Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

அவளுக்கு இப்படி செய்வது ஆனந்தமா?கோபமா ?

ராத்திரி நேரத்திலே குளிருது ரகசிய ஆசையும் தொடருது போர்த்திக்கத் தோணுது தேடுது போர்வைய பார்த்ததும் தோணுது தனிமையை இப்போ வெறுக்குது தலைவியைத் துணைக்கு அழைக்குது இளமைக்குத் தேவையும் கிடைக்குது இனிமையும் சிணுங்குது தொடங்குது இதழ்களை வருடிட விரும்புது இருவிரல் விலக்கிடத் துடிக்குது இன்னும் அதிகமாய் இருக்குது இமைகளும் ரகசியம் சொல்லுது அணைத்திட்ட இடைவெளி குறையுது ஆசையும் தொடர்ந்திடச் சொல்லுது அவளுக்கு இப்படிச் செய்வது ஆனந்தக் கோபமாய்த் தோணுது அடுத்ததை மகிழ்ச்சியாய் முடித்ததும் ஆசையும் அடங்குது முடிந்தது வாழ்கையில் இன்பமாய் இருப்பது வளமாய்ச் சேர்த்திடும் மகிழ்வன்றோ

மகிழ்வாய்ப் பாராட்டுங்கள்

           எப்போதும் எல்லோரையுமே மகிழ்வாய் பாராட்டுங்கள் அப்போதுதான் அவர்களின் செயல் அங்கிகரிக்கப்படுகிறதுப் பின்பே அவர்களுக்கு ஆனந்தம் கிடைக்கிறது.அதனால் செய்த செயலைச்  சீர்தூக்கிச் சிறப்பாய் செய்தோமா இல்லை  இதைவிட இன்னும் சிறப்புறச் செய்யலாமா என்ற சுயப்பரிசோதனைச் செய்ய வாய்ப்புக் கிடைக்கும்.              சிறுபிள்ளைகளும் சரி,மாணவர்களும் ,நம்முடன் வேலைசெய்யும் சக ஊழியர்களும் .பழகும் நண்பர்களும் அல்லது வயதில் மூத்தப் பெரியவர்களும் சரி இம்மாதிரியான அங்கிகாரத்தை எதிர்பார்பார்கள் அல்லது செய்த செயல் அவர்களை எப்படி மகிழ்வித்தது என்று நினைத்து  பாராட்டியதை எண்ணி மகிழ்வார்கள்.            ஒருவர் தான் செய்யும் செயலில்விருப்பப்பட்டோ  மனம் ஒன்றியோ அல்லது செய்யவேண்டிய கட்டாயத்திலோ செய்யும்போது பாரட்டுக் கிடைக்குமேயானால் அதைவிட ஆனந்தம் இருக்காது.ஒவொரு செயலுக்கும் ஒவ்வொருமுறையும் பாராட்டுக்கிடைக்கும்போது நிச்சயம் மனம் மீண்டும் மீண்டும் செய்யும் உத்வேகத்தைத்தரும்.           உதாரணமாய் ஒரு அவசர அவசியமான வேலைக்காக வெளியூர் சென்று வரவேண்டும் என்ற கட்டாயம் வருகிறது விருப்பப்பட்டோ அல்லது கட்டாயத்தின்

கருவைச் சுமந்தவள்

கருவைச் சுமக்கச் சொல்லி கடனாய்த் தந்தவன் ஒருவன் கருவே உருவாகி வளர்த்தும் கடமை என்றே கொடுத்தால் உடமைப் பொருளும் பிடுங்கி உணவாய்த்  தின்பவள் ஒருத்தி உரிமை  கொண்டாடி மகிழ உடலைத்  தந்த அவனும் உயிரைக் கொடுத்தும் மயங்கி உற்றார் மறுத்த பிள்ளை பெற்றோர் கடமை மறந்து போதையில் வாழ்தல் முறையா இதனை எல்லா மதங்களும் இழித்தே கூறி வந்தாலும் எப்படி மகிழ்ந்து வாழ்வாய் ஏனோ மறந்தாய் இகழ்வாய் மனிதன் மட்டும் இதனை மறந்தே வாழச் சொல்லும் கடமை துறக்கச் சொன்ன கடவுள் உண்டா மகனே ...............கவியாழி..........

கடந்தும் செல்வது நலமோ.............

எத்தனைப் பெரிய மனிதர்கள் எப்படி எளிமையாய் இருந்தே சத்தியம் தவறா வழியில் சமத்துவம் போற்றி  வாழ்ந்தே நித்தமும் மகிழ்வாய்  உணர்ந்த நேர்வழி நெறிமுறை வளர்த்தே சித்தமும் சிவனுமாய்ப் போற்றிச் சீராய்த் திருத்திச்.சொல்லி குற்றமும்  தவிர்க்க வேண்டிக் குறைகளைக் கண்டு களைந்தே அப்பனும் பாட்டனின் வழியில் அன்று வாழ்ந்ததைச் சொல்லி சிற்பமாய் அறிவால் செதுக்கிச் சீராக்கி நேர்வழியில் வாழ அற்பமாய்ச் செய்யும் தவறும் அறியச் சொல்லிக் கொடுத்தே தப்பேதும் இல்லா வாழ்வை தினமும் சொல்லி வந்தே முப்போதும் மகிழ்ந்து வாழ முறையாய் சொல்லி வாழ்த்தினர் இப்போது நிலைமை இல்லை இருப்பதோ நிலைமை  தலைகீழ் தப்பதை உணர்ந்து வருந்தி தகையோரை மதிப்போர் உளரோ கற்பதை முறையாய் சொல்லாக் கல்வியால் வந்த வினையோ காலத்தை உணர்ந்தே நாமும் கடந்தும் செல்வது நலமோ

கார்த்திகைக் குளிரில் காதல் .......

