மலர்ந்து நிற்பதை காண்கிறதே இமைமூடா நொடிப் பொழுதை இன்முகமாய் வேண்டுகிறது தேநீரும் பழரசமும் தேடியே திசை யெங்கும் பார்க்கிறது கனநேர மழை வீழ்ச்சி காதோரம் இனிக்கிறது கண்ண யர்ந்து தூங்கிடவே கட்டளையும் எனக்கு வருகிறது