சலூன்கடையும் சாமியின் மடமும்
சிறுவயதில் முடிவெட்ட சலூன் கடைக்கு அனுப்ப மாட்டார்கள் .காரணம் அங்கு அறைமுழுதும் கண்ணாடி சீருடை அணிந்தவர் அதிக கட்டணம் வசூலிப்பார்கள் சுகாதாரம் என்ற பேரில் சுழலும் சக்கர நாற்காலி தினசரிப் பத்திரிகை வெளிநாட்டு முகப்பூச்சு கலர்கலரான பாட்டில்களில் தண்ணீர்த் தெளிப்பான் மற்றும் வானொலிப்பெட்டி என்று மட்டுமே இருந்தது. இன்றைய நாட்களில் பெரும்பாலான நகரங்களில் சுகாதாரம் சுத்தம் வேண்டி பொதுமக்கள் வந்து செல்லுமிடங்களில் குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ளது .குஷன் மெத்தைகள் அழகிய வேலைப்பாடுகள் ,நறுமணம் வீசிக்கொண்டே நாளும் இருக்கும் வசதி போன்றவற்றுடன் கண்கவர் வண்ண விளக்குகள் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் உள்ளது. ஆனாலும் மக்கள் சாதாரணக் கடைகளுக்கே செல்லுகிறார்கள் அன்று வெறுத்த இடமே இன்று அவசியம் தேவையெனப் பட்டது.இப்போதெல்லாம் எல்லோரும் விரும்புவதேக் காரணம்.காசு கொஞ்சம் கூட இருந்தாலும் பரவாயில்லையென அவ்வாறான சலூன் கடைக்கே செல்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அங்கு எப்போதும்போல் கூட்டத்திற்கு குறைச்சலில்லாமல் இருக்கும் சொந்தகதைகள் ஊர்க்கதைகள் எப