கார்த்திகைக் குளிரில் காதல் கண்ணனின் அருகில் மகிழ்வாய் காரிகைக் கூட்டமும் இணைந்தே காத்திடும் காரணம் ஏனோ பலரும் சூடாய் இருக்க பருவம் மாறிய மழையும் பாவையர் மனதும் இனிக்க பயனாய் இருப்பதும்  தவறா பூத்திடும் பூக்கள் கூட பூவையர் தலையில் சூடி புரியும் லீலைகள் காண புகலிடம் தேடி வருமாம் பூச்சிகள் ஒன்றாய் கூடியே பூத்திட்ட மலர்களைக் கண்டு போட்டிகள் நடத்திட வேண்டி புதிதாய் ஸ்வரங்கள் தருமாம் பூத்த  மலர்களைத் தேடி புறப்பட்ட வண்டினைப் போல புயலாய்க் கண்ணன் வந்தே புதுமை அனுபவம் தருவான் விலங்குகள் ஒன்றாய் அமர்ந்து வேடிக்கை பார்த்தே சிரித்தே வீதியில் ஆடி இன்பமாய் விரும்பியே மகிழ்வாய்  இருக்கும் இரவில் இன்றி பகலிலும் இனிமை விரும்பும் இனங்கள் இமையால் பேசும் கண்ணன் இனிமை தருமே கார்த்திகை [[[[[[[[ கவியாழி]]]]]]]]

சித்தன் அருளே வேண்டும்.........

சித்தன் அருளே வேண்டும்-தினம் சிந்தனை செய்யவே வேண்டும் நித்தமும் நினைக்க வேண்டும்-மனதில் நிம்மதி கிடைத்திட வேண்டும் சத்தியம் போற்றிட வேண்டும் -நல்ல சங்கதி செய்திட வேண்டும் பத்தியம் இருந்திட வேண்டும்-எனக்கு பகலவன் துணையும் வேண்டும் நேர்மையாய் வாழ்ந்திட வேண்டும் -அன்பை நேசித்தே போற்றிட வேண்டும் சீர்மிகு நட்பும் வேண்டும் -என்னை சிரம்போல் காத்திடவேண்டும் கஷ்டமும் தீர்ந்திட வேண்டும் -எல்லோர் கவலையும் தீர்த்திட வேண்டும் இஷ்டமாய்ச் சிவனை நினைக்கும் -நிலை இனிதே நாளும் வேண்டும் எல்லா  வளமும் பெற்று -வறுமை இல்லா நிலையே வேண்டும் பொல்லா எதிரியும் மாறி -மீண்டும் நட்பினைத் தொடர்ந்திட வேண்டும் கொடுத்து உதவி செய்ய-பணம் குறையே இன்றி வேண்டும் கொடுக்கும் மனமே எனக்கு-நாளும் குறை வில்லாமல் வேண்டும் குறைகள் அகன்றே தீர-மனம் குளிர வணங்கிட வேண்டும் குடும்பம்  மகிழ்ந்து வாழ-சித்தன் கூடவே துணையாய் வேண்டும் ########கவியாழி########

ஷேர் ஆட்டோ பயணம்......ஆபத்தா?ஆதாயமா?

இன்றைய விஞ்ஞான காலத்திலும் பலபேர் தங்களது கார்,பைக் போன்ற சொந்த வாகனங்கள் இருந்தாலும் பஸ்,ரயில் போன்ற போக்குவரத்து வசதி மிகுந்து காணப்பட்டாலும்  ஷேர் ஆட்டோவை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்றே சொல்லலாம். ஷேர் ஆட்டோ கிராமத்திலும் சரி  நகரத்திலும் சரி  இதன் பயன்பாடு அவசியமான ஒன்றாய் விளங்குகிறது.பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள், அலுவலகம் செல்பவர்கள் காய்கறி சந்தைக்கும் செல்பவர்கள் ,கூலித் தொழில் செய்வோர்கள் ,மருத்துவமனைக்கும் செல்பவர்கள் போன்ற எல்லோரும் விரும்பும் அவசியம்  இந்தவாகனத்தைப் பயன்படுத்த தவறுவதில்லை. இது பணத்தை மிச்சப்படுத்தவும் விரும்பிய இடத்தில் இறங்கவும் பயமின்றி அதிக மக்களுடன் செல்லவும் வசதியாய் இருக்கிறது..பஸ் வசதி இல்லாத இடங்களிலும்,நேரத்தை மிச்சப்படுத்தவும் மற்ற ஆட்டோக்களின் அதிக கட்டண வசூலைத் தவிர்க்கவும் இதன் பயன்பாடு மெச்சத்தகுந்த வகையில் உள்ளது. கிராமங்களில் எல்லோருமே உபயோகப்படுத்துகின்றனர் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக பயணிகளை ஏற்றுவதால்  பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.நெரிசல் அதிகமாகி இடவசதி குறைவாகவே இருக்கும் .ஆண்பெண் பாகுபாடின்றி இடந

ரசித்தவர்கள்